39) கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது
நூல்கள்:
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
இல்லற சுகத்துக்காகத் தான் மனிதர்கள் தருமணம் செய்கிறார்கள். ஆணுக்கு அந்தத் தேவை ஏற்படும் போது மனைவிக்கு அப்போது விருப்பமில்லாவிட்டாலும் கணவனுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஒத்துழைக்க மறுத்தால் கணவன் வழி தவறிச் செல்லவும், கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அது காரணமாகி விடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ أَنْ تَجِيءَ، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ,
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَصُومُ المَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ
கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் உபரியான நோன்பு நோற்கக் கூடாது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),