Author: Trichy Farook

13) திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

13) திக்கற்றோருக்கு விருந்தளித்தவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அபூதர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்த போது இணைவைப்பாளர்கள் அவரைத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு உணவளிப்பதற்காக தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சிரமப்படுவோரைத் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து விருந்தோம்பும் உயரிய பண்பும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்தது. அபூதர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:  ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் எடுத்து வந்து மக்கள் என்னைத் தாக்கினார்கள். […]

12) கொடைவள்ளல்

12) கொடைவள்ளல் இறைவன் அளித்த செல்வத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களின் செல்வம் தான் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தில் சுட்டிக்காட்டி அபூபக்ர் (ரலி) அவர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:  அபூபக்ரின் செல்வம் எனக்கு பலனளித்ததைப் போல் வேறு எவருடைய செல்வமும் பலனளிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது […]

11) நன்மையில் முந்திக்கொள்பவர்

11) நன்மையில் முந்திக்கொள்பவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பியதினால் மார்க்க விஷயங்களில் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரையும் விட முன்னால் நின்றார்கள். அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:  (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஜனாஸாவை (பிரேதத்தை) உங்களில் பின்தொடர்ந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய […]

09) நற்காரியங்களை அதிகமாக செய்தவர்

09) நற்காரியங்களை அதிகமாக செய்தவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றதை மாத்திரம் தாங்கள் செய்த பெரும் நன்மையாகக் கருதிக் கொண்டு இன்ன பிற நன்மையானக் காரியங்களில் ஆர்வம் காட்டாதவர்களை அதிகமாக சமுதாயத்தில் காணுகிறோம். இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து விதமான நற்காரியங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் நிரம்பியிருந்தது. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ […]

10) மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர்

10) மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர் மார்க்கத்தின் அருமையைப் புரியாதவர்கள் மார்க்கத்தை விடவும் மற்றவைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைப் பெரும் பொக்கிஷமாக எண்ணி பல தியாகங்களைச் செய்து ஏற்றுக் கொண்டதால் இதன் அருமையை உணர்ந்து மற்ற அனைத்தையும் விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுத்தார்கள். وحَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ أَبِي سُفْيَانَ، وَسَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ […]

08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது […]

07) நிறைவான மார்க்க அறிவு

07) நிறைவான மார்க்க அறிவு பொதுவாக வயதானவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஆர்வம் இருந்தாலும் வயது முதிர்வின் காரணத்தினால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடியாது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது விஷயங்களை அறிந்ததுடன் மார்க்க அறிவையும் நிறையப் பெற்றிருந்தார்கள். எனவே தான் மக்கா வெற்றிக்குப் பிறகு முதன் முதலில் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட கூட்டத்திற்கு இவர்களை நபி (ஸல்) அவர்கள் தலைவராக நியமித்தார்கள். ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூபக்ர் […]

06) மக்களில் மிக அறிந்தவர்

06) மக்களில் மிக அறிந்தவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி கோத்திரத்தாரின் வம்சாவழித் தொடரைப் பற்றி மக்களில் மிக அறிந்தவராக இருந்தார்கள். ஒட்டு மொத்த குரைஷிகளின் வம்சாவழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமானால் விசாலமான அறிவும் சிறந்த மனன சக்தியும் தேவைப்படும். இந்த ஆற்றலை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள். (குரைஷியர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்த போது தங்களைச் […]

05) ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்

05) ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின்பால் ஆரம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள். எதிர்ப்புகள் இருந்தால் ஒரு மாதிரியும் ஆதரவுகள் இருந்தால் இன்னொரு மாதிரியும் நடந்து […]

04) சமுதாய அந்தஸ்து

04) சமுதாய அந்தஸ்து அபூபக்ர் (ரலி) அவர்களின் அழகிய குணம், சிறந்த அனுபவம், அப்பழுக்கற்ற வாழ்க்கை ஆகிய அம்சங்கள் அன்றைய அரபுகளிடத்தில் அவர்கள் தலைசிறந்தவராகக் கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இஸ்லாம் வளர்ந்த ஆரம்பக் காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவராக இருந்ததால் அவர்களைத் தாக்குவதற்கு யாரும் துணியவில்லை. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது:  முதன் முதலில் இஸ்லாத்தை ஏழு பேர் பகிரங்கப்படுத்தினார்கள். […]

03) குடும்பம்

03) குடும்பம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்கள்: அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா ஆமிருடைய மகள் உம்மு ரூமான் உமைஸுடைய மகள் அஸ்மா ஹாரிஜாவுடைய மகள் ஹபீபா இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ், […]

02) அறிமுகம்

02) அறிமுகம் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படைகளுடன் காஃபாவை இடிக்க வந்த போது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட சின்னஞ்சிறு பறவைகள் அவனது படையின் மீது நெருப்பு மழையைப் பொழிந்ததால் தன் படையுடன் அவன் அழிக்கப்பட்டான். இந்த சம்பவம் நிகழ்ந்த வருடம் யானை வருடம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு நடந்து இரண்டரை வருடம் கழித்து அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபகர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்ர் என்பது அவர்களின் […]

01) முன்னுரை

01) முன்னுரை உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு மறைந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறு மக்களைப் பண்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் செய்யக்கூடாத காரியங்கள் இவைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் மனங்களில் குறைவாகவே மாற்றங்கள் ஏற்படும். எனவே தான் உலக மக்களின் வாழ்க்கை வழிகாட்டியான திருக்குர்ஆனில் நல்லவர்களின் வரலாறு பெரும்பகுதியைப் பிடித்திருக்கிறது. சிறந்தவனாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் நபித்தோழர்களின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் நிறைந்திருக்கின்றன. நல்ல விஷயத்தில் அவர்களைப் போன்று வாழ்ந்தவர்களுக்கு […]

19) சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?

சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர் அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் […]

18) விவசாயம் செய்தால் இழிவு வருமா?

விவசாயம் செய்தால் இழிவு வருமா? அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத் (புகாரி: 2321) ➚ விவசாயம் செய்தால் அல்லாஹ் இழிவைத் […]

17) பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா?

பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட பேது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) (புகாரி: 3359) ➚ இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகப் பல்லி செயல்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. நபிக்கு எதிராகச் செயல்படுவது அல்லாஹ்விற்கு எதிராக செயல்படுவதைப் போன்றது. பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு […]

16) குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா?

குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா? ஹதீஸ் : குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) (முஸ்லிம்: 2876) ➚ (திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற […]

15) நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) […]

14) மூஸா (அலை) வானவரை தாக்கினார்களா?

மூஸா (அலை) வானவரை தாக்கினார்களா? உயிர் பறிக்கும் மலக்கு ஒருவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் வானவர் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய் இறைவா மரணிக்க விரும்பாத ஒரு அடியானிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிபடுத்திவிட்டு அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் […]

13) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்-2

13) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும் வழிகெட்டவர்களின் வாதம் நபி (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சிலவேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் […]

12) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

12) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும் நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறினார்கள். (முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். இது வெளிப்படையான சூனியத்தைத் (ஸிஹ்ரைத்) […]

11) மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?-3

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் : உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 2:190)➚ தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன். (அல்குர்ஆன்: 9:13)➚ சொந்த ஊரை விட்டு […]

10) மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?-2

தமது மார்க்கத்தை மாற்றிக் கொண்டவன் என்றால் யார்? தனது மார்க்கத்தை மாற்றியவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸிற்கு மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று அர்த்தம் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எதிர்தரப்பினர் கூறும் பொருள் சரியானதல்ல என்றாகிவிட்ட போது அதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து கொண்டே இஸ்லாம் கூறாததை இஸ்லாம் என்று […]

09) மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா? இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) (புகாரி: 3017) ➚ இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு […]

08) பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்

பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல் நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா […]

07) அஹ்லுல் குர்ஆன் ஏன் தோன்றினார்கள்?

07) அஹ்லுல் குர்ஆன் ஏன் தோன்றினார்கள்? குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் இரண்டும் மார்க்க ஆதாரம் என்பதிலும் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இரண்டும் பாதுகாக்கப்பட்ட விதத்தில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களைக் கூறுவதால் ஹதீஸ்களைப் பின்தள்ளுகிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனா ஹதீஸா என்று வரும் போது இரண்டில் எதை எடுப்பது என்ற கேள்விக்கான பதிலாகத் தான் இந்த வித்தியாசங்களைக் கூறுகிறோம். குர்ஆன் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களின் […]

06) புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?

06) புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா? புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்களில் படித்த மார்க்க அறிஞர்களும் இவர்களைப் போன்றே நினைக்கிறார்கள். இதனால் தான் புகாரி முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸ்களை நாம் விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற விமர்சனம் சரியா? தவறா? என்று பார்க்காமல் புகாரியில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அதை விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களைப் […]

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர் حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا   […]

05) அறிவீனர்களின் வழிமுறையல்ல அறிஞர்களின் வழிமுறை

05) அறிவீனர்களின் வழிமுறையல்ல அறிஞர்களின் வழிமுறை இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார். ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة […]

04) ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

04) ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா? குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஹதீஸ் கலையை […]

03) நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?

03) நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா? குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை: அதனடிப்படையில் செயல்படவுமில்லை என நம்மை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம். நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் […]

02) நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது

02) நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன்: 16:44)➚ வேதத்தை மக்களுக்கு விளக்குவதற்காக போதனையை அதாவது ஹதீஸை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். ஹதீஸிற்கும் குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர […]

01) ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

01) ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?  குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும். குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் […]

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்பதன் விளக்கம் என்ன?

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன? பதில் : அல்லாஹ் அடியார்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறான் என்பது தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்திகள் : صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ )123 6469- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ سَعِيدِ […]

35) மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?

மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா? புனித அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் வரிசையில் நபி மூஸா (அலை) அவர்கள் வானவருக்கு அடித்ததாக இடம் பெற்றுள்ள செய்தியும் ஒன்றாகும். அதைப் பற்றிய முழு விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம். حدثنا يحيى بنُ موسى حدَّثَنا عبدُ الرزّاق أخبرَنا مَعمرٌ عنِ ابنِ طاوسٍ عنِ أبيهِ عن 3407 أبي هريرةَ رضيَ الله عنه قال:أُرسِلَ ملكُ الموتِ إلى موسى عليهما السلام، […]

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் என்ற செய்தி பலவீனமானதா?

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் என்ற செய்தி பலவீனமானதா? சூனியம் தொடர்பாக இடம் பெரும் செய்திகளில் எதிர் தரப்பினரின் போலி வாதங்களுக்கு பதிலாக அமைந்த தெளிவான ஒரு செய்தி தான் சூனியத்தை உண்மைப் படுத்தியவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற கருத்துப்பட பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாகும். குறித்த செய்தி தமது சூனியக் கருத்துக்கு பலத்த அடியாக அமைந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட சூனியக் கூட்டத்தினர் தற்போது குறித்த செய்தியையும் பலவீனம் என்று தட்டிக் கழித்து தப்பித்து […]

33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?

33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா? நபிகள் நாயத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் நபியவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டதாகவும் புகாரி உள்ளிட்ட சில நூல்களில் பதிவாகியிருக்கும் செய்திகளை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் நாம் மறுக்கிறோம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக […]

32) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா? -2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் வராது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் அவர்களைப் பைத்தியம் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் அதைத் தான் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள். ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் நேரடியாக அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் […]

31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?

31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா? அல்குர்ஆனுக்கு முரண்படுகின்ற செய்திகளில் மிக முக்கிய இடத்திலிருப்பது சூனியம் பற்றிய செய்திகளாகும். மற்ற செய்திகளை விட இவற்றை நம்புவதே மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சூனியத்தை உண்மையென்று நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும் என்று திருமறைக் குர்ஆனும், நபியவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்ற கருத்துப்பட புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக […]

30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி

30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹ_தைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக(முஸ்லிம்: 2638, […]

29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?

29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா? விவசாயம் என்பது மனித வாழ்வின் உயிர் நாடியாகும். விவசாயம் இல்லாவிட்டால் ஒரு நாடோ, நாட்டின் குடிமக்களோ உயிர்வாழவும் முடியாது. ஆகவே தான் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை மிகவும் புகழ்ந்து சொல்கின்றார்கள். நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது […]

28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?

28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா? ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். […]

27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?

27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா? குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் இன்னுமோர் பிரதான செய்தியாக இருப்பது மாடு பேசிய செய்தி பற்றிய ஹதீஸாகும். இது பற்றி இங்கு விபரமாகப் பார்ப்போம்.  (صحيح البخاري) حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الَّلِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، – 3471 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الَّلُ عَنْهُ، قَالَ: صَلَّى رَسُولُ الَّلِ صَلَّى اللهُ […]

26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?

26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா? குர்ஆனுக்கு மாற்றமான கருத்தைத் தருகின்றது என்று நாம் கூறும் செய்திகளில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய ஒழுக்க வாழ்வை கேள்விக்குற்படுத்தும் விதமாக, நபியவர்கள் அன்னியப் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தார்கள் என்றும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தலையில் பெண் பார்த்து விட்டார்கள் என்றும் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், அன்னியப் பெண்களுக்கு மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள […]

25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?

25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா? சுலைமான் நபி தொடர்பில் புகாரியின் இடம் பெறும் கீழுள்ள செய்தியும் திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு நேர்மாற்றமாக அமைந்திருக்கின்றது. மட்டுமன்றி இஸ்லாத்தின் அடிப்படை செய்திகள் ஒன்றான மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு என்பதை தகர்த்து நபி சுலைமானுக்கும் மறைவான அறிவு உண்டு என்ற விபரீதமான கருத்தைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இது பற்றிய விபரமாக ஆராய்வோம். 93 /7 (صحيح البخاري ) حَدَّثَنِ مَْمُودٌ، حَدَّثَنَا […]

24) காணாமல் போன இரண்டு வசனங்கள்

24) காணாமல் போன இரண்டு வசனங்கள். உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் தனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது தான் திருமறைக் குர்ஆன் ஆகும். திருமறைக் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்பதுடன், அல்குர்ஆனை எதிர்க்கும் அனைவருக்கும் சவால் விடுக்கும் புனித வேதமுமாகும். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. (அல்குர்ஆன்: 02:02)➚ திருமறைக் குர்ஆனில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இறைவன் மிகத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றான். […]

23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ?

23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ? உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு 06 நாட்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளான். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும்,சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே […]

22) வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?

22) வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா? கொலையைப் பெரும் பாவம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்றும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இருப்பினும், நூறு கொலைகளைச் செய்த ஒருவனுக்கு இறைவன் மன்னிப்பளித்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. குறித்த செய்தி திருமறைக் குர்ஆனின் வசனங்களுக்கு நேரடியாக மோதக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. எனவே இது பற்றிய முழுமையான விபரங்களை இங்கு ஆராய்வோம். நூறு கொலை செய்தவனுக்கு மன்னிப்பளித்தமை பற்றிய செய்தி இதுதான். […]

21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை?

21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை – அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர்: உம்மு ஷூரைக் (ரலி) (புகாரி: 3359) ➚ இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி வருகின்றோம். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம். அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், […]

20) குரங்கு விபச்சாரம் செய்ததா?

20) குரங்கு விபச்சாரம் செய்ததா? குரங்கு ஒன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டதாகவும் மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து விபரச்சாரம் செய்த குறித்த குரங்குக்கு கல்லெறிந்து தண்டித்ததாகவும் ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுக்கப்பட வேண்டிய பட்டியலில் இந்த செய்தியும் அடக்கம். அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். […]

Next Page » « Previous Page