உஹுதுப் போரில் சஅத் (ரலி)க்காகத் தம் பெற்றோரை ஒன்றுசேர்த்தார்கள் நபி (ஸல்)

ஹதீஸ் சம்பவங்கள்

“என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று உற்சாகமூட்டினார்கள் நபி (ஸல்)

«لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ»

– حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَابْنُ رُمْحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، كِلَاهُمَا، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الْإِسْنَادِ

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ لَهُ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ قَدْ أَحْرَقَ الْمُسْلِمِينَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي» قَالَ فَنَزَعْتُ لَهُ بِسَهْمٍ لَيْسَ فِيهِ نَصْلٌ، فَأَصَبْتُ جَنْبَهُ فَسَقَطَ، فَانْكَشَفَتْ عَوْرَتُهُ فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَظَرْتُ إِلَى نَوَاجِذِهِ

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர்புரிய உற்சாக மூட்டி)னார்கள். – மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. – சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.

இணைவைப்பாளர்களில் ஒருவன் முஸ்லிம்களை (நெருப்பு போல) தாக்கிக் கொண்டிருந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறி (உற்சாகமூட்டி)னார்கள். நான் முனை பொருத்தப்படாத அம்பொன்றை எடுத்து அவனது விலாப்புறத்தில் தாக்கினேன். அவன் கீழே விழுந்தான். அவனது (ஆடை விலகி) மறைவிடங்கள் வெளியே தெரிந்தன. (எதிரி வீழ்த்தப்பட்டதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள்,தம் கடை வாய்ப்பற்கள் தெரிய சிரித்ததை நான் கண்டேன்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 4788)

உஹுதுப் போரில் முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்த ஓர் எதிரியை நோக்கி அம்பெய்யுமாறு சஅத் (ரலி)யிடம் கேட்டபோது, தம் பெற்றோர் இருவரையும் ஒன்றாக அவருக்காக அர்ப்பணித்துப் பேசி உற்சாகமூட்டினார்கள் நபி (ஸல்) அவர்கள். வேறு எவருக்கும் அவர்கள் இவ்வளவு கனத்துடன் பேசியதில்லை.

எதிரி வீழ்ந்ததைக் கண்டதும் நபி (ஸல்) அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை சஅத் (ரலி) நேரில் கண்டார்கள். போர்க்களத்தின் நடுவிலும் தம் தோழரின் வெற்றியில் இத்தனை மகிழ்ச்சி காட்டிய அந்த அன்பே, அர்ப்பணிப்புக்கு அவர்கள் கொடுத்த மதிப்பை நமக்குக் காட்டுகிறது.