33) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்
நூல்கள்:
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
பெற்றோர்கள் முடிவு செய்யும் திருமணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது நபிவழியாகும்.
سنن النسائي – 3235 – عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَظَرْتَ إِلَيْهَا؟ قُلْتُ: لَا، قَالَ: فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
நூல்: நஸாயீ
ஆண் பெண்ணைப் பார்க்கும் போது பெண்ணும் ஆணைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.