தந்தையின் தோள்பட்டைக் காயத்தில் விரல் வைத்து விளையாடிய உர்வா (ரஹ்) — பத்ருடையும் யர்மூக்குடையும் அடையாளங்கள்

ஹதீஸ் சம்பவங்கள்

வாளின் முனை முறிந்த இடமே — தந்தையின் வாளை அடையாளம் கண்ட மகன்

«كَانَ فِي الزُّبَيْرِ ثَلَاثُ ضَرَبَاتٍ بِالسَّيْفِ إِحْدَاهُنَّ فِي عَاتِقِهِ» قَالَ: «إِنْ كُنْتُ لَأُدْخِلُ أَصَابِعِي فِيهَا» قَالَ: «ضُرِبَ ثِنْتَيْنِ يَوْمَ بَدْرٍ، وَوَاحِدَةً يَوْمَ اليَرْمُوكِ» قَالَ عُرْوَةُ: وَقَالَ لِي عَبْدُ المَلِكِ بْنُ مَرْوَانَ، حِينَ قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ: يَا عُرْوَةُ، هَلْ تَعْرِفُ سَيْفَ الزُّبَيْرِ؟ قُلْتُ: «نَعَمْ» قَالَ: فَمَا فِيهِ؟ قُلْتُ: «فِيهِ فَلَّةٌ فُلَّهَا يَوْمَ بَدْرٍ» قَالَ: صَدَقْتَ،
[البحر الطويل]
بِهِنَّ فُلُولٌ مِنْ قِرَاعِ الكَتَائِبِ
، ثُمَّ رَدَّهُ عَلَى عُرْوَةَ، قَالَ هِشَامٌ: فَأَقَمْنَاهُ بَيْنَنَا ثَلاَثَةَ آلَافٍ، وَأَخَذَهُ بَعْضُنَا، وَلَوَدِدْتُ أَنِّي كُنْتُ أَخَذْتُهُ

உர்வா(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளினால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்த போது) என்னுடைய விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரண்டு காயங்கள் பத்ருப் போரிலும் இன்னொன்று ‘யர்மூக்’ போரிலும் ஏற்பட்டனவாகும். (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களின் வாள் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வானிடம் இருந்தது.)

என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான், ‘உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ (தெரியும்) என்றேன். ‘அதில் என்ன (அடையாளம்) உள்ளது?’ என்று கேட்டார். ‘பத்ருப் போரில் அதன் முனை முறிந்து போய்விட்டது. அந்த முறிவு தான் (அடையாளம்)’ என்றேன். ‘உண்மை சொன்னீர்’ என்று அப்துல் மலிக் இப்னு மர்வான் கூறினார். (பிறகு, ‘அவர்களின் வாட்கள் பல்வேறு படைகளில் – பங்கெடுத்து எதிரிகளின் வாட்களுடன் – மோதி முனைகள் முறிந்திருந்தன’ என்னும் நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர் அடியைக் கூறினார்.

) பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் ஃ தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கினார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

நூல் – (புகாரி: 3973)

தந்தை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களின் தோளில் இருந்த வாள் காயத்தில், சிறுவனாக இருந்தபோது உர்வா (ரஹ்) விளையாட்டாகத் தம் விரல்களை வைத்துப் பார்ப்பார்கள். அந்தக் காயம் உட்பட மூன்று வாள் காயங்கள் ஸுபைர் (ரலி) உடலில் இருந்தன — இரண்டு பத்ருப் போரிலும், ஒன்று யர்மூக் போரிலும் ஏற்பட்டவை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சித் தலைவர் அப்துல் மலிக் இப்னு மர்வான், ஸுபைர் (ரலி) அவர்களின் வாளை உர்வாவிடம் காட்டி அடையாளம் கேட்டபோது, பத்ருப் போரில் முறிந்த அதன் முனையை வைத்தே உர்வா அதை உறுதி செய்தார்கள். பின்னர் அந்த வாள் சகோதரர்களிடையே விற்கப்பட்டபோது, தானே அதை வாங்கியிருக்க வேண்டும் என்று உர்வா ஏங்கியது, நம் முன்னோர்களின் தியாகத்தின் அடையாளங்களை நாம் எவ்வளவு போற்றிக் காக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.