
கேள்வி : ஜகரிய்யா நபிக்கு குழந்தை பிறக்கும் என்பதற்கு அல்லாஹ் கூறிய அடையாளம் என்ன? பதில் : قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا 10. “என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். “குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 19:10)➚