Category: 10 நிமிட உரைகள்

b110

சொர்க்கத்தில் இடம் பெறுவோம்!

இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாறாமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும். இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு […]

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் […]

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் ஆக வேண்டுமா? அல்லது வீட்டில் தொழலாமா? பதில்: ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு மட்டும் தான் கட்டாயம். பெண்களுக்கு கட்டாயமில்லை. பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். […]

புனித பூமியில் புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! விசாலமான சிரியா – ஜெருசலம் பகுதியில் அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கும், அங்கு அமையப் பெற்றிருக்கின்ற புனிதம் பொருந்திய மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை நமக்குப் பாடமாகவும் – படிப்பினையாகவும் கற்றுத் தருகின்றார்கள். புனிதம் நிறைந்த பூமியின் சிறப்புக்கள் குறித்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம். நேர்ச்சையை நிறைவேற்ற சொன்ன நபிகளார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்காவை அல்லாஹ் வெற்றியளித்தால் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் […]

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா?

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா? யகுபோவ் என்ற சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா? பதில்: சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும், வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும், இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது. இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு […]

இஸ்லாம், மனைவிமார்களை அடிப்பதற்குத் தூண்டுகிறதா?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34➚ கூறுகிறது. திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன். “குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக […]

இப்ராஹீம் நபியின் அழைப்புப் பணி

இவ்வுலகில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வாழ்க்கை செயல்திட்டத்தை இறைவன் வரையறை செய்துள்ளான். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இறைத்தூதர்களையும் நியமித்து அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுத் தருகிறான். இவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் இறைத்தூதர்களை நியமித்து, தமது சமூகத்தை சீர்திருத்த இறைவன் ஏற்பாடு செய்துள்ளான். ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் பலவீனமான படைப்பாகும். படைத்தவனின் போதனையை மீண்டும், மீண்டும் மனதில் பதியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இழிசெயலிலும், இணைவைப்பு என்னும் இருளிலும் மனிதன் […]

வஹ்யு அல்லாத செய்திகள் வழிகேடே!

(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர் ஆன் 33:2➚ இது 33வது அத்தியாயமான அல்அஹ்ஸாபில் இடம்பெறும் 2வது வசனமாகும். மறைந்த தற்கால அறிஞர் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் இந்த அத்தியாயத்திற்கான விளக்கவுரையில் இந்த வசனத்திற்கு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கின்றார்கள். இந்த வசனத்தின் கீழ் பெறப்படும் பயன்பாடுகளைப் பட்டியலிடுகின்ற போது வஹ்யை பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் الْفَائِدَةُ السَّادِسَةُ: وجوبُ تَقديم الوحي […]

தொழுகையும் தூயோனின் மன்னிப்பும்

இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கு படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இத்தொடரில் பார்த்து வருகின்றோம். இதில் ஆரம்பமாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எனக் கூறப்படும் ஐந்து தூண்களால் எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றோம். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை, மேலும் இதன் மற்றொரு தாரக மந்திரமான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் முதன்மைக் கடமையை நம்பிக்கை கொண்டு, அதை நம் வாழ்வில் நடைமுறைப் […]

தற்கொலை – எச்சரிக்கையும்! தண்டனையும்!

எந்தவொரு சூழலிலும் மரணத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரையாகும். இத்தகைய மார்க்கத்தில், மரணத்தைத் தேடிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒருபோதும் அனுமதி இருக்காது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதோ, குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் பாருங்கள். உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன்: 2:195)➚ உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:29)➚ அழிவு தரும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் […]

குர்ஆன் கூறும் சரித்திரங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

அல்குர்ஆன் நெடுகிலும் பெரும்பான்மையான பக்கங்களை ஆக்கரமித்திருப்பது வரலாறுகள்தான். பல கட்டங்களில் நபிகளாரும் கூடத் தமது தோழர்களுக்கு, முன்னர் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். இதற்குக் காரணம், முன்னர் வாழ்ந்த நல்லோர் மற்றும் தீயோரின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டும்போது அவற்றில் நமக்குப் பெரும் படிப்பினைகள் இருக்கும். ஆகவே தான் அல்குர்ஆன் எங்கும் சரித்திர பக்கங்கள் படர்ந்துள்ளன. திருமறையில் கூறப்படும் இந்த வரலாறுகளில் நல்லடியார்களைப் பற்றிய செய்திகளின் மூலம் நாம் எவ்வாறு இறைவனுக்குக் […]

இயேசு கடவுள் அல்ல! அல்குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்கள்

இன்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும் அதிக அளவு மக்கள் பின்பற்றி வருகின்ற ஒரு மதம் கிறிஸ்துவ மதம் தான். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த உலக வாழ்க்கையே முழுமையானது என நினைக்காமல் இறந்ததற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும், பரலோக ராஜியத்தில் உள்ள கடவுளை (கர்த்தரை) சந்திக்கப் போகிறோம் என்பதையும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ வேறுபாடுகள் […]

மாமறையை மெய்ப்படுத்தும் முன்னறிவிப்புகள்

அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வால் தான் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டது என்பதற்கு அதிலேயே நிறைய சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முன்னறிவுப்புகளும் அடங்கும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவையாக அல்குர்ஆனில் கூறப்பட்ட விசயங்கள் அப்படியே நடந்தேறியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். அநியாயக்காரன் அபூலஹப் நரகவாசியே! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதன் துவக்க காலத்தில் நெருங்கிய உறவினர்களிடம் மார்க்கத்தைச் சொல்லுமாறு அவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. அதன்படி அவர், தமது உறவினர்களை […]

அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகியப் பெயர்கள்

بسم الله الرحمن الرحيم அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகியப் பெயர்கள் அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. (அல்குர்ஆன்: 20:8)➚ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا […]

இரு பெருநாட்களில் முஸ்லிம்கள் ஏன் மது அருந்துவதில்லை?

“தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” இது பத்திரிக்கை செய்தி! சாதாரண காலங்களில் தண்ணீராகப் பாய்ந்தோடும் மதுவுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் ஏனிந்த தடை? அரசு […]

இறைச்செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி (அலை)

அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களிடம் தவ்ஹீது எனும் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு முன்பாக தவ்ஹீது கொள்கை அவர்களிடம் இடம் பிடிக்காமல் இல்லை. இணை வைத்தல், தர்ஹா வழிபாடு, தாயத்து தட்டு போன்றவை கூடாது என்ற சிந்தனை மக்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கவே செய்தது. அதனால் தான் தவ்ஹீது எழுச்சி வருவதற்கு முன்பே தமிழக முஸ்லிம்கள் இரு அணியினராக இருந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றனர். ஒரு கூட்டம் அல்லாஹ்வை மட்டும் வணங்கிக் கொண்டு தர்ஹா வழிபாட்டை […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

நம்மைப் போல் நமது பிள்ளைகள், வருங்கால தலைமுறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். துவக்கத்தில் புகை பழக்கம். […]

குகைவாசிகள் யார்?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். இந்த முழு சம்பவத்தையும் […]

அஷரதுல் முபஷ்ஷரா

அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்) என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர். குலஃபாவுர் ராஷிதீன்களான… عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدٌ فِي الْجَنَّةِ وَسَعِيدٌ فِي الْجَنَّةِ وَأَبُو […]

இவ்வுலகமும் மறுஉலகமும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அற்ப இம்மை அற்புதமான மறுமை! “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் […]

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான். மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். […]

ஹதீஸ்களில் வந்துள்ள சம்பவங்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி மொழிகளில் வந்துள்ள சம்பவங்கள் அதை படிக்கின்ற நமக்கு ஏறாளமான படிப்பினைகள் உள்ளது. கடந்தகால மனிதர்கள் இறைத்தூதர்கள் என பலரின் வாழ்வில் கிடைக்கும் படிப்பினைகளில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். 1. குகையில் மாட்டிக் கொண்ட மூவரின் சம்பவம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: […]

சோதனையின்றி சொர்க்கமில்லை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆரம்ப கால கட்டத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடி, உதை ஊர் நீக்கம், அடக்கத்தலம் தர மறுப்பு எனப் பல்வேறு விதமான சோதனைகளை கொள்கைச் சகோதரர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்தான் ஆறுதலாக எடுத்துச் சொல்லப்பட்டது. “உங்களுக்கு முன்சென்றோருக்கு ஏற்பட்டதைப் போன்று உங்களுக்கும் […]

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும். இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் […]

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இம்மையில் ஏற்படும் பயன்கள் அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 2:194➚, 9:36➚) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்! “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” […]

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று உலகுக்கு உணர்த்திய பகுத்தறிவுப் பகலவன்! சிலை வணக்கத்தின் சிம்ம சொப்பனம்! அவர் […]

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புகளை இதில் மட்டுமே நம்மால் காண முடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்டுகிறது. திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் களையும் ஒருவர் […]

இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

“இந்தியா ஓர் இந்து நாடு! இந்துத்துவா தான் நமது நாட்டின் அடையாளம். அதாவது இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரின் அடையாளம் இந்துத்துவம் தான்” என்று மும்பையில் நடந்த வி.ஹெச்.பி. பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது மோகன் பகவத் பேசியுள்ளார். அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா தான்; தற்போதைய இந்தியாவில் வாழ்பவர்கள் அந்தக் கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் தான் என்று அவர் முழங்கியுள்ளார். 21.08.2014 அன்று இந்து ஆங்கில நாளேடு “கட்சியைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தில் பின்வருமாறு […]

பெற்றோரை போற்ற சொல்லும் இஸ்லாம்…

“இஸ்லாம்” இறைவனின் மார்க்கம் “திருக்குர்ஆன்” இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. “அல்லாஹ்”வின் இறுதி தூதர் முஹம்மது”நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல… அதில் பெற்ற தாய், […]

தொழுகை இல்லையேல் தடாகம் இல்லை

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான். இதுபற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம் (அல்குர்ஆன்: 108:1)➚ “கவ்ஸர் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்” என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: […]

தலை போனாலும் விலை போகோம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைத் தூதர்கள், தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க ஆரம்பித்த மாத்திரத்திலேயே கொலை முயற்சி, கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர் நீக்கங்கள், நாடு கடத்தல்கள், சிறைவாசங்கள், சித்ரவதைகள் என்று உடல்ரீதியான சோதனைகளும், கேலி, கிண்டல்கள், பரிகாசங்கள், அவதூறுகள், கடும் விமர்சனங்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், போலியான கூற்றுக்கள் என உள […]

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?

மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தான் கொள்கை வாதிகள் என்றும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத் […]

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (அல்குர்ஆன்: […]

ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி […]

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும். இந்த விதி ஏன்? எதற்கு? ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும். “புகை […]

உறவோடு உறவாடுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம்மில் சிலர் உறவினர்கள் விஷயத்தில் பாரபட்சமாகவும், பாராமுகமாகவும் இருப்பதை காண்கிறோம். உறவிலேயே பணக்காரர் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனி மரியாதை, அதுவே ஏழை என்றால் அப்படியே கண்டும் காணதது போல் விட்டுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வருவதை பார்க்கிறோம். எனவே உறவைப் பேணுவதின் முக்கியத்துவத்தை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் […]

குர்ஆன் நபி வழியும், நமது நிலையும்

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். குர்ஆனும், நபிவழியும் நமது மார்க்கத்தை முழுமையாக்கி இருந்தாலும், இன்றைய கால நம் பெண்கள் தங்கள் வாழ்க்கைகளை அல்லாஹ்வின் அச்சமில்லாமல் மனோ இச்சைப் படி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். திருமணம் திருமணத்தில் நபிவழித் திருமணம் என்று நாம் பல இடங்களில் கேள்விப்படுவதுண்டு. ஆனால் நாம் அதனை கண்கூடாக ஒரு சில இடங்களில் தான் […]

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப் பிரச்சாரத்திலிருந்து எள்ளளவு கூட, இம்மியளவு கூட மாறவில்லை. சவூதி சம்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட மதனிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்யும் போதும் சரி! அவர்களை விட்டுப் பிரிந்து பணியாற்றும் போதும் சரி! குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியெனப்பட்டதையே மக்களிடம் எழுத்துரீதியாகவும், பேச்சுரீதியாகவும் பிரச்சாரம் செய்து […]

உரிமைகளை மீட்டெடுப்போம்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். […]

பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் […]

நிச்சயிக்கப்பட்ட மரணம்!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் […]

ஜும்ஆ உரையின் நோக்கமும், முக்கியத்துவமும்

ஜும்ஆ தொழுகை மிகச் சரியாக அமைவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று ஜும்ஆ உரையாகும். நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஜும்ஆ உரையை விட்டது கிடையாது. அல்லாஹ் கூறுகிறான் : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ […]

தீய நண்பன்

கெட்ட தோழன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான். அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி […]

அசுத்ததை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்ச மில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்க ளுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாய் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக் கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோ யின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக […]

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்!

நபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ” இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி!” என்று (பாடிய வண்ணம்) […]

சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள்

இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படை, மறுமை வாழ்க்கையை நம்புவதாகும். மேலும் அந்த வாழ்க்கையில் சொர்க்கம் என்ற பூஞ்சோலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து, நரகம் என்ற கொடுமையான வாழ்க்கையிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வுலகத்தில் மேற்கொள்வதாகும். மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கும் மாபெரும் பாக்கியத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் எந்தப் பாக்கியமும் கிடையாது. அங்கு ஓர் அடி இடம் கிடைத்தால் கூட இவ்வுலகத்தின் அனைத்து இன்பத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும். சொர்க்கத்தின் இன்பத்தை விளக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: […]

அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்

எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம். தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் […]

தலைவன் ஒருவனே!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் தோன்றுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், கோட்பாடாக இருந்தாலும், அதை உருவாக்கிய தலைவன் ஒருவன் இருப்பான். அந்தத் தலைவன் உயிரோடும், உணர்வோடும் இருக்கின்ற வரை அந்தக் கொள்கை உயிரோடு இருக்கும். அவன் மரணித்துவிட்டால் அவனோடு சேர்ந்து அவனுடைய கொள்கையும் மரணித்துவிடும். அல்லது அவனுக்குப் பின் மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தக் […]

இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம். இறந்து விட்ட […]

நரகத்தைத் தரும் மவ்லிது

தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள். ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் […]

Next Page » « Previous Page