50) பெண்கள் சொத்துரிமை
இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுரிமையை வழங்கியுள்ளது.
உலகில் மனைவிக்கு மட்டுமே சொத்துரிமை அளிக்கப்படுகிறது. இதர பெண் உறவினர்களுக்கு வாரிசுரிமை வழங்கப்படுவதில்லை. இஸ்லாமில் மனைவி அல்லாத பெண் உறவினர்களுக்கும் வாரிசு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கணவனுக்கு குழந்தை இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவனது சொத்தில் எட்டில் ஒரு பாகம் மனைவுக்கு உரியது.
கணவனுக்கு குழந்தை இல்லாத நிலையில் மரணித்தால் கணவன் சொத்தில் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு உண்டு.
ஒருவனுக்கு குழந்தைகள் உள்ள நிலையில் மரணித்தால் அவனது தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு.
ஒருவனுக்கு குழந்தை இல்லாத நிலையில் மரணித்தால் அவனது சொத்தில் தாய்க்கு மூன்றில் ஒன்று உள்ளது.
ஒருவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இருந்தால் அவனது சொத்தில் வாரிசுகளுக்கு கொடுத்தது போக மீதியை ஆண்களுக்கு இரண்டு பெண்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு ஆண் பிள்ளை இல்லாமல் ஒரு பெண் பிள்ளை மட்டும் இருந்தால் அவனது சொத்தில் பாதி அவளுக்கு உண்டு.
ஒருவனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்றில் இரு பங்கு உண்டு. அதை அவர்கள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்
இப்படி பெண்களுக்கு இஸ்லாம் வாரிசுரிமையை வழங்கியுள்ளது