மறுமைத் தண்டனையை இம்மையிலேயே கேட்ட நோயாளி — “உன்னால் தாங்க முடியாது” என்ற நபி
“இம்மையிலும் நன்மை, மறுமையிலும் நன்மை, நரகைக் காப்பாயாக” எனக் கேட்கச் சொன்ன நபி
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللهِ لَا تُطِيقُهُ – أَوْ لَا تَسْتَطِيعُهُ – أَفَلَا قُلْتَ: اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ ” قَالَ: فَدَعَا اللهَ لَهُ، فَشَفَاهُ.
– حَدَّثَنَاهُ عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، بِهَذَا الْإِسْنَادِ، إِلَى قَوْلِهِ: «وَقِنَا عَذَابَ النَّارِ» وَلَمْ يَذْكُرِ الزِّيَادَةَ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்” என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) “அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) “உன்னால் அதைத் தாங்க முடியாது”. அல்லது “உன்னால் அதற்கு இயலாது” என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 5216) ➚
கோழிக்குஞ்சு போல் நலிந்திருந்த அந்த மனிதரைப் பார்வையிட வந்த நபி (ஸல்) அவர்கள், அவர் என்ன பிரார்த்தித்தார் என்று கேட்டதும், பதில் கேட்டு வியந்தார்கள். மறுமையில் கிடைக்கவிருக்கும் தண்டனையை இப்போதே தந்துவிடுமாறு அவர் இறைவனிடம் கேட்டிருந்தார் — அதுவே தன் பாவங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்து. நல்ல எண்ணத்துடன் கேட்டதுதான் என்றாலும், அது தாங்க முடியாத ஒரு கோரிக்கை என்பதை நபி சுட்டிக்காட்டி, சரியான பிரார்த்தனையை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
பக்தி இருந்தால் மட்டும் போதாது, என்ன கேட்கிறோம் என்பதிலும் விவேகம் தேவை என்பதை இச்சம்பவம் நமக்குக் கற்பிக்கிறது. துன்பத்தை நாமே தேடிக் கேட்க வேண்டியதில்லை; உலகிலும் மறுமையிலும் நன்மையை வேண்டிக் கொள்வதே சரியான வழி. நபி அவருக்காகப் பிரார்த்தித்ததும் குணமடைந்தார் என்பது, சரியான வார்த்தைகளில் இறைவனிடம் கேட்பதன் பலனை நமக்குக் காட்டுகிறது.