தண்டனை கேட்டு மும்முறை வந்த மனிதர் — உளூவும் தொழுகையும் கழுவிய பாவம்

ஹதீஸ் சம்பவங்கள்

“வீட்டிலிருந்து புறப்படும்போது நன்கு உளூச் செய்து, நம்முடன் தொழவில்லையா?”

بَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، وَنَحْنُ قُعُودٌ مَعَهُ، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَسَكَتَ عَنْهُ، وَأُقِيمَتِ الصَّلَاةُ، فَلَمَّا انْصَرَفَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَبُو أُمَامَةَ: فَاتَّبَعَ الرَّجُلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ انْصَرَفَ، وَاتَّبَعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْظُرُ مَا يَرُدُّ عَلَى الرَّجُلِ، فَلَحِقَ الرَّجُلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، قَالَ أَبُو أُمَامَةَ: فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ حِينَ خَرَجْتَ مِنْ بَيْتِكَ، أَلَيْسَ قَدْ تَوَضَّأْتَ فَأَحْسَنْتَ الْوُضُوءَ؟» قَالَ: بَلَى، يَا رَسُولَ اللهِ قَالَ: «ثُمَّ شَهِدْتَ الصَّلَاةَ مَعَنَا» فَقَالَ: نَعَمْ، يَا رَسُولَ اللهِ قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِنَّ اللهَ قَدْ غَفَرَ لَكَ حَدَّكَ – أَوْ قَالَ: ذَنْبَكَ

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு (மீண்டும்) அவர், “அல்லாஹ்வின் தூதரே!

நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே,எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். பிறகு தொழுகைக்காக “இகாமத்” சொல்லப்பட்டது. தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய முறையில் அங்கத்தூய்மை (உளூ) செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம் (செய்தேன்);அல்லாஹ்வின் தூதரே!” என்றார். “பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழவில்லையா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அந்த மனிதர் “ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் “உமக்குரிய தண்டனையை” அல்லது “உமது பாவத்தை” மன்னித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5338)

தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை வேண்டுமென மும்முறை கேட்ட அந்த மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் அவசரப்படவில்லை; அமைதியாகவே இருந்தார்கள். ஒருவர் தம் தவற்றை ஒப்புக்கொள்ளும் தைரியம் காட்டும்போது, உடனடியாகத் தண்டிப்பதற்குப் பதிலாக அவருக்கு நல்வழி காட்டும் பொறுமையே நம்மிடமும் வேண்டும்.

உளூவும் தொழுகையும் அவரிடம் விசாரித்த பின், அவை மூலமே அவரது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நாம் தினமும் செய்யும் தொழுகை போன்ற சிறு நல்லமல்களே, நம் பாவங்களைக் கழுவும் பெரும் வாய்ப்பாக அமையும் என்பதே இந்தச் சம்பவம் தரும் நம்பிக்கை.