147) இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்?
நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்Last Updated on October 29, 2023 by
கேள்வி :
இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்?
பதில் :
اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
شَاكِرًا لِّاَنْعُمِهِؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவரை அவன் தேர்வு செய்தான். நேரான வழியில் அவரைச் செலுத்தினான்.
وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ
அவருக்கு இவ்வுலகில் நன்மையை வழங்கினோம். அவர் மறுமையில் நல்லோரில் ஒருவர்.
அல்குர்ஆன் : 16 – 120,121,122