Author: Trichy Farook

கொலை கொடியது

கொலை கொடியது இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது; வாளால் தனது சித்தாந்தங்களைப் பரப்புகின்றது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும். இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற இவர்களது முடிவு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனையோ, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையோ ஆழமாக வாசித்து எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, போர் குறித்துக் குர்ஆன் கூறும் வசனங்களை அவசர கோலத்துடன் படித்து எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இது. (போர்  நெறிமுறைகள் குறித்து […]

கரிந்து போன முகத்துடைய பெண்

கரிந்து போன முகத்துடைய பெண் 5149 حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، حَدَّثَنَا النَّهَّاسُ بْنُ قَهْمٍ ، قَالَ : حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَنَا وَامْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ يَوْمَ الْقِيَامَةِ – وَأَوْمَأَ يَزِيدُ بِالْوُسْطَى وَالسَّبَّابَةِ – امْرَأَةٌ […]

கணவனது திருப்தியைப் பெற்ற மனைவி

கணவனது திருப்தியைப் பெற்ற மனைவி 1161 حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ ، عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ ، عَنْ أُمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ، وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ […]

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் […]

08) மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்

மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள் மறைவான இடம்.. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் (மக்களை விட்டும்) மிகவும் தூரமாக உள்ள இடத்திற்குச் செல்வார்கள். அறி : முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல் : அபூதாவூத் (1) மறைக்காததன் விளைவு ‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது ’இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், […]

07) கனவின் ஒழுங்குகள்

கனவின் ஒழுங்குகள் நல்ல கனவு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 91. கனவுக்கு விளக்கமளித்தல்.. கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும் அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல […]

06) உறங்கும் ஒழுங்குகள்

உறங்கும் ஒழுங்குகள் தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்.. ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள் எண்ணெய் விளக்குகளை அணைக்க வேண்டும்.. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மதீனாவில் இரவு நேரத்தில் […]

05) பாத்திரங்களை பற்றிய சட்டம்

பாத்திரங்களை பற்றிய சட்டம் தங்கம்,வெள்ளி தட்டில் சாப்பிடத் தடை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் : பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில்இ அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும்இ மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்“ ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான். […]

ஒட்டகம் ஓர் அற்புதம்

ஒட்டகம் ஓர் அற்புதம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 88:17)➚ இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது! தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ: 50 டிகிரியிலும் வியர்க்காது ஆடுகளையும், […]

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம் இஸ்லாமிய குடும்பவியலைப் பொறுத்தவரை, அதற்கென அடிப்படையான விதிகள் உள்ளன. அந்த அழுத்தமான விதிகளின் படிதான் இஸ்லாமிய குடும்பவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் என்னவென்பதை ஒவ்வொன்றாகத் தெரிந்து, தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நம்முடைய குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக, சரியான வாழ்க்கை நெறியில் அமைந்த குடும்பமாக இருக்கமுடியும். ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும் இஸ்லாமிய குடும்பவியலில் முக்கிய அம்சம் என்னவெனில், ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பத்தைக் கட்டியமைக்கின்றனர். பொதுவாக எங்கெல்லாம் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் […]

உம்மு ஹராம் சம்பவம்

உம்மு ஹராம் சம்பவம் உண்மை நிலையும் உளறல்களுக்கு விளக்கமும் அன்சாரி குலத்தைச் சார்ந்த உம்மு ஹராம் (ரலி) என்ற நபித்தோழியரின் வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்ப்பார்கள்; உணவளிப்பார்கள் என்று ஒரு செய்தி புகாரி, முஸ்லிம் இன்னும் பல ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இது(புகாரி: 2789, 2800, 2895, 2924, 6282, 7002) ➚ஆகிய […]

நாய் மற்றும் பூனை விற்கலாமா?

நாய் பூனைகளை விற்க கூடாது நபி அவர்கள் அதற்கு தடை  விதித்து உள்ளார்கள்  அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள். (முஸ்லிம்: 3194) ➚ நாய் மற்றும் பூனை விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்..இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்… இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்! சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை […]

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ? ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். 1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ […]

ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்?

ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்? வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்! குழப்பங்கள் தோன்றும் முன்! بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். […]

திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்!

திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்! அல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் தங்களுக்குரிய இயற்கை பண்புகளோடு வாழ்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு எல்லைக்குட்பட்டு வாழ்கின்றோம்.  அல்லாஹ்வையும் அவன் கொடுத்த வேதத்தையும் நம்பி மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அதற்குரிய காரணமாகும். அந்த வெற்றியை தீர்மானிப்பது இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் ஆகும். அந்த […]

திருக்குர்ஆன் பார்வையில் உணவு!

உணவு ஓர் அருட்கொடை: உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான்.  அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.  இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை. உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 […]

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்! நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன. விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. இத்தீமைகள் […]

பிறர் நலன் நாடுவோம்

பிறர் நலன் நாடுவோம் இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது, பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்பகால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது. ஒரு முஸ்லிம் […]

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்! மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல் சிறப்புக்களை வழங்கி ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனையும் அருளையும் அடைய வழி வகுத்துள்ளான். شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ ‘ரமளான் […]

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை! உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில் எளிமைக்கு முற்றிலும் நேர்மாற்றமாக வாழ்ந்து வருவதையும் காண்கிறோம். காரணம், இவர்கள் “ஊருக்கு உபதேசம்”  நமக்கு இது ஒரு வேஷம் என்ற குறிக்கோளோடு செயல்படுவார்கள். பொதுவாக எளிமை என்றால் வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதிலும் ஒருவர் எளிமையை […]

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்! அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும். இஸ்லாம், பிற மதக்கொள்கை கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தோடு தனித்து விளங்க காரணம் சக மனிதர்களுக்கு நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு […]

மறுமையின் சாட்சிகள்

அல்லாஹ்வே முதல் சாட்சியாளன் சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும் தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள் கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி உடல் உறுப்புகளின் சாட்சி ஜின்களின் சாட்சி உயிரற்ற பொருட்களின் சாட்சி முன்னுரை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு […]

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம்

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 38) ➚ புனிதமிகு ரமளான் வந்துவிட்டது. மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவதைப் போன்று பூத்துக் குலுங்கும் நன்மைகளைப் பறிப்பதற்கு மக்கள் போர்க்கோலம் பூண்டு, போர்க்களம் புகுந்துவிட்டனர். அருள்மிகு ரமளான் என்றதும் திருமறைக் குர்ஆனின் ஒலி எங்கு […]

யாஸீன் மற்றும் துஃகான் அத்தியாயம் குறித்த செய்திகள்

யாஸீன் மற்றும் துஃகான் அத்தியாயம் குறித்த செய்திகள்  حَدَّثَنَا حُمَيْدُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَخْلَدٍ الْوَاسِطِيُّ الْبَزَّازُ قَالَ: نا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: نا أَغْلَبُ بْنُ تَمِيمٍ، عَنْ جَسْرٍ أَبِي جَعْفَرٍ، عَنْ غَالِبٍ الْقَطَّانِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ يَاسِينَ فِي يَوْمٍ وَلَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ […]

பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா

பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா இரண்டு பெருநாட்களின் போதும் “தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்” என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது “தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறலாம் என வரும் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாக உள்ளன. பலவீனத்துடன் அவை ஒன்றுக் கொன்று முரணாகவும் உள்ளன. ஒரு செய்தியில் நபியவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்றும் […]

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

நிழலும் அருட்கொடையே! படைத்தவனுக்குப் பணியும் நிழல் நிழலை நிலையாக்கும் வல்லவன் நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர் நிழல் நிறைந்த சொர்க்கம் சுவனத்தில் நிழல் நிழலே இல்லாத நரகம் நிழலும் நேர்ச்சையும் நிழல்களை நாசப்படுத்தாதீர் நிழல்களைத் தடுக்காதீர் நிலையற்ற நிழல் உலகம் முன்னுரை : கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கோடை வெயில் அனலை அள்ளிக் […]

சந்திப்பின் ஒழுங்குகள்

சந்திப்பின் ஒழுங்குகள் ஒரு பெண்ணை ஐந்தாறு நபர்கள் கொண்ட, அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு விஷயமாகப் பார்க்கச் சென்றால் அதனை மார்க்கம் அனுமதிக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் அனைவரையும் விரட்டியடிக்கத் தேவையில்லை. இதுபோன்று ஒரு ஆணை, பல பெண்கள் சேர்ந்து ஏதேனும் மார்க்கம் அனுமதித்த காரியத்தை நிறைவேற்றுவதற்குச் சந்தித்தால் தவறில்லை. இதற்கு ஆதாரமாக நபியவர்கள் காலத்தில் நடந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் சம்பவத்தைக் ஆதாரமாகக் கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் […]

சிறுவர் இமாமத் செய்யலாமா?

இமாமத் செய்பவரின் தகுதியை நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை […]

சந்திப்புகளும் உரையாடல்களும்

சந்திப்புகளும் உரையாடல்களும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) […]

இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாதா?

இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாதா? நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் பள்ளிவாசலில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு அனுமதியுள்ளது என்பது மட்டுமின்றி, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) […]

கொலையில் முடியும் கள்ள உறவுகள்

ஆண்களோ, பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறிதவழச் செய்கின்ற காரியங்களை விட்டு விலகியிருக்க வாழவேண்டும் என இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகின்றது. அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்ற கட்டளையாகும். இதுபோன்ற தனிமை சந்திப்புகள் தான் தவறுக்குத் தூண்டுகின்றன.  இதில் அடங்கியிருக்கின்ற மற்றொரு […]

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

படைத்தவன் இருப்பதற்கான சான்று மொழிபேசும் உயிரினங்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவன் மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம் மொழியறிவை வளர்த்துக் கொள்வோம் மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள் மொழியறிந்தோரின் மகத்தான சேவை மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள் மொழியைப் பயன்படுத்தும் விதம் மொழி மூலம் வரும்  பிரச்சனைகள் முன்னுரை : கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது. மொழி என்பது மனிதர்களை வகைப்படுத்தும் காரணிகளுள் முக்கியமானதாக […]

10) ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில் அவர்கள் சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்… அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும். நினைவாற்றல் உள்ளவராக இருக்க […]

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி. அவர் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் […]

தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள்

தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நபியவர்கள் இந்த மனித சமூகத்திற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் எனவும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது. நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் […]

வந்த பின் சாகாதீர்

வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, திசை காட்டும் கருவியோ […]

அழகாக்கப்பட்ட அமல்கள்

தனி மனிதனின் வழிகேடு சமுதாயத்தின் வழிகேடு நியாயமாகும் தவறுகள் பரேலவிகளின் போலி நியாயம் சொக்கப்பனை ஒரு சோடனை வெற்றிலை – அது வெற்று இலை அல்ல (?) முன்னுரை : கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இதற்கு முன்னர் பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அழிக்கப்பட்டதற்கு அல்லாஹ் ஒரு முக்கியமான காரணத்தைக் கூறுகின்றான். அந்தச் செயல் நம்மிடத்தில் இருக்கின்றதா என ஒவ்வொருவரும் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறும் அந்தக் காரணம் என்னவென்று இப்போது இந்த […]

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம்  மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று […]

மஹ்ரமான உறவுகள்

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம்.  இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) […]

கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டால் என்ன செய்வது?

மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது? திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும். இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் […]

மூஸா நபியிடம் அல்லாஹ் கூறியது

மூஸா நபியிடம் அல்லாஹ் கூறியது ? “அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா?’ என ஒரு முறை இறைவனின் தூதர் மூசா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், “மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை நான் அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், குழி விழுந்த கண்களுடனும், தாகத்தால் வறண்ட நாக்குகளுடனும், பலவீனமான உடலுடன் பசியால் துன்பப்படும் வயிறுகளுடனும், காய்ந்த ஈரல்களுடனும் என்னை அழைப்பார்கள். மூஸாவே […]

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பெண்கள் விஷயத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று மார்க்கம் ஆண்களுக்குக் கட்டளையிடுவதோடு பெண்கள் விவகாரங்களில் தடம்புரளாமல் இருப்பதற்கு அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் போதித்துள்ளது. அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாணத்தைக் கடைப்பிடிப்போம் பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் […]

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகையின் முக்கியத்துவம்   அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும். தொழுகையின் முக்கியத்துவம் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் கூறிய போதனைகளில் சிலவற்றை மட்டும் இந்த உரையில் கண்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை என்றும், முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு […]

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும்

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும் உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் […]

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆ

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆ ஈருலக நன்மை பெற ( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ) “எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்: 2:201)➚ கவலைகள் தீர ( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ […]

நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ நற்செயல்கள் அதிகமாக ( رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ )   “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” […]

நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற ( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ ) ”என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (அல்குர்ஆன்:)➚ அல்லாஹ்வின் உதவி பெற ( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ ) “என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” (அல்குர்ஆன்: 29:30)➚

நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ துன்பத்திலிருந்து விடுபட ( لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ ) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். (அல்குர்ஆன்: 21:87)➚

நபி அய்யூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி அய்யூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ நோய் குணமடைய ( أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ) “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்: 21:83)➚

Next Page » « Previous Page