நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?
சூரியன் நம் தலைக்கு நேர் மேலே வரும்போது, நம் நிழல் நம் காலுக்குக் கீழே விழுந்து, அதன் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நிழல் தெரியாது. இதைத்தான் ‘நிழல் இல்லாத நாள்’ என்கிறோம்.
சூரியன் ஒவ்வொரு நாளும் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் செங்குத்தாக வரும்.
மகர ரேகைக்கும் (Tropic of Capricorn) கடக ரேகைக்கும் (Tropic of Cancer) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். மேலும், அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழ்வதில்லை.
இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு தேதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிழல் இல்லாத நாள் வந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் நிழல் இல்லாத நாள் உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 25 அன்று நிழல் இல்லாத நாள் வந்தது. மதுரையில் ஆகஸ்ட் 27 அன்று இதைக் காண முடிந்தது. இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நாள் எப்போது வரும் என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த உலகை இவ்வளவு துல்லியமாகப் படைத்து, சூரியனின் இயக்கத்தை ஒழுங்குபடுத்திய இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சூரியன் உதித்து மறைவதிலும், நிழல்கள் மாறுவதிலும் எண்ணற்ற படிப்பினைகள் உள்ளன.
ஆதாரம்: தினமணி