Category: தொழுகை

q110

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா?

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா? இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? பதில் வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன) அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ […]

குனூத் எப்போது ஓதலாம்?

குனூத் ஓதுவது எந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது? அது யாரைச் சபித்து ஓதுவதற்காக உருவானது? எந்தெந்த தொழுகையில் ஓதலாம்? அதன் வரலாற்று பின்னணி என்ன? குனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது. ஒன்று அல்லாஹும்மஹ்தினி ஃபீமன் ஹதைத்த …. என்று துவங்கும் குனூத். இரண்டாவது ஒரு சாராருக்கு ஆதரவாக குனூத்து ஓதுவது அல்லது ஒரு சாராரைச் சபித்து ஓதும் குனூத். இதில் முதலாவது குனூத் தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்தி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் […]

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? ? ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ, அல்லது ருகூவுக்குப் பின்போ குனூத் ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு குனூத் ஓதும் […]

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

கேள்வி: பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? பதில்: இல்லை. பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் […]

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா? பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் […]

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? ஹமீத், குவைத் பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி வருகிறோம். 3+3 தக்பீர்கள் சொல்வதற்கு ஆதாரம் காட்ட முடியாததால் 7+5 தக்பீர்கள் சொல்வது தொடர்பான ஹதீஸில் சில சில சந்தேகங்களை எழுப்பி அது பலவீனமான செய்தி என்று வாதிட்டு வருகின்றனர். பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் […]

தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?

தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்? தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்? பதில்: இரவில் இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர். இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும். இதனால் இரவுத் தொழுகைக்கு வித்ரு என்ற பெயரும் உள்ளது. இதே தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் (இரவின் […]

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? சூரிய கிரகணத்தை காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? பல இடங்களில் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் கிரகணம் தெரியவில்லை. அங்கு தொழ வேண்டுமா அல்லது காண முடியாததால் தொழக் கூடாதா ? பதில் கிரகணத் தொழுகை எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) […]

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளுங்கள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை. என்றாலும் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை ஏதேம் வரவில்லை. எனவே பெண்கள் மழைத் தொழுகையில் கலந்து கொள்ளலாம். திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும் உள்ளடக்கியதே. பெண்களுக்கு அந்த சட்டம் இல்லை என்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பெண்களுக்கு இல்லை […]

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? حَدَّثَنَا عَبْدَانُ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ […]

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா?

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா? நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன். இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம், இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி […]

தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்தலாமா?

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரை சரியாகப் பின்பற்ற முடியும். இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். இமாம் ஓதுவதை செவிகொடுத்து கேட்க வேண்டும். இமாம் ருகூவிற்குச் சென்றால் […]

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா? ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? இம்தியாஸ் நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. மக்காவில் தொழுகை நடக்கும் போது அங்கே மழை பெய்தால் இங்கும் அந்த மழை இருந்தால் அதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். அங்கே தீவிபத்து நடக்கும் போது […]

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா? எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பதில் : பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை. எட்டு வயதுப் பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களைப் பழக்குவதற்காக தொழுகையைத் திரும்ப […]

வேலையின் காரணமாக ஜம்உ செய்யலாமா?

கேள்வி: நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றேன். அங்கு அஸர் தொழ முடியாத காரணத்தால் லுஹர் தொழும் போது அஸர் தொழலாமா? பதில்: வழக்கமாக்க கூடாது. நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன்: 4:103)➚ இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்திலேயே தொழுதாக வேண்டும். தங்களைப் போன்று வேலைக்குச் செல்பவர்களுக்குத் தொழுகையை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் இருந்தாலும் தொழுகைக்கென ஒரு சிறிய இடைவேளை தான் தேவைப்படும். எந்த அலுவலகமாக இருந்தாலும் […]

கஃபாவிற்குள் தொழலாமா?

கஃபாவிற்குள் தொழலாமா? அப்படி தொழுதால் கிப்லா எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்? பதில்: தொழலாம். தற்போது வாய்ப்பு இல்லை. கஅபாவிற்குள் தொழுவதை மார்க்கம் தடைசெய்யவில்லை. மக்கள் குறைவாக இருந்த காலத்தில் கஅபாவின் உட்பகுதி தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாகத் தான் இருந்தது. அதற்குள் மக்கள் தொழுது வந்தனர். கஅபாவிற்குள் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் சிதிலமடைந்த கஅபாவின் அஸ்திவாரத்திலிருந்து சுவர்களை எழுப்பி அதைப் பள்ளியாக ஆக்கினார்கள். நபிகள் […]

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகை முடிந்த பின் உபரியான தொழுகையைத் தொழுவதாக இருந்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடத்துக்கு மாறாமல் அல்லது பேசாமல் தொழக் கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டா? பதில்: கூடாது. இடம் மாற்றி அல்லது வேறு செயலை செய்து விட்டு தொழலாம். நீங்கள் கூறும் கருத்தில் நபிமொழிகள் உள்ளன. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ […]

அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?

தொழக் கூடாத பள்ளிகள் என்று குர்ஆனில் கூறப்பட்டதைக் காரணமாக வைத்து அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா? பதில்: காரணத்தை பார்த்து முடிவு செய்யவும். குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது. وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ […]

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை?

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை? பதில்: ஆயிரம் மடங்கு சிறந்தது மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ […]

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? பதில்: கூடும். ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம் கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அதே சமயம் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும். தொழுகையின் திறவுகோல் […]

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா? பதில்: நபியின் கட்டளையில்லை. செய்வதும் தவறில்லை. கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின் இரு விரல்களயும், இரு காதுகளில் வைத்திருந்ததாக திர்மிதி, அஹ்மத், மற்றும் சில நூல்களிலும் ஹதீஸ் உள்ளது. حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق أنا سفيان عن […]

செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா?

செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா? பதில்: சொல்லலாம். செருப்பு அணிந்து பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. மேலும் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு செருப்பு ஒரு தடையில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பாங்கை விட தொழுகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் […]

பாங்கை பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?

வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? பதில்: கூடாது. இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் வணக்கமாகும். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الْأَنْصَارِيِّ ثُمَّ الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ […]

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா?

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா? பதில்: பாங்கு சொன்ன பிறகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் சுன்னத் தொழுதுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن نافع عن ابن عمر أن حفصة أم المؤمنين أخبرته أن رسول الله -صلى الله عليه وسلم- كان إذا سكت المؤذن من الأذان لصلاة الصبح وبدا الصبح […]

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?

நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இது சரியா? பதில்: கிடக்கலாம். இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن […]

அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் என்று கூற ஆதாரம் உண்டா?

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா? பதில்: உண்டு. தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக […]

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பெண்கள் பாங்கு சொல்லலாமா? பதில்: பள்ளியில் கூடாது. தனக்காக சொல்லும் பாங்கை பெண்கள் சொல்லலாம் பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. மக்களை பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் […]

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?

கேள்வி: பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா? பதில்: இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) […]

பாங்குக்கு உளூ அவசியமா?

கேள்வி : ஆடு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா? பதில்: இல்லை ஆடு,மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம். பாங்கு சொல்வதற்கு உளூ அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.(பார்க்க : திர்மிதி 201,202) பாங்குக்கு உளூ அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. முஅத்தின் பாங்கு சொல்வதைக் […]

உளூ பாங்கின் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? பதில்: இல்லை பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் உளூச் செய்யும் போதும், பாங்கு கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. மேலும் உளூச் செய்யும் போது தலைக்கு மஸஹ் செய்வது அவசியமாகும். தலைக்கு மஸஹ் செய்யும் போது […]

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா?

தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா? பதில்: ஆம். பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன. இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும். ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக […]

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? பதில் அதிகமாக நீட்டப்படுவது கூடாது தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன. பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும். பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும். வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? […]

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா? செய்யலாம் எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூச் செய்வதோ, சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முட்டுக்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இவை தவிர இதர நேரங்களிலும் […]

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா?

படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா? இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவ வேண்டும் பதில் ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டால் போதும். حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ […]

குழந்தையின் சிறு நீர் பட்டால்?

குழந்தையின் சிறு நீர் பட்டால்? குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் ஆடையை மாற்ற வேண்டும் என்று ஹதீஸ் கூறவில்லை. சிறுநீர் பட்ட […]

தயம்மும் செய்து பள்ளியில் ஜமாஅத்துடன் தொழலாமா?

தயம்மும் செய்து பள்ளியில் ஜமாஅத்துடன் தொழலாமா? தொழலாம் குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் […]

தூக்கம் உளூவை முறிக்குமா?

கேள்வி: தூக்கம் உளூவை முறிக்குமா? பதில்: சிறு தூக்கம் முறிக்காது, ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும். தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன. காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்:(திர்மிதீ: […]

காயம்பட்டவர்கள் எப்படி குளிப்பது?

காயம்பட்டவர்கள் எப்படி குளிப்பது? ஒருவர் காலில் அடிபட்டுள்ளது அவருக்கு குளிப்பு கடமை என்றிருக்கும் பட்சத்தில் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி செய்தால் உளூ கூடுமா? பதில்: தயம்மும் செய்ய வேண்டும் உங்கள் கேள்வி குழப்பமாக உள்ளது. குளிப்பு கடமையானவர் குளிக்க வேண்டுமே தவிர உளூச் செய்வது குளிப்புக்குப் பகரமாக ஆகாது. உளூ செய்தால் குளிப்பு […]

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? இல்லை பதில்: தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் என்ற சட்டம் தொழுகைக்கு மட்டும் உரியது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) […]

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. கேள்வி : 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஷா தொழுகை நடத்தியது யார்? நான் மார்க்க அறிஞர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை. மலக்குமார்கள் தொழவைத்தார்கள் என்றும் ஆண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பெண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று […]

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா?

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா? தொழலாம். கேள்வி: நான் ஐவேளைத் தொழுகைக்காக ……. உள்ள மஸ்ஜிதே நூர் தவ்ஹீத் பள்ளிக்குச் சென்று வருகிறேன். அங்கு தொழுகைக்காக இமாம் யாருமில்லை. ஆதலால் அங்கு யார் தவ்ஹீத் வாதி வருகிறாரோ (குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தவர்) அவர் தொழவைக்கலாம். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு நபர் இமாமத் செய்கிறார். அவர் பீடி மண்டி நடத்துகிறார். அவர் இமாமத் செய்யலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் மார்க்கத் […]

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா? கூடாது. கேள்வி : அல் குரான் (62:9➚) – “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான். நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் […]

கஸ்ர் எத்தனை நாளைக்கு?

கஸ்ர் எத்தனை நாளைக்கு? வரையறை இல்லை. எனினும்….. ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது […]

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்? 25கிமீ சென்றால் கஸ்ர். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர்.(முஸ்லிம்: 1230) ➚ சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு ஒருவர் […]

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் […]

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா?

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா?

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? உடனே தொழக் கூடாது. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் […]

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம். ‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 998, 472) ➚ எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் […]

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா? ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் […]

Next Page » « Previous Page