இறைநம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்! இறைநம்பிக்கை கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள் إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ அல்லாஹ்மீதும், அவனது தூதர்மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித ஐயமும் கொள்ளாமல் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரே இறைநம்பிக்கையாளர்கள். அவர்களே உண்மையாளர்கள். […]