Tamil Bayan Points

Category: பலவீனமான ஹதீஸ்கள்

a108

தாயின் காலடியில் சொர்க்கம்?

தாயின் காலடியில் சொர்க்கம்? 3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ […]

வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ

நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது بِسْمِ اللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது அபூதாவுதில் இடம்பெறும் செய்தி. இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருடிப்பு) […]

இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து?

1863 حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الـحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ رواه ابوداود அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவூத் (1863) இதே […]

வெளியூரில் மரணிப்பது சிறப்பா?

மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு -அந்தளவு இடம்- அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூற்கள் : அஹ்மத் […]

தொழுகையை விட்டால் ஒளி, பரக்கத், வலிமை நீக்கப்படும்

எவர் பஜ்ர் தொழுகையை விட்டு விடுவாரோ அவருடைய முகத்தில் ஒளி நீக்கப்பட்டுவிடும். எவர் லுஹர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய உணவில் பரக்கத் நீக்கப்பட்டுவிடும். எவர் அஸர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடை உடம்பில் வலிமை நீக்கப்பட்டுவிடும். எவர் மக்ரிப் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய பிள்ளைகளிடமிருந்து எவ்வித பலனையும் பெறமாட்டார். எவர் இஷாத் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய தூக்கத்திலிருந்து நிம்மதி நீக்கப்பட்டுவிடும்.  من ترك صلاة الصبح فليس في وجهه نور ومن ترك صلاة الظهر فليس […]

இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போர் புரிவார்களா?

பிற்காலத்தில் முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு எதிராகப் போர் செய்வார்கள் என்றும் அந்தப் போரில் கொல்லப்பட்டால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்றும் இதனைச் சிறப்பித்து ஒரு சில ஹதீஸ்கள் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா? என்று நாம் ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொள்ள முடிகின்றது.  இந்த ஹதீஸ்களில் ஹிந்த் என்ற அரபுச் சொல் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது இந்தியாவைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. முதல் அறிவிப்பு أَخْبَرَنَا أَحْمَدُ […]

(ISIS) கருப்புக்கொடி வந்தால் சேர்ந்து கொள்!

தற்போது ஐஎஸ்ஐஎஸ் போராட்டக்காரர்கள் ஈராக்கில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தங்களுடைய அமைப்பின் அடையாளமாக கருப்புக் கொடியைப் பயன்படுத்துகின்றனர். பிற்காலத்தில் கருப்புக் கொடி ஏந்திய ஒரு கூட்டம் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவர் நேர்மையான சிறந்த தலைவராக இருப்பார். அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் கூட்டத்தை ஆதரிக்கும் சிலர் இது போன்ற ஹதீஸ்கள் இவர்கள் குறித்து முன்னறிவிப்புச் செய்வதாக கூறுகின்றனர். எனவே கருப்புக் கொடி ஏந்திய கூட்டம் தொடர்பாக […]

7 வருடம் பாங்கு சொன்னால் நரகிலிருந்து விடுதலை

”யார் நன்மையை எதிர்பார்த்து ஏழுவருடங்கள் பாங்கு சொல்வாரோ அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை வழங்கப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : திர்மிதீ (190), இப்னுமாஜா (719),தப்ரானீ-கபீர்,பாகம் :9, பக்கம்:290 இந்தச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஜாபிர் பின் யஸீத் பின் அல்ஹாரிஸ் அல்ஜஅஃபீ என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். ஜாபிர் ஒரு பொய்யர் என்றும் இவருடைய செய்திகளை பதிவுசெய்யக்கூடாது என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டுள்ளார்கள். […]

சஹாபியை திட்டினால் அல்லாஹ் சபிக்கிறான்

நபித்தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : தப்ரானீ – கபீர், பாகம் :11, பக்கம் : 64 المعجم الكبير للطبراني (11/ 388، بترقيم الشاملة آليا) 913- حَدَّثَنَا مُحَمَّدُ بن نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ الْجُرْجَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ ، حَدَّثَنَا مَالِكُ بن […]

அம்பு தைத்தும் விடாமல் நபித்தோழர்!

அம்பு தைத்தும் முறிக்காமல் தொழுது கொண்டிருந்தார் ஒரு நபித்தோழர்! 170 حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ عَنْ جَابِرٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ […]

ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்?

ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்? ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள். عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حج الفقراء وعيد المساكين அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன். […]

மனோஇச்சையை எதிர்ப்பதே சிறந்த ஜிஹாத்

”ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையை எதிர்த்து போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.” நூல் : பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் […]

தலாக் கூறினால் அர்ஷ் நடுங்கும்

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா? أخبار أصبهان – (2 / 289( عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تزوجوا ولا تطلقوا ، فإن الطلاق يهتز له العرش திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி ரலி, நூல்கள் : […]

அஸருக்கு பின் உறங்கினால் அறிவு கெடும்

مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்னது அபீயஃலா 4918 மஜ்மவுஸ் ஜவாயித் பாகம் 2 பக்கம் 229 அஸ்ருக்குப் பின் ஒருவர் உறங்கினால் அவரது அறிவு பாழாகி விடும் என இந்தச் செய்தி தெரிவிக்கின்றது. இது சுன்னத் ஜமாஅத் […]

பள்ளியில் பேசுவது நன்மைகளை உண்டு விடும்!

கால்நடைகள் புற்பூண்டுகளைத் திண்பதைப் போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும். الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب. நெருப்பு விறகை எரித்துவிடுவதைப் போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும். கஸ்ஸாலி, இந்தச் செய்தியை நபிகள் நாயகம் கூறியதுபோல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார். (பாகம் 1 பக்கம் 152) ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் […]

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?

184 حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ رواه الترمذي உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), நூல் : திர்மிதீ (184) இதே கருத்து பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

அனாதைகள், பெண்கள் உரிமையில் அநீதமாக நடப்போரை எச்சரிக்கிறேன்

”இறைவா! அனாதைகள் பெண்கள் ஆகிய இந்த இரண்டு பலவீனமானவர்களின் உரிமையில் (அநீதமாக நடப்போரை) நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.” இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்கள். இமாம் நவவீ அவர்கள் அனாதைகள் பெண்கள் பலவீனர் ஏழைகள் ஆகியோரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுதல் அவர்களுக்கு நன்மை செய்தல் இரக்கம் காட்டுதல் என்ற 29 வது தலைப்பின் கீழ் 268 வது செய்தியாக இதை பதிவுசெய்துள்ளார்கள். இந்த செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் […]

உண்ணுவார், பருகுவார், உடன் அமருவார்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : ”பனூ இஸ்ரவேலர்களிடம் முதன் முதரில் குறை எவ்வாறு ஏற்பட்டதென்றால் (அவர்களில்) ஒருவர் (தவறு செய்யும்) இன்னொருவரை சந்திக்கும்போது இன்னாரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள். நீ செய்து கொண்டிருக்கும் (தீய) காரியத்தை விட்டுவிடு. இது உனக்கு ஆகுமானதல்ல என்று கூறினார். பிறகு மறுநாள் அந்நபர் அதே நிலையில் இருக்க அவரை சந்தித்தார். அந்நபரு டன் சேர்ந்து உண்ணவோ பருகவோ அமரவோ அவரைத் தடுக்கவில்லை. இவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கை யில் […]

வியாழக்கிழமையில் தான் பயணம் செய்யவேண்டுமா?

வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது. ”என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை. அதில் பயணம் செய்யுங்கள்“   நூல் – தப்ரானி இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.

மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்

“உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.” 1. இமாம் நவவி: இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. அதில் அறியப்படாத இருவர் இடம்பெற்றுள்ளனர். (அல்அத்கார்) 2. இமாம் தஹபி: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் அபூஉஸ்மான் என்பவர் இடம்பெறுகிறார். அவரும் அவருடைய தந்தையும் யார் என்று அறியப்படவில்லை. (மீஸானுல் இஃதிதால்) 3. இமாம் அல்பானி: இந்த விடயம் தொடர்பாக எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் காணப்படவில்லை. (அஹ்காமுல் ஜனாஇஸ்) 4. இமாம் இப்னு பாஸ்: இந்த ஹதீஸ் பலவீனமானது. (மஜ்மூஉல் பதாவா) […]

உமரின் அற்புத திறமை

உமரின் அழைப்பு உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்” எனக்கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள்இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்கதொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தைபடைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று […]

இருகூறாக பிளக்கப்பட்ட யாஸிர் (ரலி)

யாஸிர் (ரலி) அவர்கள் சம்பவம் யாஸிர் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள். இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூலிலும் பார்க்க முடியவில்லை.

பெண்ணை ஷைத்தான் நோக்குகிறான்

ஷைத்தான் அவளை நோக்குகிறான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான்.” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (1173) இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் ரீதியாக பலவீனமானதாகும்.  கதாதா அவர்களிடமிருந்து மர்ஃபூ (நபியவர்கள் கூறியதாக) அறிவிக்கப்படும் செய்தியை மூன்று மாணவர்கள் அறிவிக்கின்றனர்.  1. ஹம்மாம். 2. ஸயீத் இப்னு பஷீர். 3. சுவைத் பின் இப்ராஹிம் இந்த மூன்று […]

நஜ்ஜாஷி மன்னர் திருமண விருந்து கொடுத்தாரா?

நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம்செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் தானாக முன்வந்து வலீமா விருந்து கொடுத்தார்கள். இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் மரணிக்கின்றார்கள். […]

உறவை வெறுத்தவன் இருந்தால், ரஹ்மத் இறங்காது

 உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் – அல்அதபுல் முஃப்ரத்-63 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

கஅபவை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தப்ரானியின் அறிவிப்பு : 1 நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் […]

துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக…

கீழே உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். (சரியான செய்தி) பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்… “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521 இச்செய்தி இடம் பெற்ற பல நூல்களில் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார். என்றாலும் முஸ்னத் அஹமதில் சரியான செய்தி வருகிறது.     நோன்பாளி நோன்பு துறக்கும் போது… பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) […]

தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்

أصحابي كالنجوم فبأيهم إقتديتم إهتديتم அஸ்ஹாபீ கன்னுஜ‚மி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும் பொருள் : என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள். இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஹதீஸ் ஒரு சில நூல்களில் இடம் பெற்றிருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளன. இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸ் போதனைக்களுக்கு முரண்படுகின்றது. முதலில் இதன் […]

அபூபக்ரை முந்த முயன்ற உமர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றாற்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. “ஏதேனும் ஒரு நாளில் அபூபக்ரை நான் முந்த வேண்டுமாயின் இந்த நாளில் முந்தி விட வேண்டியது தான்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதாரத்தில் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “இது போன்றதை” என்று பதிலளித்தேன். அபூபக்ர் (ரலி) […]

தூரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள்

إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي – (2 / 300( قال صلى الله عليه وسلم (لا تنكحوا القرابة القريبة فإن الولد يخلق ضاويا) நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் குழந்தை பலவீனமானதாகப் படைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஹ்யாவு உலுமித்தீன், பாகம் 2, பக்கம் 300 இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலில் இடம்பெறும் செய்திகள் எந்த நுலில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வு செய்த […]

நபியின் மீது குப்பை கொட்டிய மூதாட்டி

நபியின் மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி தொடர்ந்து தம்மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி ஒரு நாள் குப்பையைக் கொட்டாததால், அவரைப்பற்றி அருகிலுள்ளோரிடமும் விசாரித்து, அம்மூதாட்டிக்கு நோய் என்று கேள்விப்பட்டதும் அவர் தமக்குச் செய்த கொடுமையை மனதில் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு சென்று அம்மூதாட்டியை நலம் விசாரிக்கின்றார்கள். நபிகளாரின் வருகையைச் சற்றும் எதிர்பாராத அம்மூதாட்டி செய்வதறியாது மனமுருகிறார். மனம் நெகிழ்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கிறாரம். இது ஒரு கட்டுக்கதை    

பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்.  நூல் : முஃஜமுல் கபீர்  லித்தப்ரானீ, பாகம் : 11 பக்கம் : 417) மேற்கண்ட செய்தியில் “பைத்துல் மஃமூர்” என்ற பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக மேல் வானத்தில் இருப்பதாகவும், எந்த அளவிற்கென்றால் அது விழுந்தால் கூட […]

ஹம்ஸாவின் ஈரலை வெட்டிய ஹிந்த் ?

ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள் 1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர் அதை கடித்து விழுங்க முயற்சித்து தோற்றுப் போனார் என்ற ஒரு செய்தி இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிகாயா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறிப்பிடாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது. […]

நபி(ஸல்) முதலாவதாக படைக்கப்பட்டவர்களா?

முதலாவதாக படைக்கப்பட்டவரா? ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும் எச்செய்தியும் நம்பத் தகுந்ததல்லஎன்று இமாம் ஸர்கஸீ, முல்லா அலீ காரி போன்றோர் கூறியுள்ளார்கள். “அல்லாஹ் தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு கற்றையைப் பிடித்து, நீ முஹம்மதாக ஆகிவிடு என்று கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும், “ஜாபிரே!ஆரம்பமாக அல்லாஹ் […]

வருடா வருடம் ஜகாத்தா?

உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும். அறிவிப்பவர்: அலீ (ரழி) நூல் திர்மிதி 1342 இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா […]

ஆஷுரா நாளில் குடும்பத்திடம் தாராளமாக நடந்து கொள்

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான். இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட […]

உமரும் அவரது சகோதரியும்

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. (மனாருல் ஹுதா) உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற […]

பிரார்த்தனைகள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்

பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (3292) இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.   இரண்டாவது இந்தச் செய்தியின் […]

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி ), நூல் : திர்மிதீ (803) இதே கருத்து அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 3356,3659) இடம் பெற்றுள்ளது. இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைகுழம்பியவர். இவர் மூளைகுழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் […]

முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா?

முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் […]

ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாது!

حلية الأولياء 430 – (2 / 41) حَدَّثَنا إبراهيم بن أحمد بن أبي حصين حَدَّثَنا جدي أَبُو حَصِينٍ حَدَّثَنا يحيى الحماني حَدَّثَنا قيس عن عَبْد الله بن عُمَران عن علي ابن زيد عن سعيد بن المسيب عنعلي أنه قال لفاطمة ما خير للنساء قالت لا يرين الرجال ولا يرونهن فذكر ذلك للنبي صلى الله عليه […]

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா?

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் – ஹஜருல் அஸ்வதிற்கு – நேராக உள்ளது. அக்பாரு மக்கா, பாகம் 2,  பக்கம் 124 […]

முஸாபஹா பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்

முஸ்லிம்கள் சந்திக்கும்போது கைகொடுத்தால் பாவம் மன்னிக்கப்படுகின்றது என்ற கருத்தில் பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றது.   பலவீனமான செய்தி 1 2652حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ لَا قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ أَفَيَأْخُذُ […]

கொடுத்த வாக்கிற்காக மூன்று நாட்கள் நின்ற நபி

  4344 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سِنَانٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ بُدَيْلٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ […]

நபியின் இரத்தத்தை குடிப்பது சிறப்பா?

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தைஎடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு)புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக்குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள். அறிவிப்பவர்: சஃபீனா (ரலி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர்என்று […]

முஹம்மது என்று பெயர் வையுங்கள்

சுவனத்தில் நுழைந்து கொள் மறுமை நாளில் இறைவன் மனிதப் படைப்பைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மத் என்ற பெயரை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள் என்று கூறுவான். (ஹதீஸே குத்ஸி)  2. மேலும் யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில் வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 3. அல்லாஹ்வின் முன்னிலையில் இரண்டு அடியார்கள் நிறுத்தப்படுவார்கள்.இவ்விருவரையும் நோக்கி சுவனத்திற்குச் செல்லுங்கள் என்று அவன் சொல்வான். […]

நபியவர்கள் தனக்காக அகீகா கொடுத்தார்கள்

நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூற்கள் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம் 4 பக்கம் 329) அஸ்ஸூனனுல் குப்ரா (பாகம்9 பக்கம் 300) முஸ்னதுல் பஸ்ஸார் (பாகம் 6 பக்கம் 193) மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனம் ஆனவர் ஆவார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஒரு போதும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தகுந்தவை இல்லை.

நபியவர்கள் நோயுற்றது சஃபர் மாதத்திலா?

நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள். அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம் : 234 இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். الطبقات الكبرى […]

ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்

சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி). இந்த செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க […]

முதல் அத்தஹியாத்தில் ஸலவாத்து கூடாதா?

நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் :திர்மிதீ (334) 334 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ هُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ قَال سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ […]

Next Page » « Previous Page