கடைவீதியில் உமர் (ரலி)யிடம் வந்த விதவை — தானே ஒட்டகத்தை ஓட்டிக் கொடுத்தது

ஹதீஸ் சம்பவங்கள்

“இது தீர்ந்துபோவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருவான்”

خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى السُّوقِ، فَلَحِقَتْ عُمَرَ امْرَأَةٌ شَابَّةٌ، فَقَالَتْ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، هَلَكَ زَوْجِي وَتَرَكَ صِبْيَةً صِغَارًا، وَاللَّهِ مَا يُنْضِجُونَ كُرَاعًا، وَلاَ لَهُمْ زَرْعٌ وَلاَ ضَرْعٌ، وَخَشِيتُ أَنْ تَأْكُلَهُمُ الضَّبُعُ، وَأَنَا بِنْتُ خُفَافِ بْنِ إِيْمَاءَ الغِفَارِيِّ، «وَقَدْ شَهِدَ أَبِي الحُدَيْبِيَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ». فَوَقَفَ مَعَهَا عُمَرُ وَلَمْ يَمْضِ، ثُمَّ قَالَ: مَرْحَبًا بِنَسَبٍ قَرِيبٍ، ثُمَّ انْصَرَفَ إِلَى بَعِيرٍ ظَهِيرٍ كَانَ مَرْبُوطًا فِي الدَّارِ، فَحَمَلَ عَلَيْهِ غِرَارَتَيْنِ مَلَأَهُمَا طَعَامًا، وَحَمَلَ بَيْنَهُمَا نَفَقَةً وَثِيَابًا، ثُمَّ نَاوَلَهَا بِخِطَامِهِ، ثُمَّ قَالَ: اقْتَادِيهِ، فَلَنْ يَفْنَى حَتَّى يَأْتِيَكُمُ اللَّهُ بِخَيْرٍ، فَقَالَ رَجُلٌ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَكْثَرْتَ لَهَا؟ قَالَ عُمَرُ: ثَكِلَتْكَ أُمُّكَ، وَاللَّهِ إِنِّي لَأَرَى أَبَا هَذِهِ وَأَخَاهَا، قَدْ حَاصَرَا حِصْنًا زَمَانًا فَافْتَتَحَاهُ، ثُمَّ أَصْبَحْنَا نَسْتَفِيءُ سُهْمَانَهُمَا فِيهِ

& 4161. (உமர் – ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அறிவித்தார். நான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டுவிட்டு என் கணவர் இறந்து போய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக் கூட அவர்களால் முடியாது. மேலும், எந்த வித விவசாய நிலமோ, (பால் கறப்பதற்குக்) கால் நடையோ அவர்களிடம் இல்லை.

(பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஅபாஃப் இப்னு ஈமா அல் ஃம்ஃபாரி என்பவரின் மகளாவேன். என் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் பங்கெடுத்தவர்கள்’ என்று கூறினார். அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர் (ரலி), ‘நெருங்கிய உறவே வருக!’ என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த ஓட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள்.

பின்பு உணவு தானியங்களை இரண்டு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றி வைத்தார்கள். அந்த இரண்டு மூட்டைகளுக்குமிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும், ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணங் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, ‘(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்து போவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்’ என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!

இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்’ என்று கூறினார். (அதற்கு) உமர்(ரலி), ‘உன்னை உன்னுடைய தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதனை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்லம் (ரஹ்)

நூல் – (புகாரி: 4160) & 4161)

சிறு குழந்தைகளுடன் தவிக்கும் ஒரு விதவை கடைவீதியில் தன் வறுமையை முறையிட்டதும், உமர் (ரலி) அவர்கள் அவரை அந்நியராகப் பார்க்காமல் நெருங்கிய உறவினர் போல வரவேற்றார்கள். தலைவனாக இருந்தும் ஒரு சாதாரண குடிமகளின் வேதனையைக் கேட்க நேரம் ஒதுக்கிய அந்தப் பணிவே, தலைமையின் உண்மையான அளவுகோல்.

வீடு சென்று தானே தானியத்தையும் பணத்தையும் ஏற்றி, ஒட்டகத்தையும் தானே ஓட்டிக் கொடுத்தார்கள் உமர் (ரலி). அதிகமாகக் கொடுத்துவிட்டீர்கள் எனச் சொன்னவரிடம், அவளுடைய தந்தையும் சகோதரரும் மார்க்கத்திற்காகச் செய்த தியாகத்தை நினைவூட்டினார்கள். நாம் யாருக்காவது உதவும்போது, அவர்கள் யார், என்ன தியாகம் செய்தவர்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை இது கற்பிக்கிறது.