மறுமை நாளில் இறைவன் தன் அடியாருக்கு இடும் திரை — இப்னு உமர் (ரலி) சொன்னது
“நான் அவற்றை உலகில் மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்”
قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: فِي النَّجْوَى؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: ” يُدْنَى الْمُؤْمِنُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ، حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ، فَيَقُولُ: هَلْ تَعْرِفُ؟ فَيَقُولُ: أَيْ رَبِّ أَعْرِفُ، قَالَ: فَإِنِّي قَدْ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَإِنِّي أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى صَحِيفَةَ حَسَنَاتِهِ، وَأَمَّا الْكُفَّارُ وَالْمُنَافِقُونَ، فَيُنَادَى بِهِمْ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى اللهِ
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனுக்கு அருகில் கொண்டுசெல்லப்படுவார்.
இறைவன் தனது திரையைப் போட்டு (அவரை மறைத்து)விடுவான். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர் இறைவனிடம் தம் பாவங்களை ஒப்புக் கொள்வார். “நீ (உலகத்தில் செய்த இன்னின்ன பாவங்களை) அறிவாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அந்த நம்பிக்கையாளர், “என் இறைவா! நான் (அவற்றை) அறிவேன்” என்று கூறுவார். அப்போது இறைவன், “நான் அவற்றை உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்” என்று சொல்வான். பின்னர் அவருடைய நன்மைகளின் ஏடு அவரிடம் கொடுக்கப்படும்.
இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் காட்டி, “இவர்கள்தான் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்கள்”என்று படைப்பினங்களுக்கிடையே அறிவிக்கப்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 5345) ➚
நம் பாவங்களை அல்லாஹ் அனைவர் முன்னும் அம்பலப்படுத்தாமல், நம்மைத் தன்னருகில் அழைத்து, திரையிட்டு, தனிமையில் ஒப்புக்கொள்ளச் செய்கிறான் என்பதே இந்தச் சம்பவத்தின் ஆறுதல். இதே பண்பை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் — மற்றவர்களின் தவறுகளைப் பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதே அழகான குணம்.
இறைமறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும் பகிரங்கமாக அம்பலப்படுத்தப்படுவது, அல்லாஹ்வின் கடுமையால் அல்ல; அவர்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய அதே திரையை உலகில் இருந்தபோதே மறுத்துவிட்டதால்தான். அந்நாள் வருமுன், அந்தத் திரையின் கீழ் வர விரும்பும் ஒவ்வொருவருக்கும் இன்றும் அந்த வாய்ப்பு திறந்தே இருக்கிறது.