Tamil Bayan Points

Category: பொதுவான தலைப்புகள் – 2

b104

நல்லிணக்கம் ஏற்படுத்துதல்

நல்லிணக்கம் ஏற்படுத்துதல்  وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் […]

நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)

நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்) அமானிதத்தைப் பேணுவது இறைத்தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹிராக்ளியஸ் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்த குணங்களை வைத்து அவர், நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும். أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ ، […]

வறுமை ஒரு குறையன்று

வறுமை اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 2:268)  اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ தான் நாடியோருக்கு அல்லாஹ் […]

நட்பு கொள்ளும் முறைகளை அறிவோம்!

நட்பு عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ لِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْق அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே! என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்-5122 (4760) நல்ல நண்பனை […]

உலகின் முதல் இறையில்லம்

உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா அல்லாஹ் கூறுகிறான்: وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏ ”நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் […]

நாவைப் பேணுவோம்

முன்னுரை மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே நபிகளார் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் தீனாரோ, திர்ஹமோ பயன்தராது  عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ […]

பேச்சாளர்களே! தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்திடுங்கள்

முன்னுரை மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கும், தாங்கள் சிறந்த பேச்சாளர்களாக ஆவதற்கும் அனைவருமே விரும்புகின்றனர். ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது பல விஷயங்கள் அவர்களுக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தாழ்வு மனப்பான்மை தான். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மிகச்சிறந்த பணியைக் கையில் எடுத்திருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இந்தத் தாழ்வு மனப்பான்மை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களில் இரு வகைகளாக உள்ளனர். 1. […]

முதலாளிகளின் கவனத்திற்கு…

முன்னுரை ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.  சில முதலாளிகள் தங்களது தொழிலாளிகளுக்கு ஆடைகள் வழங்கி அந்நாளை சிறப்பு படுத்துகின்றனர். இத்தினத்தை தொழிலாளர்களோடு கொண்டாடி, இத்தினத்தில் மட்டும் தொழிலாளர்களை சந்தோஷப்படுத்தும் முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு […]

மனிதநேய மார்க்கம்

முன்னுரை – மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே […]

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம் முன்னுரை  அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச் சிந்தனை நாளுக்கு நாள் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. இறையருளால் இந்ந ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள் ஏகத்துவவாதிகள் தான். இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் கொள்கை அறியா மக்களிடமும், கொள்கை எதிரிகளிடமும் சென்றடைய வேண்டுமென்றால், மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமென்றால் அல்குர்ஆனும், அண்ணல் நபிகளாரின் வாழ்வும் போதிக்கின்ற பண்புகளை கொள்கைச் […]

பிறர் நலம் நாடுவோம்

நலம் நாடுவோம் முன்னுரை  பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. இறை நம்பிக்கையின் அடையாளம். இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும். நன்மையான காரியங்களை செய்வது, […]

உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!

உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்! முன்னுரை மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர். இந்த நேரத்தில் நம்மிடம் உதவக் கூடிய நல்லுள்ளத்தை இறைவன் எதிர்பார்க்கிறான். சமீபத்தில் தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, கடலூர் போன்ற […]

நபிகளாரும், அவர்களது மனைவிமார்களும்

நபிகளாரும், அவர்களது மனைவிமார்களும் முன்னுரை நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். தன்னுடைய மனைவிமார்களுடன் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். இன்றைக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தவர்கள், தன்னுடைய மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தாமல் சண்டை சச்சரவுகளடனும்தான் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கணவனிடம் மனைவி சில எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருப்பாள். அந்த எதிர்பார்ப்புகள் சில ஆரோக்கியமானதாகவும், சில ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும். ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளை கணவன் நிறைவேற்றிக் கொடுக்க […]

நன்மை செய்ய துணை புரிவோம்

நன்மை செய்ய துணை புரிவோம் ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது பற்றியும் அதிகளவு கூறப்பட்டுள்ளது. وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் […]

மனிதனுக்கேற்ற மார்க்கம்

மனிதனுக்கேற்ற மார்க்கம் உலகில் ஏராளமான மதங்கள் உள்ளன. இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களைப் போன்று அல்லாமல் ஏராளமான தனிச்சிறப்புகளைப் பெற்று, தனித்து விளங்குகின்றது. அவ்வாறான தனிச்சிறப்புகளில் ஒரு விஷயம் குறித்து இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ள இருக்கின்றோம். மனிதன் உலகத்தில் வாழும்போது நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கடவுள் நம்பிக்கை உள்ளவரானாலும் நாத்திகரானாலும் இந்த உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள். இறைவனை மறுக்கும் நாத்திகன், “கடவுள் எதற்கு? உலகத்தில் வாழும் போது நல்லவனாக வாழ்ந்தால் போதும்’ […]

அஞ்சா நெஞ்சம் கொள்வோம்

அஞ்சா நெஞ்சம் கொள்வோம் முன்னுரை உலகில் மனிதர்கள் பல வகையான ஏற்றத்தாழ்வுகளுடனே வாழ்ந்து வருகின்றனர். குட்டை, நெட்டை, கறுப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் போன்ற எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களுக்கிடையில் உள்ளன. ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாக, சிறு துரும்பைக் கண்டால் கூட பதறுபவர்களாக இருப்பார்கள். மறு சிலரோ எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சட்டை செய்யாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறாக மனிதர்களில் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்பவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் என இரு வகையினர் […]

குளிர் தரும் போதனைகள்

குளிர் தரும் போதனைகள் முன்னுரை சத்தியத்தை விளங்கிக் கொள்வதற்கு ஏராளமான சான்றுகள் வானங்கள் மற்றும் பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று நம்மைச் சுற்றி நிகழும் பருவ மாற்றம் ஆகும். மழை, வெயில், குளிர் என்று மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை மாற்றத்தைப் பற்றி முறையாக, சரியாகச் சிந்தித்தால் சத்தியத்தைத் தெரிந்து கொள்ளலாம். பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் பரம்பொருளான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவனுக்கு மட்டுமே படைப்பினங்களின் மீது அபரிதமான ஆற்றல், பரிபூரணமான […]

சுவனத்தின் நிழலும் நிழலில்லா நரகமும்

சுவனத்தின் நிழலும் நிழலில்லா நரகமும் முன்னுரை கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள். கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை […]

சிறு நேரத்தில் பெரு நன்மைகள்

சிறு நேரத்தில் பெரு நன்மைகள் முன்னுரை மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர். அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில் போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு இருப்பதைக் காண முடிகிறது. முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் […]

அறியாமைக்கால பழக்கங்கள்

அறியாமைக்கால பழக்கங்கள் வீட்டுக்குள் வரும்போது சகுனம் பார்த்தல் قَالَ سَمِعْتُ الْبَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا كَانَتْ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ وَلَكِنْ مِنْ ظُهُورِهَا فَجَاءَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ فَنَزَلَتْ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا […]

வெறுக்கப்பட்ட தீய குணங்கள்

வெறுக்கப்பட்ட குணங்கள் பொய் சாட்சி وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்: 25:72) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْكَبَائِرِ قَالَ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَشَهَادَةُ الزُّورِ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) […]

அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும்

அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் இஸ்லாம் ஒரு வாழ்வியல் மார்க்கம். இதில், மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும், உரிமைகளும், மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும். பெற்றார்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும், பிள்ளைகள் பெற்றார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும், கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும், மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும் அல்லாஹ்வும், இறைதூதரும் குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லித் தருகிறார்கள். அதில், மனிதன் மனிதனுக்குச் செய்ய […]

கேள்வி கேட்பது குற்றமா?

முன்னுரை இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் என்று பாமர மக்களை பயமுறுத்துகிறார்கள். தங்களுடைய கருத்துக்கு ஆதாரம் என்று சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள். அந்தச் செய்திகள் பற்றிய விளக்கத்திற்கு முன்பாக, மார்க்கம் தொடர்பான கேள்விகளைத் தொடுப்பதற்கு ஏதேனும் […]

கை கழுவுதலை கை கழுவாதீர்

முன்னுரை மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும். எனவே அப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதிலும், வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்துவது கடமையாகும். இந்த வகையில் அமைந்த ஒன்று தான் மனிதன் பேணவேண்டிய சுத்தம் சுகாதாரமாகும். நமது தேசம் 68 ஆண்டு சுதந்திர […]

முறையறிந்து ஸகாத் கொடுப்போம்

முன்னுரை ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் நாம் அனைவரும் அறிவோம். ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது இணை கற்பிப்பவர்களின் பண்பு என்று குர்ஆன் கூறுகிறது. இணை கற்பிப்பவர்களின் பண்பு …وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏ الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ‏ இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள். (அல்குர்ஆன்: […]

தொழுகையில் தொடரும் நன்மைகள்

முன்னுரை  ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்? பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்தல் இதுபோன்ற பல சிறந்த அமல்கள் இருந்தாலும் அல்லாஹ் தொழுகைக்குத்தான் முன்னுரிமை வழங்கிறான். முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழுகைக்கு மட்டும் பல நன்மைகளை வழங்குகிறான். தொழுகைக்காக உளூ செய்தால், […]

பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்

முன்னுரை ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான். நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த […]

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்

முன்னுரை இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை அரவணைப்பதாகும். அனாதைகள் மனித சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கே திக்கற்றவர்கள். எந்த வகையிலும் தங்கள் வாழ்வாதாரங்களைப் பெற்றிட எந்தவொரு பக்கபலமும் இல்லாதவர்களாக உலகில் அனாதைகள் இருந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் […]

வெட்கம் அனுமதியும் தடையும்

முன்னுரை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது. ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், […]

உன்னுடைய ஏதிரியைத் தெரிந்து கொள்

முன்னுரை நம் ஒவ்வொருவரிடமும் ஷைத்தான் இருக்கிறான். ஆனால்,  எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக, பேய் பிடித்ததாக, நோய் வருவதாக தவறாக நம்புகிறார்கள். ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு மேற்கூறியது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான். […]

இடையூறுகளைத் தவிர்த்தல்

சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர் وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ سورة البقرة ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். […]

நேர்மை நீதியை நிலைநாட்டுங்கள்

நீதியை நிலைநாட்ட வேண்டுமென்பது இறைவனின் கட்டளை قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ “எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்” எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்! (அல்குர்ஆன்: 7:29) إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى […]

தலைவர்களின் பண்புகள்

முன்னுரை அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், மக்களை ஆட்சி செய்பவர், அதிகாரிகள், ஒரு ஜமாஅத்தின் தலைவர், ஒரு கிளையின் தலைவர்  என தலைமைத்துவமும், அதிகாரமும் கொண்டிருக்கும் எந்த தலைவராக இருந்தாலும் அவர்களுக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் நாம் பின்பற்றுகிய இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுத் தருகிறது. அதனை இந்த உரையில் பார்க்க இருக்கிறோம். பொறுப்பு ஓர் அமானிதம் عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ […]

ஹுதைபியா உடன் படிக்கை

ஹுதைபியா உடன்படிக்கை – ஓர் வரலாற்றுப் பார்வை! இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப் பயணமாகவே பார்த்தனர். நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் […]

மஹ்ஷரில் மனிதனின் நிலை

முன்னுரை ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். […]

ஜும்ஆவின் சட்டங்கள்

வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குரிய நாள் عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى. ”இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே […]

மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்

முன்னுரை குர்ஆனை நோக்கி மக்கள் படையெடுப்பதற்கு அதன் கருத்தும், கொள்கையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும், பலரும் வியக்கும் ஒரு முக்கிய அம்சம், ஒலி அலைகளால் பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனின் ஓசை நயம் தான். இசைக்கு இல்லாத குர்ஆனின் ஈர்ப்பு விசை தான். இந்த ஒலி நயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்கள். عَنْ أَبِي مُوسَى ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه […]

உழைத்து வாழ வேண்டும்

முன்னுரை இறைவன் சிலருக்கு வறுமையையும், சிலருக்கு செல்வத்தை வாரி வழங்கவும் செய்கிறான். வறுமை என்பது இறைவனது சாபமும் அன்று. செல்வம் என்பது இறைவன் நல்லவர்களுக்கு வழங்கும் பரிசும் அன்று. மாறாக, செல்வம் என்பது இறையருள். அதனை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் என அனைவருக்கும் இறைவன் வழங்குகிறான் என்றும், அதனை தேட வேண்டும் என்றும் இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. செல்வத்தை தேடுவதும் இறைவனுடைய கட்டளையில் உள்ளது தான். அதனை தேடும் முறைகளை இன்றைய உரையில் பார்க்க இருக்கிறோம். செல்வம் என்ற […]

தற்பெருமையும் ஆணவமும்

முன்னுரை பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது. பெருமை இப்லீஸுக்கு வந்ததால் தான், அவன் சிறுமையடைந்தான். நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான்.  இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சிப்பான். குறிப்பாக, அவனுக்கு நேர்வழி கிடைக்காது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது. […]

வறுமை வருத்தப்பட வேண்டிய விஷயமன்று

முன்னுரை வறுமை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான். اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ  ۙۖ‏ ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 2:268) செல்வம் இறைவனது நாட்டம் اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ […]

இவ்வுலகம் முதல் மறுமை வரை

மனிதன் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து, தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள். இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (IC Chips) லும் பதியப்படுகின்றன. அதிலும் […]

இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொருத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி, சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் சீர்படுத்தக் கூடிய […]

பிறர் மானம் காப்போம்

  அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! தன்மானம் பேணச் சொல்லும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மானத்தையும், மரியாதையும் பாதுகாக்க வேண்டும். எந்நிலையிலும் தன்னுடைய மானத்தையும், மரியாதையும் இழந்து விடக்கூடாது. ஒருவர் மானத்தையும், மரியாதையும் இழக்க நேரிட்டால் […]

அல்லாஹ்வை நேசிப்போம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் வாழும் போது, ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை. அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை. இந்த மூன்று நிலைகளில், நாம் இறந்து, சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு […]

அல்லாஹ்வை நினைப்போம்

அல்லாஹ்வை நினைப்போம் இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன. இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் […]

உபரியான வணக்கங்கள் புரிவோம்

உபரியான வணக்கங்கள் அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான். ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை […]

பிரார்த்தனை செய்வோம்!

பிரார்த்தனையே வணக்கம் இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். “நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே” என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை! عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ […]

« Previous Page