வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற இறைக்கட்டளையின் அடிப்படையில் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும். இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கையின் முதல் அம்சம். அடுத்தபடியாக கடவுள் என்றால் அது ஒரே ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டு கடவுள்கள் அல்லது பல கடவுள்கள் இருக்க முடியாது? குல தெய்வம் என்று குடும்பத்துக்கு […]