Author: Trichy Farook

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா?

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா? கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர். எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்? மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, […]

கப்ரின் மேல் எழுதக் கூடாது

கப்ரின் மேல் எழுதக் கூடாது أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال: نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه – قال الشيخ الألباني : صحيح சமாதிகள் மீது […]

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது ஒருவரை அடக்கம் செய்த இடத்தை சிமெண்ட் போன்ற பொருட்களால் கட்டக் கூடாது என்றால் அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி தர்கா எனும் கட்டடம் கட்டுவது கூடவே கூடாது என்பது உறுதியாகிறது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான வார்த்தைகளாலும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். حدثنا محمد بن المثنى، قال: حدثنا يحيى، عن هشام، قال: أخبرني أبي، عن عائشة […]

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும்

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும் மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبى شيبة وزهير بن حرب قال يحيى أخبرنا وقال الآخران حدثنا وكيع عن سفيان عن حبيب بن أبى ثابت عن أبى وائل عن أبى الهياج الأسدى […]

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா?

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா? தெளிவான வார்த்தைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்கா கட்டுவதைத் தடுத்த பின்பும் பொருத்தமில்லாத வாதங்களை வைத்து தர்கா கட்டலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். குகைவாசிகள் பற்றிய பின்வரும் வசனத்தை தர்கா கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு […]

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா?

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா? சமாதிகளைக் கட்டக் கூடாது; உயர்த்தக் கூடாது; பூசக்கூடாது என்று தெளிவான தடை இருந்தும் எப்படியாவது சமாதி கட்டுவதற்கு ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சித்து பின்வரும் ஹதீஸைக் கண்டு பிடித்துள்ளார்கள். حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ […]

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா? நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். எனவே அவர்களுக்கு நாம் தர்கா கட்டலாம் என்றும் ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் சின்னங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும், அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும். ஸஃபா, மர்வா ஆகிய […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் உயரமாக இருந்ததாகக் கூறப்படும் அறிவிப்புகளையும் தர்கா கட்டுவதற்கு ஆதாரமாக சிலர் எடுத்து வைக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வாதங்களை எடுத்து வைக்க முடியும். இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். […]

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதியைக் கட்டவும், அதன் மேல் கட்டடம் கட்டவும் தடை செய்திருப்பதற்கு தெளிவான சான்றுகள் இருக்கும் போது, அப்படி கட்டினால் இடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அதற்கு […]

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு! ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் […]

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி?

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நபிமார்களையும், நல்லவர்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்களின் அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது தான் அவர்கள் இணைகற்பித்த்தற்குக் காரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக எச்சரித்ததைப் பார்த்தோம். தனது அடக்கத்தலத்தில் தர்கா கட்டக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததையும் பார்த்தோம். தர்காக்கள் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க வேண்டும் என்று கடுமையான நிலைபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) […]

ஆன்மாக்களின் உலகம்

ஆன்மாக்களின் உலகம் மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்கிறார்கள். அவரது மனைவியை மற்றவர்கள் மணந்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லா முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத மக்களும் சரியான கருத்திலேயே இருக்கிறார்கள். மனிதன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும், உயிர்ப்பிக்கப்படும் வரை […]

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்! கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 39:42)➚ தூக்கத்தின் போதும், மரணிக்கும் போதும் உயிர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் இறைவன் தூக்கத்தில் கைப்பற்றப்பட்ட […]

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள் மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) “இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள். “அவர் அல்லாஹ்வின் தூதரும் அவனது அடியாருமாவார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது […]

மரணத்துடன் முடிவுக்கு வரும் செயல்பாடுகள்!

மரணத்துடன் முடிவுக்கு வரும் செயல்பாடுகள்! மனிதன் மரணித்து விட்டால் மூன்று விஷயங்கள் தவிர அவனது எல்லா செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர். மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 3358) ➚ நிலைத்திருக்கும் வகையிலான […]

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா? நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:154)➚ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) […]

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா? பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் […]

செருப்போசையைக் கேட்கும் என்பது ஆதாரமாகுமா?

செருப்போசையைக் கேட்கும் என்பது ஆதாரமாகுமா? மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாகப் பார்ப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு […]

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா? கொடுக்கலாம் அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாக சட்டம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. குர்பானியும் அகீகாவும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும். காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட […]

ஏழையாக இருந்த நபியவர்கள் எப்படி தர்மம் செய்திருப்பார்கள்?

ஏழையாக இருந்த நபியவர்கள் எப்படி தர்மம் செய்திருப்பார்கள்? ஏழைகள் தர்மம் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட தர்மம் செய்யும் ஏழைகள் இருந்தனர். அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்வார்கள். பணக்காரர்கள் அளவுக்கு அதிகம் தர்மம் செய்யாவிட்டாலும் தம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்வார்கள். ரமலான் வந்து விட்டால் வழக்கத்தை விட அதிகம் […]

வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்

முன்னுரை வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (அல்குர்ஆன்: 3:9)➚ وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன்: 3:85)➚ இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை […]

இறந்தோரை அவுலியா (இறைநேசர்) என நாம் தீர்மானிக்க இயலுமா?

முன்னுரை اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏ الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏ لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ؕ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏ கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் […]

மீலாதும் மவ்லிதும்

மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்லிது எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8) ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்? […]

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

முன்னுரை திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தைகளைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இறைத்தூதராக இருந்தாலும் இறைமார்க்கத்தில் அவர் தன்னுடைய சுயக்கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம். […]

முன்னோர்களை, பெருங் கூட்டத்தை பின்பற்றலாமா?

முன்னுரை இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது. وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏ அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் […]

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதின் அவசியம்

முன்னுரை இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்கு பலன்தரக்கூடியது என்று வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான். فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ […]

இவர்கள் தான் காதியானி மதத்தினர்!

முன்னுரை தன்னை ஒரு நபி என வாதிட்ட மிர்சா குலாமையும், காதியானி மதத்தினரைப் பற்றியும் இந்த உரையிலே தோலுரிக்க இருக்கிறோம். مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:40) وَإِنَّهُ سَيَكُونُ فِي […]

இணைவைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

முன்னுரை இணைவைப்பதின் பேராபத்தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணைவைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதின் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணைகற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான். يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ‌ ؕ اِنَّ اللّٰهَ […]

ஓரிறைக் கொள்கைக்காக போர் செய்தல்

முன்னுரை இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத்தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்கு கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்கு பல்வேறு நிலைகளை திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத்தான் வலியுறுத்துகிறது. இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்கு சிலர் திருமறைக்குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்கு தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை […]

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இறைவனுக்கு இணை வைப்பதன் தீமைகளைப் பற்றி இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம்! இறைவனின் கட்டளை! وَاعْبُدُوا اللّٰهَ […]

இன்சூரன்ஸ் பற்றிய விளக்கம் தேவை!

இன்சூரன்ஸ் பற்றிய விளக்கம் தேவை! கேள்வி : நான் எனது குடும்பத்தின் வருங்காலத்தைக் கருதி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பிரிமியம் செலுத்திட விரும்புகின்றேன். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் Tern insurance (plan No : 164) என்றொரு திட்டம் உள்ளது. இதில் Jeevan amulya (plan No 190) என்ற வகை உள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்திட வயது உச்ச வரம்பு 70 ஆகும். இத்திட்டக் காலம் […]

016. ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா? மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும். இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1521) ➚ அம்ர் பின் […]

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. கேள்வி : 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஷா தொழுகை நடத்தியது யார்? நான் மார்க்க அறிஞர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை. மலக்குமார்கள் தொழவைத்தார்கள் என்றும் ஆண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பெண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று […]

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா?

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா? தொழலாம். கேள்வி: நான் ஐவேளைத் தொழுகைக்காக ……. உள்ள மஸ்ஜிதே நூர் தவ்ஹீத் பள்ளிக்குச் சென்று வருகிறேன். அங்கு தொழுகைக்காக இமாம் யாருமில்லை. ஆதலால் அங்கு யார் தவ்ஹீத் வாதி வருகிறாரோ (குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தவர்) அவர் தொழவைக்கலாம். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு நபர் இமாமத் செய்கிறார். அவர் பீடி மண்டி நடத்துகிறார். அவர் இமாமத் செய்யலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் மார்க்கத் […]

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா? கூடாது. கேள்வி : அல் குரான் (62:9➚) – “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான். நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் […]

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

முன்னுரை “பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : ஆயிஷா (ரலி), நூல் : (ஹாகிம்: 3494) ➚ இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ […]

பார்வையைப் பாதுகாப்போம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம், ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் […]

ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை!

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த உரையில் 1. ஸகாத் கட்டாயக் […]

மத்ஹபு கூட அங்கீகரிக்காத பராஅத் இரவு!

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான், ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில், மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும். இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு […]

01) முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இதை ஆரம்பிக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நபிகளாரின் வார்த்தைகளில் ஏராளமான அறிவியல் முன்னறிவிப்புகளை இறைவன் செய்துள்ளான். இதனை கேள்விப்படும் போது இது இறைதூதரின் சொல் தான் என்று நம்மால் உறுதியாக நம்ம முடியும். இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இதை பார்க்க […]

06) ஆதமே மனிதர்களின் தந்தை!

நபிமொழிகளில் ஏராளமான அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் ஒன்று إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِعَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான […]

05) வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி), (புகாரி: 247) ➚ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى […]

முயற்சி செய்தால், இறைவன் மாற்றம் தருவான்!

முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! வரதட்சனை போன்ற தீமைகளை கண்டு மனம் வருந்தாமல், அதில் பங்கு கேட்ட ஆலிம்கள் இருந்த இந்த தமிழகம் இறைவன் அருளால் மஹர் கொடுக்கும் சமுதாயமாக மாறியுள்ளது என்றால், அதற்கு இநத ஜமாஅத்தின் கடின உழைப்பு இறைவன் அளித்த பரிசு என்றே சொல்லலாம். இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது. அந்த வகையில், இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். […]

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி

முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் பித்அத்களை ஒழித்து, மார்க்க அடிப்படையில் சுன்னத்தை பேணும் மக்களை உருவாக்கி வருகிற ஒரு அமைப்பு. இதில் உள்ள தலைவர்களுக்கு அரசியல் ஆதாயம், நோக்கம் கிடையாது, பணம் எங்களது நோக்கம் கிடையாது. இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஸஹர் பாங்கு அறிமுகம் 621- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ : حَدَّثَنَا زُهَيْرٌ […]

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு வகையான தவறுகள் தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள். […]

நரகத்திற்கு கொண்டு செல்லும் பொய்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் சிலரிடம் தவறைச் செய்யாதே! என்று கூறினால் நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுவர். இதைச் செய் என்று கூறினால் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறக்கூடியவர்களும் உண்டு. நல்லதை ஏற்பதைவிட தீயதை ஏற்று நடக்கூடியவர்கள்தான் மனிதர்களில் அதிகம். அந்த தீயதிலே மிக மோசமானது பொய் […]

கேள்விகள் ஒருவிதம் பதில்கள் பலவிதம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்களும், ஏனைய கொள்கையைச் சார்ந்தவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் பதிலளித்துள்ளர்கள். கேள்விகள் எப்படி அமைந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் பதிலும் அமைந்திருந்தன. கேள்விக்குரிய பதிலும் கூடுதல் விளக்கமும் கேள்விக்கான பதிலைச் […]

சொர்க்கத்தில் இடம் வாங்குவோம்

முன்னுரை இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாறாமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும். இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். […]

நபியவர்களின் பயம்

முன்னுரை மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம் மாறிவிடுகிறோம்! நபியவர்கள், ”நமக்கு அதிகமாக செல்வம் கொடுக்கப்பட்டு, அந்த உலகாசையானது இந்த சமுதாயத்தை அழித்துவிடுமோ” என்று பயந்திருக்கிறார்கள் என்றால், உலக ஆசையின், பொருளாதாரத்தின் பின் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம் பனூ […]

உலக ஆசையா? சொர்க்க ஆசையா?

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான். உலகத்தின் நிலை زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ […]

Next Page » « Previous Page