Author: Trichy Farook

153) ஜகரிய்யா நபிக்கு குழந்தை பிறக்கும் என்பதற்கு அல்லாஹ் கூறிய அடையாளம்?

கேள்வி : ஜகரிய்யா நபிக்கு குழந்தை பிறக்கும் என்பதற்கு அல்லாஹ் கூறிய அடையாளம் என்ன? பதில் :  قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً‌  ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا‏ 10. “என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். “குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 19:10)➚

152) துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?

கேள்வி : துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? பதில் : وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏ 83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்” என்று கூறுவீராக! اِنَّا مَكَّنَّا لَهٗ فِى الْاَرْضِ وَاٰتَيْنٰهُ مِنْ كُلِّ شَىْءٍ سَبَبًا ۙ‏ 84. அவருக்குப் பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வாய்ப்பளித்தோம். ஒவ்வொரு […]

151) மூஸாவுக்கும் ஹிள்ர்ருக்கும் இடையே நடந்த நிகழ்வு என்ன?

கேள்வி : மூஸாவுக்கும் ஹிள்ர்ருக்கும் இடையே நடந்த நிகழ்வு என்ன? பதில் :  فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا‏ 65. (அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். قَالَ لَهٗ مُوْسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا‏ 66. “உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் […]

150) நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்?

கேவ்வி : நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்? பதில் :  وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ ۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِـيُدْحِضُوْا بِهِ الْحَـقَّ‌ وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا‏ 56. நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவுமே தூதர்களை அனுப்பினோம். பொய்யால் உண்மையை அழிப்பதற்காக பொய்யைக் கொண்டு (ஏகஇறைவனை) மறுப்போர் தர்க்கம் செய்கின்றனர். எனது வசனங்களையும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதையும் கேலியாகக் கருதுகின்றனர். (அல்குர்ஆன்: 18:56)➚

149) குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள்?

கேள்வி : குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள்? பதில் :  وَلَبِثُوْا فِىْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا‏ 25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا‌ ۚ لَهٗ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ “அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507 பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. (அல்குர்ஆன்: 18:25-26)➚

148) வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தம் அல்லாஹ்வை துதிக்கின்றனவா?

கேள்வி : வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தம் அல்லாஹ்வை துதிக்கின்றனவா? பதில் :  تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏  ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன். […]

147) இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்?

கேள்வி : இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்? பதில் :    اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏   இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.   شَاكِرًا لِّاَنْعُمِهِ‌ؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏   அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவரை அவன் தேர்வு செய்தான். நேரான […]

146) குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்? பதில் :  فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏ 98. குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! (அல்குர்ஆன்: 16:98)➚

145) தேனீயின் வயிற்றில் உள்ள பானமும் அதன் மகிமையும் என்ன?

கேள்வி : தேனீயின் வயிற்றில் உள்ள பானமும் அதன் மகிமையும் என்ன? பதில் :  يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. (அல்குர்ஆன்: 16:69)➚

144) தேனீக்கள் எங்கே தமக்கென வீடுகளை கட்டுகின்றன?

கேள்வி : தேனீக்கள் எங்கே தமக்கென வீடுகளை கட்டுகின்றன? பதில் :  ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ 69. “மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்.  (அல்குர்ஆன்: 16:69)➚

143) ஸாலிஹ் நபியின் சமுதாயம் எந்த நேரத்தில் அழிக்கப்பட்டார்கள்?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் எந்த  நேரத்தில் அழித்தான்? பதில் :  அதிகாலை நேரத்தில்  ஆதாரம் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏ அவர்கள் வெளிச்சத்தை அடைந்தபோது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது. (அல்குர்ஆன்: 15:73)➚

142) லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்?

கேள்வி : லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்? பதில் :  பொழுது உதிக்கும் நேரத்தில்  ஆதாரம் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏ அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. (அல்குர்ஆன்: 15:73)➚

141) லூத் நபிக்கு வானவர்கள் சொன்ன கட்டளைகள் என்ன?

கேள்வி :  லூத் நபிக்கு வானவர்கள் சொன்ன கட்டளைகள் என்ன? பதில் :  فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ‏ இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!” என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 15:65)➚

140) நரகத்தின் எத்தனை வாசல்கள் உள்ளன?

கேள்வி : நரகத்தின் எத்தனை வாசல்கள் உள்ளன? பதில் :  لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ‏ அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.  (அல்குர்ஆன்: 15:44)➚

139) மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்?

கேள்வி : மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்? பதில் :  وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏   கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து – மனிதனைப் படைத்தோம்.  وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏ கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். (அல்குர்ஆன்: 15:26-27)➚

138)மனைவி மற்றும் மகனை பாலைவனத்தில் விட்டுவிட்டு இப்ரஹீம் நபி கேட்ட பிரார்த்தனை?

கேள்வி :  மனைவி ஹாஜரையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு இப்ரஹீம் நபி கேட்ட பிரார்த்தனை என்ன? பதில் :  35. “இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!  36. இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை […]

137) நல்ல கொள்கைக்கும், தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம்?

கேள்வி : நல்ல கொள்கைக்கும் தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம் என்ன? பதில் :  24. நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. 25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். 26. தீய கொள்கைக்கு உதாரணம் […]

136) இறைமறுப்பாளர்கள் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி உண்டா?

கேள்வி : இறைமறுப்பாளர்கள் இவ்வுலகில் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி கிடைக்குமா? பதில் :  18. தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். (அல்குர்ஆன்: 14:18)➚

135) சுவனத்தின் தன்மை என்ன?

கேள்வி :  சுவனத்தின் தன்மை என்ன? பதல் :  35. (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே. (அல்குர்ஆன்: 13:35)➚

134) உள்ளம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்?

கேள்வி :  உள்ளம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்? பதில் :  28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)➚

133) யூசுப் நபியின் சட்டையினால் ஏற்பட்ட அதிசயம் என்ன?

கேள்வி : யூசுப் நபியின் சட்டையினால் ஏற்பட்ட அதிசயம் என்ன? பதில் :  93. “எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்) 94. “ஒட்டகக் கூட்டம் புறப்பட்டபோது “நான் யூஸுஃபுடைய வாசனையை உணர்கிறேன். நீங்கள் என்னைப் பழிக்காதிருக்க வேண்டுமே” என்று அவர்களின் தந்தை கூறினார். 95. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் உமது பழைய தவறான […]

132) யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போனது?

கேள்வி : யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போது நடந்த நிகழ்வு என்ன? பதில் :  70. அவர்களை, அவர்களது சரக்குகளுடன் தயார்படுத்தியபோது அளவுப் பாத்திரத்தைத் தமது சகோதரனின் சுமையில் வைத்தார். பின்னர் “ஒட்டகக் கூட்டத்தாரே! நீங்கள் திருடர்கள்” என்று அறிவிப்பாளர் அறிவித்தார். 71. இவர்களை நோக்கி வந்த அவர்கள் “எதைத் தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்டனர். 72. “மன்னருக்குரிய அளவுப் பாத்திரத்தை நாங்கள் காணவில்லை. அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகச் […]

131) யூசுப் நபி தவறு செய்யவில்லை என்பது எப்போது தெரிய வந்தது?

கேள்வி : யூசுப் நபி தவறு செய்யவில்லை என்பது எப்போது தெரிய வந்தது? பதில் :  51. “யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்றபோது உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் “அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லை” என்றனர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்” என்று அமைச்சரின் மனைவி கூறினார். (அல்குர்ஆன்: 12:50)➚

130) மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்?

கேள்வி : மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்? பதில் :  (இதைக் கேட்ட) மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்” என்றார். (அல்குர்ஆன்: 12:50)➚

129) அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன?

கேள்வி : அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன? பதில் :  47. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றை உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்! 48. இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலவற்றைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும். 49. “இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ […]

128) யூசுப் நபியின் அரசர் கண்ட கணவு என்ன?

கேள்வி :  யூசுப் நபியின் அரசர் கண்ட கணவு என்ன?  பதில் :  43. “கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!” என்று மன்னர் கூறினார். (அல்குர்ஆன்: 12:43)➚

127) யூசுப் நபியின் முன்னோர்கள் யார் யார்?

கேள்வி :  யூசுப் நபியின் முன்னோர்கள் யார் யார்? பதில் :  38. “என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும், மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள். எனினும் அதிகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.” (அல்குர்ஆன்: 12:38)➚

126)சிறைத்தோழர்களுக்கு யூசுப் நபி கூறிய விளக்கம் என்ன?

கேள்வி : யூசுப் நபியுடன் சிறையில் இருத்த இருவருக்கும் யூசுப் நபி சொன்ன கனவிற்கு விளக்கம் என்ன? பதில் :   “என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது” (என்றார்.) (அல்குர்ஆன்: 12:41)➚

125) யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா?

கேள்வி : யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா? பதில் :  (அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது. (அல்குர்ஆன்: 12:35)➚

124) யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன?

கேள்வி : பெண்களின் சூழ்ச்சியை கேள்விப்பட்ட அமைச்சரின் மனைவி என்ன செய்தால்? யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன? பதில் :  அப்பெண்களது சூழ்ச்சியைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவர்களை அழைத்து வரச் செய்தாள். அவர்களுக்கு விருந்தையும் ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள். (யூஸுஃபிடம்) “அவர்களை நோக்கிச் செல்” என்று கூறினாள். அவரை அப்பெண்கள் கண்டவுடன், மலைத்துப் போயினர். தமது கைகளையும் வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே […]

123) யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லவில்லை?

கேள்வி : யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லக்கூடாது என்று தந்தை கூறினார்?  பதில் :  “என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்: 12:05)➚

122) யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்?

கேள்வி :  யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்? அந்த நட்சத்திரங்களை எந்த நிலையில் கண்டார் ? பதில் :  4. “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)  கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்”என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 12:05)➚

121) குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது?

கேள்வி : குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது? பதில் :  நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு489 மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். (அல்குர்ஆன்: 12:2)➚

120) ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?

கேள்வி : ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன? பதில் :  94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்: 11:94)➚

119) ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன?

கேள்வி : ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன? பதில் :  84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின்1 வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார். (அல்குர்ஆன்: 11:84)➚

118) லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன?

கேள்வி : லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன? பதில் :  82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.  83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.  (அல்குர்ஆன்: 11:82-83)➚

117) லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன?

கேள்வி : லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன? எதற்காக உபதேசம் செய்தார்கள்? லூத் நபியின் குடும்பத்தாருக்கு வேதனை வந்ததா?  பதில் :  “லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் […]

116) ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை என்ன? பதில் :  67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்: 11:67)➚

115) ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் என்ன கூறினான்?

கேள்வி : ஒட்டகத்தை அறுத்த பின் ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு எத்த்னை நாட்களில் வேதனை வருவதாக அல்லாஹ் கூறினான்? பதில் :  65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். “உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள்! இது பொய்யாகாத எச்சரிக்கை” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்: 11:65)➚

114) ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன? பதில் :  64. “என் சமுதாயமே! உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்” (என்றார்). (அல்குர்ஆன்: 11:64)➚

113) நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன?

கேள்வி : நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன? பதில் :  28. “என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார்.  29. “என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி […]

112) நூஹ் நபியை பின்பற்றாமைக்கு என்ன காரணம்?

கேள்வி : நூஹ் நபியை பின்பற்றமடோம் என்று கூறக்கூடியவர்கள் பின்பற்றாமைக்கு என்ன காரண கூறினார்கள்.  பதில் : “எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 11:27)➚

111) கடைசி நேரத்தில் இறைவன் காப்பாற்றிய சமுதாயம் எது?

கேள்வி : கடைசி நேரத்தில் இறைவன் காப்பாற்றிய சமுதாயம் எது? பதில் :  98. (கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்டபோது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம். (அல்குர்ஆன்: 10:98)➚

110) ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அல்லாஹ் என்ன கூறினான்?

கேள்வி : ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அவனைப் அல்லாஹ் என்ன கூறினான்? பதில் :  92. உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று காப்பாற்றுவோம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (அல்குர்ஆன்: 10:92)➚

109) ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா நபி செய்த பிரார்த்தனை என்ன?

கேள்வி : ஃபிர்அவ்னுக்கும் அவனது கூட்டத்தாருக்கும்  எதிராக மூஸா நபி செய்த பிரார்த்தனை என்ன? பதில் :  88. “எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன்: 10:88)➚

108) துன்பம் ஏற்படும் போது மனிதனின் நிலை என்ன?

கேள்வி : துன்பம் ஏற்படும் போதும், துன்பம் அவனை விட்டும் அகற்றப்படும் போதும் மனிதனின் நிலை என்ன? பதில் :  12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்: 10:12)➚

107) சுவர்க்கவாசிகளின் வாழ்த்தும், பிரார்த்தனையும் என்ன?

கேள்வி : சுவர்க்கவாசிகளின் வாழ்த்தும், பிரார்த்தனையும் என்ன? பதில் :  10. “அல்லாஹ்வே! நீ தூயவன்”. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனையாகும். ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்தாகும். “அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன்: 10:10)➚

106)இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன? பதில் :  நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் பகுதியில் ஆறுகள் ஓடும்.  ஆதாரம் :  72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன்: 9:72)➚ […]

105)இறைநம்பிக்கையாளர்களின் நிலை என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களின் நிலை என்ன? பதில் :  நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 9:71)➚

104) ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?

கேள்வி : ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்? பதில் :  யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 9:60)➚

Next Page » « Previous Page