Tamil Bayan Points

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on May 13, 2019 by Trichy Farook

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار –مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் குகையில் நுழைந்த உடன் ஒரு சிலந்தி வந்து குகையில் வலை பின்னியது.

நூல் : மிஅது ஹதீஸ்

وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا –أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش

(அபூஜஹில், உமர் ஆகிய) இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.

நூல் : அஸ்னல் மதாலிப்

حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا –المصنوع في معرفة الحديث الموضوع

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது.

நூல் : அல் மஸ்னூவு

وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل –المصنوع في معرفة الحديث الموضوع

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை.

நூல் : அல் மஸ்னூவு

حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء –الؤلؤ المرصوع للقاوقجي

ஹிழ்ர், இல்யாஸ் ஆகிய இருவரும் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை.

நூல் : அல்லூலுவுல் மர்சூவு

حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت  –الفوائد المجموعة للشوكاني

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات —  الفوائد المجموعة للشوكاني

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை.

நூல் : அல்பஃவாயிதுல் மஜ்மூஆ

ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت –المنار المنيف

எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது போன்ற செய்திகள் யாவும் கட்டுக்கதை.

நூல் : அல்மனாருல் முனீஃப்

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!

إذا صدقت المحبة سقطت شروط الأدب –كشف الخفاء

அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.

நூல் : கஷ்புல் கஃபா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث: أمر بتصغير اللقمة في الكل، وتدقيق المضغ، قال النووي لا يصح –المقاصد الحسنة

சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث البخيل عدو الله ولو كان عابدا لا أصل له — المصنوع في معرفة الحديث الموضوع

கஞ்சன் வணக்கசாலியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பகைவன் ஆவான்.

நூல் :அல்மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث فكرة ساعة خير من عبادة ستين سنة –الفوائد المجموعة للشوكاني

 சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.

நூல் : அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حب الوطن من الإيمان، لم أقف عليه –المقاصد الحسنة

நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث: الفقر فخري وبه أفتخر، قال شيخنا هو باطل موضوع –المقاصد الحسنة

வறுமை எனக்குப் பெருமை.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث ريق المؤمن شفاء ليس بحديث –أسنى المطالب

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

اخلعوا نعالكم عند الطعام فإنه سنة جميلة قال الذهبي فيه متروكان وإسناده مظلم –أسنى المطالب

சாப்பிடும்போது செருப்பைக் கழற்றிவிடுங்கள். அது அழகிய நபிவழியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

ي اللآلئ «يَا عَلِيُّ عَلَيْكَ بِالْمِلْحِ فَإِنَّهُ شِفَاءٌ مِنْ سَبْعِينَ دَاءً الْجُذَامَ والبرص وَالْجُنُون» لَا يَصح فِيهِ عبد الله بن أَحْمد بن عَامر وَهُوَ وَأَبوهُ يرويان عَن أهل الْبَيْت نُسْخَة كلهَا بَاطِلَة –تذكرة الموضوعات للفتني

உப்பு பைத்தியம், குஸ்டம் உள்ளிட்ட எழுபது நோய்களுக்கு நிவாரணமாகும்

நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

اللآلئ «الأَكْلُ فِي السُّوقِ دَنَاءَةٌ» لَا يَصح قَالَ الْعقيلِيّ لَا يَصح فِي هَذَا الْبَاب شَيْء — تذكرة الموضوعات للفتني

கடைத் தெருவில் சாப்பிடுவது அநாகரிகமாகும்.

நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

الكلام على المائدة، لا أعلم فيه شيئاً نفياً ولا إثباتاً –المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهرة على الألسنة

உண்ணும் போது பேசக் கூடாது.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

كل ممنوع حلولا يعرف بهذا وفي معناه – إن ابن آدم لحريص على ما منع — الجد الحثيث في بيان ما ليس بحديث للعامري

தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.

நூல் : அல்ஜித்துல் ஹஸீஸ்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث من جهل شيئا عاداه ليس بحديث — أسنى المطالب

ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

خبر من حفر لأخيه قليبا وقع فيه قال السخاوي لم أجد له أصلا — أسنى المطالب

அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث لا أدري نصف العلم — أسنى المطالب

 தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث حسنات الأبرار سيئات المقربين من كلام الصوفية — الؤلؤ المرصوع للقاوقجي

நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.

நூல் : அல்லூலுவுல் மர்சூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث ريق المؤمن شفاء وكذا سؤر المؤمن شفاء ليس له أصل مرفوع –المصنوع

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

நூல் : அல்மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث حبذا السواك يزيد الرجل فصاحة قال الصغاني وضعه ظاهر —الفوائد المجموعة للشوكاني

பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.

நூல் : அல்பவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث إنها تنزل الرحمة عند ذكر الصالحين قال العراقي وابن حجر لا أصل له — الفوائد المجموعة للشوكاني

நல்லடியார்களைப் பற்றிப் பேசும் போது அங்கே அருள் இறங்கும்.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

71 – حَدِيثُ إِنَّ الْوَرْدَ خُلِقَ مِنْ عَرَقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ عَرَقِ الْبُرَاقِ قَالَ النَّوَوِيُّ لَا يَصِحُّ وَقَالَ الْعَسْقَلانِيُّ وَغَيْرُهُ مَوْضُوعٌ –المصنوع في معرفة الحديث الموضوع

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வியர்வையில் இருந்து ரோஜா படைக்கப்பட்டது.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ حَسَنَاتُ الأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِينَ –المصنوع في معرفة الحديث الموضوع

நல்லவர்களிடம் நல்லவையாகக் கருதப்படுபவை இறையச்சமுடையவர்களுக்கு கெட்டதாகத் தெரியும்.

நூல்: அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ السَّلامَةُ فِي الْعُزْلَةِ لَيْسَ بِحَدِيث  –المصنوع في معرفة الحديث الموضوع

தனிமையில் தான் (ஈமானுக்கு) பாதுகாப்பு

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ عِنْدَ ذِكْرِ الصَّالِحِينَ تَنْزِلُ الرَّحْمَةُ –المصنوع في معرفة الحديث الموضوع

நல்லோரை நினைவு கூறும்போது ரஹ்மத் எனும் அருள் இறங்குகிறது.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْلاكَ لَمَا خَلَقْتُ الأَفْلاكَ قَالَ الصَّغَانِيُّ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع

முஹம்மதே நீர் இல்லாவிட்டால் அகிலத்தை நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூரினானாம்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيث مَا بديء بِشَيْءٍ يَوْمَ الأَرْبَعَاءِ إِلا تَمَّ قَالَ السَّخَاوِيُّ لَمْ أَقِفْ لَهُ عَلَى أَصْلٍ — المصنوع في معرفة الحديث الموضوع

புதன் கிழமை ஆரம்பித்த எந்தக் காரியமானாலும் நிறைவடையாமல் போகாது.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَسْحُ الْعَيْنَيْنِ بِبَاطِنِ أُنْمُلَتَيِ الْمُسَبِّحَتَيْنِ بَعْدَ تَقْبِيلِها عِنْدَ سَمَاعِ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَعَ قَوْلِهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا لَا يَصِحُّ رَفْعُهُ عَلَى مَا قَالَ السَّخَاوِيُّ –المصنوع في معرفة الحديث الموضوع

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் எனக் கூறும் போது ஆட்காட்டி விரலை முத்தமிட்டு அதைக் கண்களில் ஒற்றிக் கொள்வது பற்றிய ஹதீஸ்

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع

தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்

நூல்: அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَا مِنْ جمَاعَة اجْتمعت إِلَّا وَفِيهِمْ ولي لله لَا هُمْ يَدْرُونَ وَلا هُوَ يَدْرِي بِنَفْسِهِ لَا أَصْلَ لَهُ — المصنوع في معرفة الحديث الموضوع

எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ الْمَرِيضُ أَنِينُهُ تَسْبِيحٌ وَصِيَاحُهُ — المصنوع في معرفة الحديث الموضوع

நோயாளி புலம்புவதும், சப்தமிடுவதும் தஸ்பீஹ் ஆகும்.

நூல் : அல் மஸ்னூவு

373 – حَدِيثُ مُوتُوا قَبْلَ أَنْ تَمُوتُوا قَالَ الْعَسْقَلانِيُّ إِنَّهُ غَيْرُ ثَابِتٍ — المصنوع في معرفة الحديث الموضوع

சாவதற்கு முன் செத்து விடுங்கள்.

நூல் : அல் மஸ்னூவு

அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.

இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.