வானில் பறந்த முதல் பறவை எது?
பூமியில் இறக்கை முளைத்து வானில் பறந்த முதல் உயிரினம் எது என்று கேட்டால், அது பறவை அல்ல.
டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையே தோன்றிய ஆர்க்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx) என்ற உயிரினம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தெரோபாட் (Theropod) என்ற ஒருவகை டைனோசரில் இருந்து உருவானது.
இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வனவற்றின் பண்புகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கொண்டிருந்தது.
அதாவது, இதன் அலகில் பற்கள் இருந்தன; கால்களில் செதில்கள் இருந்தன; நீண்ட வால் இருந்தது; அதேசமயம் இறக்கைகளும் இருந்தன.
இது இன்றைய நவீனப் பறவைகளைப் போல பறந்திருக்கவில்லை என்றும், குறுகிய உயரத்தில் மரத்துக்கு மரம் பறந்திருக்கும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இறைவன் தனது அளவற்ற ஞானத்தால், ஒவ்வொரு உயிரினத்தையும் அதற்கேற்ற தனித்துவமான அம்சங்களுடன் படைத்து, இந்த உலகை வியக்கத்தக்க வகையில் வடிவமைத்துள்ளான். அவனது படைப்பின் ஒவ்வொரு அம்சமும் அவனது வல்லமையையும் நுட்பத்தையும் காட்டுகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை