40) அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ، الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ، وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا

ஒரு மனிதன் தன் மனைவியுடன் இணைகிறான். அவளும் அவனுடன் இணைகிறாள். பிறகு அவளுடைய இரகசியத்தை பரப்பி விடுகிறான். இவன் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மோசமான தகுதி உள்ளவன் என்று நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கூறினார்ள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),

(முஸ்லிம்: 2597)

மற்றப் பெண்களின் அந்தரங்கத்தைப் பற்றி தன் கணவனிடத்தில் கூறுவதும் தவறு.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُبَاشِرُ المَرْأَةُ المَرْأَةَ، فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),

(புகாரி: 5240)