Category: 10 நிமிட உரைகள்

b110

வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே! மழை இறை அருள்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு […]

வறுமையும் ஒரு சோதனை தான்!

வறுமையின் சிறப்பு வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல் இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவையெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை, வறுமை என்பது சிறப்பிற்குரியது. عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَاطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا […]

தாழ்த்திப் பேசாதீர்!

மனிதனின் மானம் புனிதமானது மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களில் பலர் பிறருடைய பொருளை திருடுவது கிடையாது. பிறருடைய சொத்துக்களை அபகரிப்பது பெரும்பாவம் என்று உணர்ந்திருக்கிறார்கள். எனினும் பிறருடைய மானம் அதை விட புனிதமானது, மதிப்பு மிக்கது என்பதை விளங்காமல் இருக்கிறார்கள்.நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். […]

கைவிடப்படும் பெற்றோர்கள் கருணையற்ற பிள்ளைகள்

கர்நாடகா மருத்துவமனைகளில் அரங்கேறும் அநியாயம் Old and forsaken: In Karnataka, worrying trend of children abandoning elderly parents in hospitals compels government to step in (வயதானவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்கள்: கர்நாடகாவில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் மருத்துவமனையிலேயே கைவிட்டுச் செல்லும் கவலையளிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது) என்று தலைப்பிட்டு இந்து ஆங்கில நாளேடு கடந்த மார்ச் 18 அன்று ஓர் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்டிருந்தது. […]

திரும்ப வரமுடியாத மறுமைப் பயணம்! திரும்பிப் பார்க்க வைத்த ரமலான் மாதம்!

அல்லும் பகலும் மனிதன் போடும் மனக் கணக்கு எல்லாமே பணக் கணக்கு தான். உலகத்தில் மனிதன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடிக்கும், கடக்கும் ஒவ்வொரு கால நொடிக்கும் அவன் பார்ப்பது காசு தான். அப்படிப்பட்ட உலக வாழ்வில் கால நேரத்தை ஒதுக்கி ஐவேளை தொழுகைகளில் மக்கள் பள்ளிகளில் பொங்கி வழிந்தது எதற்கு? இரவுத் தொழுகைகளில் பொங்கும் வெள்ளமாய் பெருக்கெடுத்தது எதற்கு? அதிலும் பிந்திய பத்துகளில் லைலத்துல் கத்ரு எனும் முத்தைத் தேடி கண் விழித்தது எதற்கு? […]

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்!

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கொடுத்த கடன் திரும்ப வராவிட்டால் நட்டமாகிவிடுமே என்ற அச்சம் தான் கடன் கொடுக்கத் தடையாக அமைந்துள்ளது. ஆனால் தர்மம் செய்வதை விட கடன் கொடுப்பதில் மிக அதிகமான நன்மைகள் உண்டு என்ற இஸ்லாத்தின் போதனையை அதிகமான முஸ்லிம்கள் அறியவில்லை. நாம் ஒருவருக்கு அல்லது […]

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்

பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று தானே இஸ்லாத்தை ஏற்றோம் எங்களுக்கு அற்புதமான முறையில் இஸ்லாம் வழங்கிய சட்டதிட்டங்களை விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்ற சட்டத்தின் பக்கம் வாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுகின்றீர்களே! முஸ்லிம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது; அதனால் நாங்கள் போடும் சட்டத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றீர்களே! நாங்கள் என்ன அரபு நாட்டு இறக்குமதியா? இதே இந்தியாவில் பிறந்தவர்கள் தான்; எங்களது முப்பாட்டிமார்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருந்தார்கள். எந்த பொது […]

எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் குர்ஆன்

“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் […]

உறவை பேணுவோம்!

நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர்எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு.மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் […]

கடன் தள்ளுபடி !

மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான். المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ‘ […]

மதுவை ஒழிப்போம்!

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் மதுவும் ஒன்று. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.விழாக்காலங்களிலும் விஷேச நிகழ்ச்சிகளிலும் மது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது. தற்போது முடிந்த தீபாவளி வியாபரம் நம்மை அதிர வைக்கிறது. 220 கோடி ரூபாய்க்கு இந்த வருட தீபாவளியில் மது விற்பனையாகியுள்ளது. போன வருடம் 100 கோடிக்கு விற்ற மதுக்கள், இந்த வருடம் 100 சதவீதத்தையும் எட்டியது குடிமக்களின் […]

நயவஞ்சகனின் அடையாளங்கள்!

آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ. நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 33) ➚ இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். أَرْبَعٌ […]

இருலகத்திலும் நன்மை அடைவோம்!

இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர்.மதங்களும் அதன் நம்பிக்கைகளும்கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள், முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர். இவ்வாறு பல விதமான கடவுள் கொள்கை […]

தூய்மையை வழியுறுத்தும் இஸ்லாம்!

கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் […]

பர்க்கத் பெரும் வழிகள்!

கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். விரலை சூப்புதல் முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்தவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத […]

பயனுள்ள கல்வி கற்போம்!

இஸ்லாத்தின் பார்வையில், உயர்வு தாழ்வு இல்லை. எனினும், கல்வி கற்றோர் உயர்ந்தோர் என குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? அறிவுடையோரே படிப்பினை பெறுவர்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:9)➚ يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் […]

ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்!

ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது. وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். (அல்குர்ஆன்: 17:15)➚ இது தான் இறைவனின் நீதி. ஆனால் மனிதர்களிடம் இந்த நீதி பேணப்படுவதில்லை. பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொருவன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக […]

எதிர்ப்பை சந்திக்கும் சத்தியம்!

சத்திய இஸ்லாமை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல முனைந்தால், பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடும். சமுதாயத்தில் தலைவர்களாக இருப்பவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் தான் முதலில் நம்மை எதிர்ப்பார்கள். وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ […]

ஸலாம் கூறுவதன் சிறப்பு

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும். இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற […]

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும் அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான். பாவம் செய்வது, இறைவனுக்கு மாறு செய்வது மனித இயல்பு. உலகத்தில் அனைவரும் பாவம் செய்பவர்கள் தான். அல்லது செய்தவர்கள் தான். ஆனால் அவ்வாறு பாவம் செய்பவர்களில் சிறந்தவர்களும் புத்திசாலிகளும் யாரென்றால் தன் பாவங்களை நினைத்து வருந்தி திருந்தி பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்விடம் மீளுபவர்கள் தான். பாவம் பண்ண பிறகு […]

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எதை முதன்மையாக கொள்ள வேண்டும் ? நமது அழைப்பும் உழைப்பும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்தக் உரையின் மூலம் நாம் அறிய இருக்கின்றோம். இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லீம்களில் பலர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை ஜாஹிலிய்யா (அறியாமை) காலத்து முஷ்ரிக்குகள் அறிந்த அளவிற்கு கூட அறியவில்லை. மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் ஷிர்க் (இணைவைத்தல்) என்ற […]

நல்ல நண்பர்களை தேர்வு செய்வோம் !

ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான்.‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். […]

பள்ளிவாசல்களும் நாமும்

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுன் நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது. அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். இவ்வுலகில் படைக்கப்பட்ட முதல் மனிதரான […]

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்

ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம்.இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம். இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் இந்த வார்த்தையை மொழிவதினால் நமக்குக் கிடைக்கும் […]

இஸ்லாம் ஒர் ஈர்ப்பு சக்தி!

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே […]

வரதட்சணை என்ற வியாபாரம்!

சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல் நடைபெறும் ஒரு வியாபாரம் தான் மாப்பிள்ளை வியாபாரம்! ஆம் மானங் கெட்டவர்களின் ஒவ்வொரு திருமண நிகழ்வின் போதும் நடைபெறும் வியாபாரம்.மணமகனை வரதட்சணை என்ற குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படும் இந்த வியாபாரம், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்திருந்தாலும், தற்போது அல்லாஹ்வின் பேரருளால் குறைந்து கொண்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்பினர் செய்யும் இடைவிடாத பிரச்சாரம் தான். இன்னும் சில ஊர்களில் இந்த விஷச் செடிகளைகளை […]

தீமையை விட்டும் தடுக்கும் தொழுகை!

தொழுகையின் மூலம் அல்லாஹ் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கிறான். எவ்வாறு தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதை இந்த உரையில் காண்போம்… أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ” قَالُوا: لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: «فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الخَطَايَا ‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் […]

சபித்தல் என்பது கொலை செய்வதற்க்கு சமம்!

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது.இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம். உண்மையில் சபித்தல் என்பது கொலை செய்வதற்கு சமம்! «مَنْ حَلَفَ عَلَى مِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ، وَلَيْسَ عَلَى ابْنِ آدَمَ نَذْرٌ فِيمَا لاَ […]

சிந்திப்பது ஒரு இபாதத் !

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.சிந்திப்பதும் ஒரு இபாதத்!சிந்திப்பதும் ஒரு இபாதத் என்று இஸ்லாம் கூறுகிறது. படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து, அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் […]

முயற்சி செய்!

நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது.ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அது கைகூடாவிட்டால் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறலாம். நமது முயற்சியின்மை காரணமாக இருந்தால் அப்போது அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது பழிபோடக் கூடாது. أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ […]

அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அகிலத்தாரின் அழகிய முன்மாதிரிஇஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும்.மற்றொன்றுமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைய முடியும்.இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். அரைகுறையாகவே நம்புகின்றனர். இவ்விரு கொள்கைகளையும் அதன் முழு பரிமாணத்துடன் மக்களிடம் […]

கடைப்பிடிக்கபடாத மார்க்க சட்டங்கள்

இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் வழங்கப்பட்ட ஈடற்ற மார்க்கமாகும். اِنَّ الدِّيْنَ […]

பள்ளிவாசலின் முக்கியத்துவம்

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை.அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை […]

நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும். இஸ்லாம், பிற மதக்கொள்கை கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தோடு தனித்து விளங்க காரணம் சக மனிதர்களுக்கு நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான […]

ஒரினச் சேர்க்கையும் ஒரிறைவனின் தண்டனையும்!

உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் வசனத்தில் காணலாம். وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ […]

ஏகத்துவாதிகளே உங்களைத்தான்!

வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!குழப்பங்கள் தோன்றும் முன்! بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக […]

உணவு ஒர் அருட்கொடை!

உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிற்கான மீன்களை […]

சமூக வலைதளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது.சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன. விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. […]

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான்.ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான். وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏ அவர்களில் அதிகமானோர் இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 12:106)➚ இரண்டுமே பெண்கள் […]

இவ்வுலகமும் மறுமை வாழ்க்கையும்

மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம் மாறிவிடுகிறோம்!நபியவர்கள், ”நமக்கு அதிகமாக செல்வம் கொடுக்கப்பட்டு, அந்த உலகாசையானது இந்த சமுதாயத்தை அழித்துவிடுமோ” என்று பயந்திருக்கிறார்கள் என்றால், உலக ஆசையின், பொருளாதாரத்தின் பின் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம்பனூ ஆமிர் பின் லுஅய் […]

ஆணுக்கும் வேண்டும் ஒழுக்கம்

நவீன உலகில் இன்று விபச்சாரங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில முஸ்லிம்களும் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.விபச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் பெண்கள் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் பேண வேண்டும்; ஆடைகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என்று கண்டிக்கப்படுகிறார்கள். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று இந்தச் சமூகம் எண்ணுகிறது.பாதையில் அரைகுறை ஆடையுடன் நடமாடும் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் இணைய தளங்களிலும் அரைகுறை […]

சிறு நன்மையையும் அற்பமாக கருதாதீர்!

எவ்வளவு சிறிதாயினும் காண்பார்,இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏ وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ யார் அணுவளவு நன்மை செய்கிறாரோ அவர் அதைக் கண்டு கொள்வார்.யார் அணுவளவு தீமை செய்கிறாரோ அவர் […]

மன்னிப்பே ஆயுதம்!

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அன்று. மாறாக, இஸ்லாத்தின் பகுத்தறிப்பூர்வமான கடவுள் கொள்கை, மனிதர்கள் அனைவரும் சமம், மதகுரு என்ற ஒன்று இல்லாமை என மாற்றுமத மக்களும் ஒப்புக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இஸ்லாம் அபார வளர்ச்சியடைந்தது, இன்றைக்கும் வளர்ச்சி அடைகிறது .நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் தாறுமாறாக பரவியதற்கு மிக முக்கிய காரணம், அவர்களிடத்தில் இருந்த நளினமும், அடக்கமும், மன்னிப்புமேயன்றி வோறொன்றுமில்லை. சுமாமாவை ஈர்த்த இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை […]

நற்குணம் நிறைந்த மங்கை

பெண் இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம் அன்பின் உறைவிடம் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டம் இன்னும் இது போன்று பல விளக்கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது.ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் அமைந்துள்ளது. நவீன நாகரீகமங்கைகள் என்றாலும் பழமையான பழக்கவழக்கம் கொண்டவர்கள் என்றாலும் அகம்பாவம் கொண்டவர்களாக இருக்கும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு. எனவே பெண் என்பவள் அமைதியின் […]

பொது வாழ்வில் கடமை

பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம் يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ‏ நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களும் (வேறு) யாரையும் போன்றவர்கள் அல்ல! நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்! யாருடைய உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் (தவறான) ஆசை கொள்வான். நல்ல பேச்சையே பேசுங்கள்!(அல்குர்ஆன்: 33:32)➚ இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் […]

இறைநம்பிக்கையாளர்களின் இலக்கணங்கள்

இறைநம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்! இறைநம்பிக்கை கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள் إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ அல்லாஹ்மீதும், அவனது தூதர்மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித ஐயமும் கொள்ளாமல் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரே இறைநம்பிக்கையாளர்கள். அவர்களே உண்மையாளர்கள். […]

அழுகை நேசிக்கும் அல்லாஹ்!

உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான; ஆபத்தானவை!அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதலில் அல்லாஹ்வைத் தான் நாம் […]

சோதனைக்கு பின்பே வெற்றி!

நபிகளார் காட்டிய ஏகத்துவக் கொள்கையை ஏற்று, அதன் வழிப்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஊரில் எதிர்ப்பு, ஊர் நீக்கம் ஆகியவற்றுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணற்ற துன்பங்கள் இந்த உண்மையான கொள்கையை ஏற்றதால் ஏற்படுகின்றன. இந்தக் கொள்கையின் சிறப்பினை விளங்கி ஏற்றுநடக்க முன்வரும்போது இது போன்ற துன்பங்களால் கொள்கையை விடுபவர்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள […]

பிரச்சாரமே நம் உயிர் மூச்சு!

நாம் ஏன் படைக்கப்பட்டோம்? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டும் மறுமையில் நம்மை சுவனத்தில் கொண்டு போய் சேர்க்குமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏகத்துவவாதிகள் இதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மிக வீரியமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. ஏகத்துவத்திற்கு எதிரான கப்ரு வணங்கிகளெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் […]

ஒரிறைக் கொள்கையை எடுத்து சொல்வோம்!

இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத்தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்கு கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்கு பல்வேறு நிலைகளை திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத்தான் வலியுறுத்துகிறது. இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்கு சிலர் திருமறைக்குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்கு தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டால் […]

Next Page »