Author: Trichy Farook

தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!

தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்! பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் […]

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை […]

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்  எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் :   (அல்குர்ஆன்.15:74➚.)  (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea) நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?” – (அல்குர்ஆன்: 9:70)➚.) முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை […]

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா? “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார். யார் அவர்? 200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை தங்களின் தலைவராக ஏற்றுள்ளார்கள். அவருக்காக தங்களின் உயிரையும் அர்பணிக்கத் துணிவார்கள். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்ததில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவருக்கு ஒரு சிலையுமில்லை. ஓவியப் படமுமில்லை. அவர் எப்படி இருப்பார் என்றே தெரியாமல் அவரை நேசிக்கிறார்கள்! ஏன்? எழுதப் படிக்கத் தெரியாதவர். அவர் யாரிடமும் கல்வி பயின்றதில்லை. ஆனால் அவரது ஒவ்வொரு […]

நயவஞ்சகர்கள் பற்றி இரு கருத்து கொண்ட போது

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (அல்குர்ஆன்: 04:88)➚ என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம்

63:8➚ يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ‌ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ 63:8➚. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.   ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் […]

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

குனூத் நாஸிலாவின் நோக்கம் குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும்  காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள். عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ […]

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே! தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். […]

நபிகளாரை அல்லாஹ் கண்டித்த தருணங்கள்

அன்பிற்குரிய சகோததர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதன் என்ற அடிப்படையில் சில கட்டங்களில் சில முடிவுகளை எடுத்தார்கள். அந்த நேரத்தில் அல்லாஹ் நபிகளாரை கண்டித்தான். அல்லாஹ் நபிகளாரை கண்டித்த நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..  நபிகளாரை அல்லாஹ் கண்டித்த தருணங்கள் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அந்த சமுதயாத்தை சீர்திருத்துவதற்காவும், அச்சமுதாய மக்களுக்கு சத்தியத்தை எடுத்து […]

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணைவைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் […]

தேசியம், மொழி உணர்வுகள்

தேசியம், மொழி உணர்வுகள் மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப் பற்றும், மொழி வெறியும் திகழ்கின்றன. இலங்கை பற்றி எரிவதற்கும், இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழி வெறி தான் காரணம். இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் […]

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்னிறுத்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான். குர்ஆனிலும், ஹதீஸிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அவற்றை இந்த உரையில் கான்போம். கடுகளவும் இருக்கக் கூடாது لَا يَدْخُلُ النَّارَ […]

மனிதர்களை இறாஞ்சிச் செல்லும் இராட்சதப் (யானைப்) பறவைகள்!

மனிதர்களை இறாஞ்சிச் செல்லும் இராட்சதப் (யானைப்) பறவைகள்! அல்லாஹ்வுக்கு  ஒருமுகப்பட்ட அடிமைகளாக திகழுங்கள்.அவனோடு எதனையும் இணை  வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு  இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகிவிடுவார். (அல்குர்ஆன்: 22:3)➚.) இணைவைக்கும் செயலை செய்யும் ஒரு மனிதனின் நிலையை, ஒரு உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான். பிற […]

ஹதீஸில் கூறப்படும் உதாரணங்கள் – ஓர் அறிவியல் பார்வை!

ஹதீஸில் கூறப்படும் உதாரணங்கள்: – ஓர் அறிவியல் பார்வை!! அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனித குல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறைத்தூதர்களுக்கு வழிகாட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கக்கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண்முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த வகையில், ஹதீஸ்களில் இடம்பெறும் […]

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர்

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர் அல்-ஆண்டலஸ் ((Al-Andalus) ) என்ற அரபி வார்த்தை வரலாற்றில் இபெரியன் பெனின்சுலா (Iberian Peninsula)) என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் ஆட்சி செலுத்திய ஓர் மலைப் பிரதேசமாக இடமாகும். இது ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாடுகளோடு தொடர்புடைய ஒரு மலைப் பகுதியாகும். இடைக் கால அரபு காலத்தை சேர்ந்த வரலாறு மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், அல்-ஆண்டலஸ் பகுதியை தண்ணீர் வளமும் பல் வகையான செடிகளும், பழங்களும் செழித் தோங்கக் கூடிய […]

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்) என்ன நினைத்தோமோ அது நடந்தே விட்டது. காலம்காலாமாய் சங்பரிவார சக்திகளின் வரலாற்றுத் திரிபு வேலைகள் நடந்து வரும் நிலையில் அதன் உச்சகட்டமாக தற்போது “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி வந்தே விட்டது இந்தியாவில் வாழ்ந்த பல சங்பரிவார் கொள்கை கொண்ட தேச துரோகிகளின் வரலாறுகளை மறைத்து அவர்களை தியாகிகளாக மாற்றி வைத்த சங்பரிவார கும்பல்களின் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கி விட்டது. சாதி வெறியால் […]

சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம்

சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம் சாதிகள் இல்லையடி ஜெகன்மோகன் உயர்த்தி சொல்லல் பாவம் என்ற பாரதியாரின் பாடலை பள்ளிக்கூடங்களின் முகப்புப் பக்கத்தில் அச்சடிக்கும் பள்ளி கல்வித்துறை, மாணவர்களுக்கு சாதியின் கொடுமைகள் குறித்து சரியான முறையில் பாடம் எடுக்காத காரணத்தால்தான் பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களிடம் சாதி வெறி தலை தூக்குகின்றது. கடந்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூட ங்களில் நடைபெற்ற சாதியக் கயிறுக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூடங்களில் பயிலும் […]

பாபர் பள்ளியை இடித்த பல்பீர் சிங் முஸ்லிமாக மாறி 90 மசூதிகளை கட்டினார்

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார். சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார். முகமது அமீர் […]

மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா

மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா இந்திய நாடு பண்முகத்தண்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடு. இப்படி பட்ட இந்திய நாட்டில் தற்போது நிலவி வரும் மதவாத சக்திகளின் அராஜகம், அடிதடி மற்றும் கொலை செயல்கள் ஒரு புறம் வரம்பு மீறி சென்றுகொண்டிருந்தாலும் அதை தடுக்க வேண்டிய மத்திய அரசு அதை கண்டும்காணமல் இந்த செயலுக்கு மௌனமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறது. அதிலும் கல்வி மற்றும் அரசுத்துறையில் மதத்தை தினிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளி […]

பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்!

பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்! பத்துமாதம் சுமந்து பெற்ற தாயை நடுரோட்டில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தர்புரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி பட்டம்மாள். கணவன் இறந்து போன நிலையில் தன் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் பட்டம்மாள். இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். பட்டம்மாளி ன் பிள்ளைகளில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக […]

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன்

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன் கடல் மட்டம் தற்போது முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதையடுத்து உலகின் அனைத்து நீர் நிலைகளும், சமுத்திரமும் உயர்ந்து வருவதாக நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் கண்டறிந்திருக்கின்றனர். இது குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த ஆய்வறிக்கையை ஐ நா சபை சமீபத்தில் […]

உயிர் காத்த இஸ்லாமியர்கள்

உயிர் காத்த இஸ்லாமியர்கள் “பத்துக்காசு முருக்கு பள்ளிவாசலை நொறுக்கு” என்கிற துவேச முழக்கத்துடன் செல்லும் விநாயகர் ஊர்வலத்தால் வருடா வருடம் நாடே ஒருவிதமான பரபரப்பிற்குத் தள்ளப்படுகின்றது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு குறித்து மிகவும் கவலையடையும் நிலை உண்டாகின்றது. விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து தங்களின் அரசியல் ஆதாயத்தை அடைய பல தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை குறிவைத்து கோசங்கள் எழுப்புவதும், பள்ளிவாசலின் முன்னால் நின்று குத்தாட்டம் போடுவதும், பள்ளிவாசல்களுக்குள் சாரய […]

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்”

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்ற செய்தியை தொடர்ச்சியாக அறிந்து வருகின்றோம். அந்த வரிசையில் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த இளம் ஜெர்மன் கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.மேலும் டேனி பிளம் இஸ்லாம் குறித்த தனது முதல் வார்த்தையாக அவர் கூறும் போது, இஸ்லாம் என்பது தூய நம்பிக்கை மற்றும் […]

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்”

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்” ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய மார்க்கத்தில் உலகளாவிய அளவில் சாரைசாரையாக மக்கள் இணைந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்பது குறித்து ஏராளமான புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கின்றது. அந்த வரிசையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவரான ஜார்ஜியாடஸ் என்ற இயற்பெயர் கொண்ட மக்களால் “டயம்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற பிரபல்யமான பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர் மிகச் சிறந்த ராப் இசை […]

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி”

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி” பல்வேறு தடைகளை உடைத் தெறிந்து எதிர்ப்பவர்களின் உள்ளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது இஸ்லாம்.! உலக அளவில் பிரபலமாக இருக்கின்ற பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் இஸ்லாமிய ஜோதி ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பாலிவுட் நடிகர் ஓம்புரி அவர்கள் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இவர் பல்வேறு படங்களை தயாரித்தும், பல படங்களில் நடித்தும் உள்ளார். நடிகர் ஓம்புரி அவர்கள் மரணமடைந்து இரண்டு […]

நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..!

நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..! நாம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்கையில் ஏராளாமான சங்கடங்களை சந்தித்து இருக்கிறோம். சில சங்கடங்கள் நம்மையே பாதித்து இருக்கிறது என்றாலும் அதிலிருந்து ஏராளாமான பாடங்களை கற்று இருப்போம். அதே போன்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்கையிலும் சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உண்மையில் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன.? என்பதை  காண்போம்.. நவிகளாரின் நற்குணம்  وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ முஹம்மதே.! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: […]

அருள் பொங்கும் மாதமே! வருக!

அருள் பொங்கும் மாதமே! வருக! இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம். அருள் பொங்கும்மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களைஅதிகரிக்கச் செய்கின்ற மாதம்! ‘பொறுமையைப் போதிக்கின்றமாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில்அக்கறை செலுத்தவைக்கின்ற மாதம்! இது போன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக்கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்துவைத் திருக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில்வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு […]

வாரி வழங்கிய வள்ளல் நபி 

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகளாரின் வாழ்கை ஏழ்மையாகவும் எளிமையாகவும் அமைந்து இருந்தது. தன் வாழ்கையில் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அது போன்ற நபிகளார் அவர்களின் வாழ்க்கையில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..  நபிகளாரின் பிறப்பு வளர்ப்பு வாணிபம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தமது […]

இஸ்லாத்தை ஏற்ற “ஸீன் ஸ்டோன்”

இஸ்லாத்தை ஏற்ற ஸீன் ஸ்டோன் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வேகமாக உலகில் வாழ்கின்ற மனிதர்களின் உள்ளங்களை கவர்ந்திழுக் கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கம் உலக அளவில் பிரபல்யமாக கருதப்படுகின்ற பல நபர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவி சென்று, அவர்களை இஸ்லாத்தை தழுவ செய்கின்ற காட்சிகளை கண்கூடாக பார்க்க முடிகின்றது. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும், உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன், “ஸீன் ஸ்டோன்” இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக […]

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.! முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதை தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக் கிருமிகளின் பார்வையும், செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக் கின்றார்கள். ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாக காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. […]

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.! இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் என்றைக்காவது மதத்தின் பெயரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்களா.? இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை அமீரகத்தில் 14 லட்சம், கத்தாரில் மூன்றரை லட்சம், குவைத்தில் மூன்றரை லட்சம், ஓமானில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம், பஹ்ரைனின் ஒரு லட்சத்து 75 ஆயிரம், சவுதி அரேபியாவில் 50 ஆயிரம்  என வளைகுடா நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 27 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் […]

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்பவர்களை, அவர்கள் வாயாலேயே அதை ஆதரித்து பேச வைக்கின்ற அற்புதத்தை இறைவன் அவ்வப்போது நிகழ்த்துவதை நாம் காண்கிறோம். சில ஆண்டுகள் முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, ஒரு பரபரப்பு தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது. அந்த தீர்ப்பின்படி,கோவில்களுக்குள் நுழைபவர்கள், அரைகுறை ஆடைகளை அணிவதற்கு தடை என்கிற பரபரப்பு தீர்ப்பை கூறியிருந்தார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன். இதனை மறந்து விட்டவர்கள் தற்போதும் ஊடகங்களில் அமர்ந்து கொண்டு […]

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள், தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள்

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள்,தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள் உலகின் பல தொழில் துறைகளில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு அச்சாணியாக பனூ மூஸா சகோதரர்களின் க ண் டு பி டி ப் பு க ள் விளங்குகின்றன. ஜாஃபர் முஹம்மத், அஹ்மத், அல் ஹஸன் ஆகிய மூவரும் பனூ மூஸா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். 800ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிறந்த இவர்கள் கணித துறையில் கிரேக்கர்களின் ஆக்கங்களை அரபுலகத்திற்கு […]

விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.!

விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.! இன்றைய நவீன உலகில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மொபைல் போன் இல்லாதவன் முழு மனிதனே இல்லை என்ற அளவுக்கு சகமனிதர்கள் நம்மை தவறாக பார்க்கும் நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த மொபைல் போன் அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் நமக்கு வழங்கி கொண்டிருந்தாலும், அதைவிட மிக அபாயமான ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது வாட்சப் மூலமாகவும், […]

சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு

சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று மாணவர்களுக்கு வழங்கும் பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்தில் அச்சிட்டுள்ள நிலையில் அதே பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் தங்கள் சாதியை உணர்த்தும் வகையில் கைகளில் விதவிதமான கலரில் கயிறுகளைக் கட்டி வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கைகளில் கயிறு அணிந்து வருவதைத் தடை செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை […]

நல்ல வார்த்தையும் தீய வார்த்தையும்.

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் வார்தைகள் என்பது  பல வகைகளாக இருக்கின்றது. உதாரணமாக அன்பு வார்த்தைகள், கோப  வார்த்தைகள்,கேலி வார்த்தைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள்  இப்படி பல வார்த்தைகள் இருந்தாலும் நாம் ஏற்றிருக்கின்ற இஸ்லாமிய கொள்கையில் இந்த வார்த்தைகளுக்கும் தனி இடம் இருக்கிறது. நாம் பேசுகிற சில வார்த்தைள் இறைவனிடம் நன்மையையும் பெற்றுத் […]

பொதுப்பணியும் இறைப்பணியே.!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் இன்று வாழும் மக்களிடையே ஏராளமான தேவைகளும், பிரச்சனைகளும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அத்துணை தேவைகளையும் சேவைகளாக நாம் செய்தால் அதன் பிரதிபலன் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் தருவான். சமூக பணி செய்வதும் இறைப்பணிக்கு சமம் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் எவ்வாறு எல்லாம் தாங்கள் […]

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் அல்லாஹ்வை நம்புவது உட்பட மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும். இதன் காரணமாகவே, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வை நம்புவது குறித்து கூறப்படும் ஏராளமான இடங்களில் மறுமை சம்பந்தமான […]

மனிதனைப் பற்றி மாமறை.!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனால் படைக்கப்பட்டவன் தான் மனிதன். இறைவனின் அடிமைகளான மனித இனம் தன்னைப்படைத்த இறைவனை முற்றிலும் புறக்கணித்து விடுகிறது. தரமிழந்த வாழ்கை நடத்தும் தரங்கெட்டவனாக மனிதன் திகழ்கிறான். மனிதன் யார்? அவனைப்படைத்தது யார்? அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இவ்வுலகத்துடன் மட்டும் மனித வாழ்கை முடிந்து விடுகிறதா? மனிதன் எப்படி வாழ வேண்டும் […]

மறுமையின் முதல் நிலை மண்ணறை.!

மறுமையின் முதல் நிலை மண்ணறை.! மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகளைப் பற்றி அறிந்து அதிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும். மண்ணறை வேதனை اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ “காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் […]

கவனத்துடன் இம்மையை கடப்போம்..!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கவனமின்மை , பொடுபோக்கு, அலட்சியம், இன்னும் பல சொற்களால் அழைக்கப்படும் மனிதனின் கவனக்குறைவு இன்று பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு “படி படி” என அனுதினமும் கூறியும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை ஆழமாக கூறியும் அவர்களின் அனுபவ உபதேசத்தை பொருட்படுத்தாது கவனக்குறைவாக இருந்த மாணவர்கள் பரீட்சையின் போது […]

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும் 11:25➚ وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏ 11:26➚ اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ 11:27➚ فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ […]

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது. ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் […]

பேராசையிலிருந்து விடுபடுவோம்.!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு […]

03b) உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.?

உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.? உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்: إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஹ்ம(d)துஹு, வநஸ்தஈநுஹ். மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலஹ், […]

பல்லியைச் சாப்பிடலாமா?

பல்லியைச் சாப்பிடலாமா? நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள் அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)(முஸ்லிம்: 4507) ➚ மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும். […]

எலிக்கறி சாப்பிடலாமா?

எலிக்கறி சாப்பிடலாமா? எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் வேட்டையாடும் நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),(முஸ்லிம்: 3914) ➚ ஒன்றை உண்பது ஹலாலா? […]

எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா?

எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? {وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ (29)} [الحج: 27 – 29] “மக்களுக்கு ஹஜ்ஜைப் […]

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். 971 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ […]

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்!

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்! ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.  ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்று கூறியுள்ளர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் […]

Next Page » « Previous Page