Tamil Bayan Points

மனிதனைப் பற்றி மாமறை.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 28, 2023 by Trichy Farook

மனிதனைப் பற்றி மாமறை 

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 

இறைவனால் படைக்கப்பட்டவன் தான் மனிதன். இறைவனின் அடிமைகளான மனித இனம் தன்னைப்படைத்த இறைவனை முற்றிலும் புறக்கணித்து விடுகிறது. தரமிழந்த வாழ்கை நடத்தும் தரங்கெட்டவனாக மனிதன் திகழ்கிறான். மனிதன் யார்? அவனைப்படைத்தது யார்? அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

இவ்வுலகத்துடன் மட்டும் மனித வாழ்கை முடிந்து விடுகிறதா? மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற பல தகவல்களை திருக்குர்ஆன் வழங்குகிறது. அப்படிப்பட்ட செய்திகளை இந்த உரையில் காண்போம்..

மனிதன் தன் படைப்பை சிந்திக்கட்டும்

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏

இதற்கு முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாகப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா?  

 (அல்குர்ஆன்: 19:67)

மண்ணால் படைக்கப் பட்டமுதல் மனிதர் 

الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ‌ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‌ۚ‏

அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.

 (அல்குர்ஆன்: 32:7)

பின்பு விந்தினால் படைக்கப்பட்டான்

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏

அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

 (அல்குர்ஆன்: 16:4)

கர்ப்பப்பையில் சுமக்கப்ப் பட்டான்

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

 (அல்குர்ஆன்: 31:14)

ஆண்-பெண் என படைத்தவன் இறைவனே!

 لِّـلَّـهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

 (அல்குர்ஆன்: 42:49,50)

கண்-நாவை தந்தவன் இறைவனே!

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏
وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ

அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

 (அல்குர்ஆன்: 90:8,9)

அழகிய அமைப்பில் படைக்கப்பட்டான்

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

 (அல்குர்ஆன்: 95:4)

இறைவனை வணங்கத்தான் மனிதன்,

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

 (அல்குர்ஆன்: 51:56)

மனிதனின் பிடரி நரம்பைவிட நெருக்கமானவன் இறைவன்

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

 (அல்குர்ஆன்: 50:16)

மனிதன் செல்வத்தை விரும்புவான் 

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

 (அல்குர்ஆன்: 100:8)

கஞ்சன்

 قُلْ لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ خَزَآٮِٕنَ رَحْمَةِ رَبِّىْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا

“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் – மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.  

(அல்குர்ஆன்: 17:100)

பலவீனமானவன் 

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏

அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

 (அல்குர்ஆன்: 4:28)

அவசரக்காரன்

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.

 (அல்குர்ஆன்: 17:11)

தர்க்கம் செய்பவன் 

وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا‏

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.

 (அல்குர்ஆன்: 8:54)

கஷ்டம் ஏற்பட்டால்..

فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ‌ؕ بَلْ هِىَ فِتْنَةٌ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏

மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

 (அல்குர்ஆன்: 39:49)

நன்றி கெட்டவன் 

وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.

 (அல்குர்ஆன்: 14:34)

மனிதன் இறப்பவனே!

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;

 (அல்குர்ஆன்: 3:185)

மறுமையை மறுக்கிறான் 

بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ‌ۚ‏

يَسْـَٔـلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِؕ‏

எனினும் மனிதன் தன் எதிரே வரவிருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

 (அல்குர்ஆன்: 75:5,6)

மறுமையில் தவிப்பான் 

يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ۚ‏

அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

 (அல்குர்ஆன்: 75:10)

மனித சமுதாயமே! உன் நிலையைப்பற்றி இவ்வளவு தெளிவாக மாமறை கூறுகிறதே! உன் வாழ்கையை எப்படி அமைத்துக்கொள்ள போகிறாய்? இன்று உன் வாழ்வின் முறை சரியானதாக இருந்தால், நாளை (மறுமையில்) வெற்றிக் கனியை (சொர்க்கத்தை) பெற்றுத் தரும். சிந்தித்து செயல்படு! நிச்சயம் மறுமையில் வெற்றி பெறுவாய்.!