Category: வரலாற்று ஆவணங்கள்

b130

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு

இந்துத்துவ பாஜக ஆளுகின்ற அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது. பீகாரில் தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ, பாசிச பாஜகவுக்கு இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இதைப் பற்றி மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேசும் போது “யாராவது தெருவில் போகின்றவர் நாயின் மீது கல்லெறிந்தால் அதற்கு மத்திய அரசு […]

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம் இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது. விழுப்புரம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோயில் தேர் செல்கின்ற பாதை பற்றி இரு பிரிவினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் தேர் ஓட்டுகிறவர்களும் ஹிந்துக்கள், அதற்குத் தீ வைத்த வர்களும் ஹிந்துக்கள். இது […]

பாஜகவின் பசுநேசம் ஒரு பகல்வேஷம்

புகை உயிருக்குப் பகை, புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற எச்சரிக்கைகளுக்கு இந்தியாவில் ஒன்றும் குறைச்சலில்லை. சிகரெட் பாக்கெட்டுகள் இந்த எச்சரிக்கை மணியைத் தாங்கித் தான் வருகின்றன. ஆனால் புகைப்பவர்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. 2011ல் வெளியான ஒரு புள்ளி விபரம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதன் காரணமாக உயிரிழப்பதாகக் கூறுகின்றது. இது புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும். மதுவினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கொண்டால் அதற்கு […]

கொலைகாரர்களாகும் குறிகாரர்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 2012ஆம் ஆண்டு, ஜூன் 19 அன்று சவூதியிலுள்ள நஜ்ரான் என்ற ஊரில், முரீஃபின் அலீ பின் ஈஸா என்பவர் மக்கள் முன்னிலையில் தலை சீவப்பட்டு கொல்லப்படுகின்றார். இவர் செய்த குற்றம் என்ன? பில்லி, சூனியம், ஜோதிடத் தொழில் செய்தது தான் அவருடைய குற்றம். அத்துடன் இரண்டு பெண்களுடன் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சேர்த்து கணக்குத் தீர்க்கும் விதமாக அவருடய கழுத்து வெட்டப்பட்டது. காவல்துறை கைது செய்த மாத்திரத்தில் தண்டனை அளிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு […]

குழந்தைகளைக் கொன்ற கொடிய பாவிகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாநிலம், பெஷாவர் நகரில் வார்சாக் சாலையில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கூடத்தில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெஹ்ரீக் தாலிபான் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கொலை வெறியர்கள், ராணுவ உடையில் மதில் ஏறி இந்தப் பள்ளியின் பின்புறமாக நுழைந்தனர். அப்போது பள்ளியின் பெரிய வளாகத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் முதலுதவிக்கு வேலையே இல்லை எனுமளவுக்கு, உள்ளே நுழைந்த காட்டுமிராண்டிகள் குழந்தைகள் […]

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா? மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டியும், உலக மகளிர் இயக்கம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. கடுமையான, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு அதற்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று ராஜ்யசபையில் இந்த மசோதா, கடந்த மார்ச் 9 அன்று நிறைவேறியது. ஆனால் இது நாடாளுமன்றத்தில் […]

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் 15:2➚ இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன. رُبَمَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ كَانُوۡا مُسۡلِمِيۡنَ “தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே” என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன்: 15:2)➚ டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம், கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் […]

பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மும்பையில் 200 ஆண்டு காலப் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. யானைமுகக் கடவுளான கணேஷன் கோயில், வளைத்து வளைத்து மாட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 65 காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள்? காவல் காக்கும் அதிகாரிகள்? இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று! 67 மில்லியன் டாலர் மதிப்பிலான 158 கிலோ தங்கக் காணிக்கைகள் இந்தக் […]

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

தேவை நிவாரணமல்ல! நியாயம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம். நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர […]

முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா? இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியோரை இதர பிற்படுத்தப்பட்டோராக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அக்பர் அலி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில் தானும் தனது குடும்பமும் 2008ம் ஆண்டு எங்களது சுய விருப்பத்தின் பேரில் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறினோம். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத பிசி பிரிவில் விண்ணப்பித்தேன். […]

பாடப் புத்தகங்களில் முகாலாயர்களின் வரலாற்றை என்.சி.இ.ஆர்.டி நீக்கம் செய்துள்ளதே ?

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி எனும் அமைப்பு பாடப்புத்தகங்களை திருத்துகிறோம் எனும் பெயரில் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி வரலாற்றை மாற்றி எழுதும் வேலையைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கம் செய்துள்ளது. காந்தியின் இந்து – முஸ்லிம் ஒற்றுமை இந்து தீவிரவாதிகளை துண்டியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆகிய பகுதிகளை நீக்கம் செய்துள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 11 ம் […]

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி! பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி! ஊழலற்ற அரசு! உன்னத நாடு! இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள் பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன் […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்மைப் போல் நமதுபிள்ளைகள்,வருங்காலதலை முறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி […]

மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் – இஸ்லாம் கூறும் தீர்வு

மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் – இஸ்லாம் கூறும் தீர்வு அஸ்ஸலாமு அலைக்கும்.. இஸ்லாத்தில் மாதவிடாய் ஒரு இயற்கையான செயல்முறையாகக் கருதப்படுகிறது.மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கின்ற நேபாளத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு கொடுமை நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது.இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது 3,000 நேபாள ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் […]

மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை

மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை சவூதியின் தலைநகர் ரியாத் அருகில் அமைந்த தவ்ஆத்மி என்ற ஊரில் நாயிஃப் என்பவரது வீட்டில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நாஃபிக் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாயிஃபின் மகன் காலித் என்ற நான்கு மாதக் குழந்தை இப்பெண்ணின் பாதுகாப்பில் இருக்கும் போது கொல்லப்பட்டு விடுகின்றது. காவல்துறை விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ரிசானாவின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சவூதி நாட்டுச் சட்டத்தின்படி – […]

இஸ்லாம்-சான்றோர்கள் கூறும் சான்று

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் ‎இஸ்லாம் தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.‎ காந்தியடிகள் இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக ‎இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. ‎மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை ‎கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் ‎செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான ‎மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். ‎அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.‎ […]

யார் தேச விரோதிகள்? வரலாறு சொல்லும் பாடம்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பல்வேறு திட்டங்களின் மூலம் உருவாக்கினார்கள். பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்த நாட்டை ஒரே நாடாக உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. அதன்பின் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உயிராலும், பொருளாலும் தியாகங்கள் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள். தன் சதவீதத்திற்கு அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சங்பரிவாரக் கும்பல் சித்தரித்து வருகின்றது. இவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் […]

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதை ராமர் கோயில் திறப்பு விழா பொய்யாக்கி விட்டதா?

ஒரு வழியாக ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரு வழிபாட்டுத்தல திறப்பு நிகழ்ச்சிக்கு இத்தனை கொண்டாட்டங்கள் இதுவரை நடந்ததில்லை. *மத்திய அரசு அலுவலகம் விடுமுறை *பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் அரைநாள் விடுமுறை.! *தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச் சந்தை அன்றைய தினம் வர்த்தகத்தில் ஈடுபடாது எனும் அறிவிப்பு! *உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பொது விடுமுறை.! சத்தீஷ்கர் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை! *புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் அன்றைய தினம் செயல்படாது.! இவர்களின் கொண்டாட்டத்தில் […]

ராமர் கோயிலை பாபர் இடித்தாரா? – ஒரு வரலாற்று ஆய்வு

பிரச்சனை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைசாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. […]

முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா

முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது. முஸ்லிம்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது உயிரையும், உடமையையும் இழந்து போராடினர். காரணம், தங்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக! ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் சொத்துரிமை அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக உள்ளது. பாபரி மஸ்ஜிதின் இதே விவகாரம், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் […]

மதமற்ற மதம் ஒரு வரலாற்றியல் நோக்கு

இன்றைய நவீன உலகில் அறிவியலும் தொழிநுட்பமும் மாபெரும் வளர்ச்சி பெற்று, மனித வாழ்வில் மிகப் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை, பகுத்தறிவிற்கும் சுதந்திரமான சிந்தனைக்கும். ஆய்வு முயற்சிகளுக்கும். ஆராய்ச்சி வேட்கைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. இதனால், மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவினடியாய் எழுந்த விஞ்ஞான அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் தாக்கம் மதச் சார்பின்மை என்ற சித்தாந்தத்தைத் தோற்றுவித்து இறைநம்பிக்கை, விசுவாசம், ஒழுக்கப் […]

தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு

மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாது என்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்: 15:94)➚ என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப்பிடிப்பது. 2. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது […]

வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம்

வஹ்ஹாபியிஸம் இன்றைய சூழலில் அதிகம் விமர்சிக்கப் படுகின்ற, எதிர்க்கப்படுகின்ற ஒன்று. ஆனால் இதை எதிர்ப்போரில் பலருக்கும் வஹ்ஹாபியிஸம் என்றால் என்னவென்ற சரியான புரிதல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்கான நியாயமான பதிலாகும். வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற தவறான புரிதலைத் தாண்டி அது குறித்த விபரங்கள் எதையும் சரியாக உள்வாங்க இங்கே யாரும் தயாராக இல்லை. வஹ்ஹாபியிஸம் என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? அது உண்மையிலேயே பயங்கரவாதத்தைத் தூண்டுகிறதா? இந்த இரு கேள்விகளுக்குமான […]

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள் வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும். ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். […]

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது?

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை? மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான். நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான். ஒவ்வொரு நபிக்கும் ஒரு […]

அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள்

அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். Weapons of Mass Destruction பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும். படை எடுத்த இருபத்தோரு நாட்களில் இராக் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. போரில் தோற்ற சதாம் ஹுசைன் தப்பி, தலைமறைவானார். 2003 டிசம்பர் […]

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம் இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவில் […]

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்..இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்… இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்! சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை […]

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு […]

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக அளவில் பேசப்பட்டுக்கொண்டு இருப்பதை அறிவீர்கள். கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் […]

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து […]

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நெதர்லாந்தின் பிரபல அரசியல்வாதி

இஸ்லாத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்த நெதர்லாந்தின் பிரபல அரசியல்வாதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வரலாறு. சகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின் செல்லப் பிள்ளையாக இருந்து பின்னர் இஸ்லாமை தழுவி பெரும் அதிர்வை உண்டாக்கியவர். இவருடைய இஸ்லாமிற்கு எதிரான செயல்களை பார்த்தோமென்றால், ‘ஓரமா போய் விளையாடுங்க’ என்று நம்மூர் இஸ்லாமிய எதிர்பாளர்களை சொல்லி விடுவோம். உதாரணத்திற்கு, இவர் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக […]

நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன? யுவன் கூறிய விளக்கம்

நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன?: யுவன் விளக்கம் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை தன்னை திருமணம் செய்ய வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றிவிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் ஜஃப்ரூன் நிஷா மீது பழி போட்டார்கள். யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2014ம் ஆண்டில் இஸ்லாத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் காலிக் என்று மாற்றினார். யுவன் ஆடை வடிவமைப்பாளரான ஜஃப்ரூன் நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜியா […]

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்! 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. அது அரசாங்கம் ஒரு முஸ்லிம் மீது நடத்திய படுகொலை என்றே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகளும் […]

யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்?

யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்? பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட மியான்மர் நாட்டின் ‘ராக்கைன்’ பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் ரோஹிங்கிய இனத்தவர்கள். கிட்டத்தட்ட 15 லட்சம் ரோஹிங்கிய மக்கள் அங்கு வசித்து வந்தனர், அனைவருமே முஸ்லிம்கள். இவர்களது பூர்வீகத்தை தலைமுறை பின்னோக்கிப் பார்த்தால், 15 ஆம் நூற்றாண்டு முதல் அவர்களது பூர்வகுடிக்கான தடயங்கள் மியான்மர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைப்பதாக இந்தியன் எக்ஸ்பிரெஸ் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியுடனான யுத்தகால […]

குடியுரிமை மசோதா சொல்வது என்ன?

குடியுரிமை மசோதா சொல்வது என்ன? மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதா நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மசோதாவை பாஜக அரசு ஏன் கொண்டு வருகின்றது? இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றார்கள்? இஸ்லாமியர்கள் அல்லாத நடுநிலை மக்களும் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றர்கள்? என்பதை தெரிந்து கொண்டால்தான் பாஜகவின் பாசிச சிந்தனையையும் விசர்ச்சனத்தையும் இஸ்லாமியர்களின் மீதான அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள […]

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர்

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர் 1201 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டிலுள்ள டஸ் என்ற நகரில் அல்-துசி பிறந்தார். இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். கணிதம் மற்றும் வானியல் சார்ந்த பல ஆய்வுகளை அல்-துசி அவர்கள் மேற்கொகாண்டுள்ளார். அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில நூல்கள் கீழே தரப்பட்டுள்ளது: • கிதாப் அல்-ஷக்ல் அல்- கட்டா (Kitab al-Shakl al-qatta) கோணவியல் குறித்த ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகம் • அல்-தத்கிரா […]

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன? இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1950 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இந்தியாவில் பிறந்திருந்தி ருந்தாலோ அல்லது அதற்கு 1955 ஆம் ஆண்டுக்கு முன்பதாக […]

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா முகலாயர்கள் படையெடுத்து வந்தவர்கள் எனும் கருத்துருவாக்கம் சமீக கால, மத ரீதியிலான அரசியலின் வருகைக்கு பின் உருவாக்கப்பட்ட ஒன்று தானே அன்றி, முகலாயர்களின் ஆட்சி காலத்திலோ, அதற்கு பின்னரோ இந்த கருத்தானது நிலை கொள்ளவில்லை. இதுவே, அவர்கள் தங்களை முழுமையாகவே இந்தியர்கள் எனும் அடையாளத்துடன் காட்டிக் கொண்டே இருந்துள்ளார்கள் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. இந்தியர்களை திருமணம் செய்ததோடு, அவர்களின் வம்சங்கள் ராஜபுத்திர வழி தலை முறையையே கொண்டிருந்தது. பெற்றோர் […]

நீதியே! உன் விலை என்ன?

நீதியே! உன் விலை என்ன? இந்தியாவில் மட்டும் நீதிமன்றம் என்பதை ‘கூட்டுமனசாட்சி மன்றம்’ என்றோ ‘நம்பிக்கைமன்றம்’ என்றோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என சொல்லத்தக்க வகையில், நீதியை நிலை நாட்ட வேண்டிய மன்றங்கள் அனைத்தும் ஏதோவொரு சாராருக்கு சார்பு நிலை எடுக்கின்ற அவல நிலையை மேற்கொள்கின்றன. சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் நிறுவப்பட வேண்டிய நீதியானது, பெரும் பான்மையினரின் விருப்பம், கூட்டு மனசாட்சி, குறிப்பிட்ட சாராரின் நம்பிக்கை எனும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது. அப்சல் குரு, […]

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி” உலகளாவிய அளவில் நாளுக்கு நாள் இஸ்லாமிய மார்க்கத்தை பலதரப்பட்ட மதத்தை சார்ந்தவர்களில் முக்கியமான பிரமுகர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக் கின்றார்கள் என்பதை தொடர்ந்து நாம் அறிந்து வருகின்றோம்! அதன் தொடர்ச்சியாக; இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது “Islam Oppresses Women” என்பதாகும். அதாவது “இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது” என்ற வாதமாகும். இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறு வாதங்கள் எப்படி […]

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை கவர்னர் இப்ராஹிம் லோதியின் மேற்பார்வையில் முகலாய மன்னர் பாபர், உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதியை கடந்த 1526 ஆம் ஆண்டு கட்டினார். 1949 மசூதியின் உள்ளே, ராமர், சீதை சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட, பிரச்சனை ஆரம்பமாகிறது. சிலைகள் தானாக உருவாகி விட்டன, தமது ஜென்மஸ்தானத்தில் ராமர் அவதரித்து விட்டார் என்பதாக புரளிகள் கிளப்பப்பட, மதக் கலவரத்திற்கான முதல் வித்து அங்கே தூவப்படுகிறது. பள்ளிவாசல் பூட்டப்படுகிறது..! சிலைகளை […]

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு கடந்த 60 ஆண்டுகளாக பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. உலகே எதிர்பார்த்த அதன் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடத்திற்கு உரிமை கோரி மூன்று பேர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசித்திரம் என்னவென்றால் குழந்தை இராமன் சிலை ஒரு மனுதாரராகவும், நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் மனுதாரர் ஆவார்கள். இந்த மூன்று தரப்பினர் களுக்கிடையே 2.77 […]

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் • குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது. • ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது • அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. • மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது. • அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. • மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு எதிராக அதே தீர்ப்பில் அந்த நீதிபதியே முரண்படுகின்றார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! தீர்ப்பை வழங்குவதற்கு முன்னாள் பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதச்சார்பின்மையே அரசியல் […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பாபர் மசூதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் (9/11/19) அன்று தனது தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி நிலம் முழுக்க ராம் லல்லா தரப்பினருக்கு உரியது, அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க மத்திய – மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறுகின்றது. இது எந்த விதத்திலும் […]

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்” நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பக்கம் அலையலையாய் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, உலக அளவில் மக்களால் பிரபல்யமாக பார்க்கப்படுகின்ற பலதரப்பட்ட திறமை பெற்றவர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று சொல்லி பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு தழுவுகின்றனர். அந்த வரிசையில், கொரியாவை சார்ந்த பிரபல பாப் இசையின் நட்ச்சத்திரம் ஜாய் கிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். ஜாய் […]

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்? ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள். […]

அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அங்கு […]

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா? “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார். யார் அவர்? 200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை தங்களின் தலைவராக ஏற்றுள்ளார்கள். அவருக்காக தங்களின் உயிரையும் அர்பணிக்கத் துணிவார்கள். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்ததில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவருக்கு […]

Next Page »