Author: Kamila

அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் என்று கூற ஆதாரம் உண்டா?

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா? பதில்: உண்டு. தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக […]

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பெண்கள் பாங்கு சொல்லலாமா? பதில்: பள்ளியில் கூடாது. தனக்காக சொல்லும் பாங்கை பெண்கள் சொல்லலாம் பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. மக்களை பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் […]

சிறந்த தம்பதிகள்

முன்னுரை பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சினை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதற்கும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாகும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறன. […]

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா? இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர். இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ […]

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? பதில்: இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது […]

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன? கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா? பதில்: இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று […]

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிக்ழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல் கொடுத்ததாகவும் அந்த உரை அந்தப் படையினருக்கு கேட்டதாகவும் சில இமாம்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இது உண்மையா பதில்: நீங்கள் கூறும் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் […]

கப்ரை முத்தமிடலாமா?

கப்ரை முத்தமிடலாமா? பதில்: பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இறந்தவர்களின் […]

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல் ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள். இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது. حدثنا عبد الوهاب بن نجدة ثنا سعيد […]

சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

ஆணின் புகார்: நான், எனது சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். செய்யலாமா? தீர்வு: திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் யார் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த […]

உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா?

மனைவியின் புகார் எனக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிக்காஹ் முடிந்து சிறிது நேரத்தில் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வரதட்சணையாக கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் பிறகு வரவே இல்லை. பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு வோறொரு பெண்ணோடு ஒரு ஊரில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. ஒரு நாள் கூட அவரோடு சேர்ந்து வாழவில்லை. அன்றிலிருந்து நான் தனியாகத்தான் வசித்து […]

ஹஜ்ஜில் சலுகைகள்

முன்னுரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹஜ் வணக்கத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள். ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் […]

துல் ஹஜ் – ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி

முன்னுரை எந்த ஒரு வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். பிறருக்காக செய்யப் படும் வணக்கங்கள் நம்முடைய பார்வையில் வணக்கமாகத் தெரிந்தாலும் இறைவனுடைய பார்வையில் அவை வணக்கமாகக் கருதப்படாது. அத்துடன் மட்டுமின்றி மறுமையில் அது தீய செயலாகவும் கருதப்பட்டு, நரகத்திற்குச் செல்ல வழி வகுத்து விடும். எனவே மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தவொரு அமலையும் செய்வது இறைவனிடம் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இன்று ஹஜ் மற்றும் குர்பானி போன்ற வணக்கங்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் செய்யப்பட்டு […]

ஷவ்வால் – என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை

முன்னுரை நம்மிடம் வருகை தந்த இனிய ரமளான் நமக்குத் தலை சிறந்த பள்ளிக்கூடமாகத் திகழ்ந்தது. அந்தப் பள்ளிக்கூடம் நம்மைக் குர்ஆனுக்கு மிக அருகில், அண்மையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இரவுத் தொழுகைகளின் மூலம் குர்ஆனுடன் உளப்பூர்வமான உறவையும் ஒன்றுதலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இரவுத் தொழுகையை நாம் இஷாவுக்குப் பிறகு தொழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸஹர் நேரத்தில் தொழுவது மிகவும் சிறந்ததாகும். பின்னேரம், ஸஹர் நேரமே சிறந்தது وَعَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ بْنِ […]

யார் மணப்பெண் ?

முன்னுரை மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான். அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என […]

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது […]

விபச்சாரம் செய்த கணவருடன், சேர்ந்து வாழலாமா?

மனைவியின் புகார் எனது கணவர் விபச்சார குற்றம் செய்துவிட்டார். இப்போது அது தவறு என்று வருந்துகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழலாமா? தீர்வு விபச்சாரக் குற்றம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது சாட்சிகளின் அடிப்படையில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் திருமணம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கல்லெறிதல் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும். நீங்கள் விரும்பினாலும் சேர்ந்து வாழ இயலாது. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் […]

அண்டை வீட்டார்கள்

அண்டை வீட்டார்கள் மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. […]

பெற்றோருக்கு பிடிக்காத மனைவியை தலாக் கூறலாமா?

ஆணின் புகார்: என்னிடம் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத என் மனைவியை, எனது பெற்றோர் தலாக் செய்துவிடு என்று சொல்கிறார்கள். நான் தலாக் சொல்ல வேண்டுமா? பதில்: நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும் இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது. وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا […]

மாப்பிள்ளை, பெண் வீடு இணைந்து விருந்து தரலாமா?

மாப்பிள்ளை வீட்டாரின் புகார்/கேள்வி: எனது மகனுக்கு திருமணம் செய்ய உள்ளேன். வரதட்சனை, பித்அத் எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீடாகிய நாங்களும், பெண் வீட்டாரும் இணைந்து திருமண விருந்து செலவை பங்கிட்டு செய்யலாமா? பெண் வீட்டார் நாங்களும் செலவு செய்ய விரும்புகிறோம். இது தவறில்லையே என்கிறன்றனர். என்ன செய்வது? பதில்: வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் […]

எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான்

தந்தையின் புகார் எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான். அந்த பெண்ணை மணம் முடித்துத் தரலாமா? தீர்வு அவள் இஸ்லாத்தை ஏற்றால், அந்த பெண்ணையே மணம் தரலாம். கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி […]

என்னை பார்க்கமலேயே தலாக் சொல்லிவிட்டார்!

மனைவியின் புகார் எனது கணவர் என்னை பார்க்கமலேயே தலாக் சொல்லிவிட்டார்! (அல்லது) வெளிநாட்டில் வேலை செய்யும் எனது கணவர், என்னை அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பும், இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செய்துவிட்டார். இது செல்லுமா? தீர்வு இந்த தலாக் செல்லாது. ஏனெனில், கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபியே! பெண்களை நீங்கள் […]

குலா மற்றும் தலாக் வேறுபாடு

தலாக் மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். குலா கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் […]

09) குலாவின் தெளிவான சட்டங்கள்

குலஃ உடைய சட்டங்களின் சுருக்கம் ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும். அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும். அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும். […]

நிச்சயிக்கப்படும் திருமணங்கள்–இஸ்லாமிய தீர்வு

முன்னுரை இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை. இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள். நமது காலத்தில் […]

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் இஸ்லாமிய தேர்வும்

முன்னுரை இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை. இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள். நமது காலத்தில் பெரும்பாலும் […]

பெண்ணிற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இவ்வுலகில் எந்த மதமும் பெண்களுக்கு கொடுக்காத சிறப்பையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய மார்க்கம் கொடுத்துள்ளது. பெண்கள் இந்நாட்டின் கண்கள், என்றும் ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றும் ஏட்டளவில் சொல்பவர்கள் இதைப்போன்றே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்றும் பெண் புத்தி பின்புத்தி என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்று பெண்களை மட்டம் தட்டாமல் பெண்களை மிகச் சிறந்தவர்களாக இஸ்லாம் மதித்து வைத்துள்ளதோடு அவர்களை அவ்வாறு […]

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம். இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை 1. மீன் சாப்பிடக் கூடாது முஸ்லிம்களின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதம் வந்து விட்டால் பிறை 1 முதல் 10 வரை மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறி விடுவார்கள். 2. தாம்பத்தியத்திற்குத் தடை முஹர்ரம் பத்து வரை தம்பதிகளைத் தாம்பத்தியத்தில் ஈடுபட விடாமல் […]

பாவியாக்கும் பராஅத் இரவு

பாவியாக்கும் பராஅத் இரவு சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே […]

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي […]

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

முன்னுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை மதிப்பது எப்படி என்பதில் தான் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெய்ரால் எவற்றை நமக்கு போதித்தார்களோ அதன்படி செயல்படுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அவர்கள் கற்பிக்காமல் நம்மைப் போல் வஹீ வராத […]

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா?

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர் கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய கூற்றையும் மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது. எல்லோரையும் போன்று அவரும் […]

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா?

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா? பதில்: ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர். حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا شِهَابُ بْنُ خِرَاشٍ حَدَّثَنِي شُعَيْبُ […]

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே! பதில்: தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம். حدثنا محمد بن بشار حدثنا عبد الصمد بن عبد الوارث حدثنا هاشم وهو ابن سعيد الكوفي حدثني كنانة مولى صفية قال سمعت صفية تقول دخل علي رسول […]

பைஅத் குறித்து எதிர்க்கருத்து சரியா?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினர் 48:10➚, 9:103➚ வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக உறுதிமொழி எடுக்கக் கூடாது என்றால் நபிகள் நாய்கமும் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே? அவர்களிடம் மட்டும் பையத் செய்ய்லாமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள். பதில்: உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி […]

கந்தூரியில் கடை போடலாமா?

கந்தூரியில் கடை போடலாமா? எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது. (அல்குர்ஆன்: 5:2)➚ தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. தீமைக்குத் துணை போகக் கூடாது […]

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா?

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா? வியாபாரத்தில் பொய் சொல்வதும் அளவு நிறுவையில் மோசடி செய்வதும் இஸ்லாத்தில் வன்மையாக்க் கண்டிக்கப்பட்ட பாவங்களாகும். இந்தப் பாவத்தைச் செய்யுமாறு யார் கூறினாலும் அதை நாம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் செய்யச் சொன்னவரும் செய்தவரும் இருவருமே பாவிகளாகி விடுவார்கள். وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) 1. அளவு, […]

வங்கி வெப்சைட்களின் குறைபாடுகளை சரிசெய்து கொடுக்கலாமா?

வங்கி வெப்சைட்களின் குறைபாடுகளை சரிசெய்து கொடுக்கலாமா? வட்டி தொடர்புடைய வேலைகளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), (முஸ்லிம்: 3258) ➚ வெப்சைட் என்பது ஒரு நல்ல சாதனம். அதனை சிலர் நன்மைக்கும் சிலர் தீமைக்கும் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தீமையான […]

முன்பேர வணிகம் கூடுமா ?

முன்பேர வணிகம் கூடுமா? எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது. ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை […]

வங்கிக்கு சாஃப்ட்வேர் செய்து கொடுக்கலாமா?

வங்கிக்கு சாஃப்ட்வேர் செய்து கொடுக்கலாமா? வட்டி தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), (முஸ்லிம்: 3258) ➚ நீங்கள் தாயரிக்கும் மென்பொருள் வட்டித் தொலிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால் அதை நீங்கள் செய்துகொடுப்பது கூடாது. உங்கள் மென்பொருள் […]

அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா?

அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா? மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்றோ கூறுவதாக இருந்தால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும். எதிரிகளுடனோ எதிரிகளின் நாட்டவருடனோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நமக்கு எதிராக நடப்பவர்களிடம் வியாபாரம் செய்வதோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதோ தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளான யூதர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார்கள். அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு […]

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு வகையான தடை முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை. மற்றொரு வகை முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை. மது அருந்துவது முஸ்லிமுக்குத் தடை செய்யப்பட்டது போலவே இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் இது தடை செய்யப்பட்டதாகும். முஸ்லிமல்லாதவர் மது அருந்தினாலும் விற்பனை செய்தாலும் அது இஸ்லாமிய அரசில் தடுக்கப்படும். அதே நேரத்தில் பட்டாடை அணிவது முஸ்லிம் ஆண்களுக்குத் […]

மாற்றுமத சகோதரர்களுடன் வியாபாரம் செய்யலாமா?

மாற்றுமத சகோதரர்களுடன் வியாபாரம் செய்யலாமா? மாற்று மதத்தவர்களுடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا […]

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா? கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் நீங்கள் பங்கு வாங்குவதை சம்பளம் என்று கூற முடியாது. ஏனென்றால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் போது உங்களுக்குப் பணம் கூடுதலாகக் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும் போது உங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். இது போன்ற பிரச்சனை கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யும் பாட்னர்களுக்கே ஏற்படும். எனவே நீங்கள் உங்களுடைய நண்பருடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் நண்பர் முதலீடு செய்துள்ளார். நீங்கள் உங்களுடைய உழைப்பைக் […]

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா ?

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா? எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ […]

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா ?

வங்கித் தொடர்பான தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியைச் செய்வது கூடுமா? என்பது உங்கள் கேள்வியின் சாராம்சம். வங்கி வட்டியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளது. வட்டித் தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), […]

குத்தகை(லீஸ்) மற்றும் வாடகைக்கு ஆதாரம் உள்ளதா?

குத்தகை(லீஸ்) மற்றும் வாடகைக்கு ஆதாரம் உள்ளதா? வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும் வாடகைக்கு விடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. வீட்டின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு தன் வீட்டை ஒத்திக்கு விடுகின்றார். வீட்டின் உரிமையாளர் அப்பணத்தை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை பணத்தைக் கொடுத்தவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டார். வாடகையும் கொடுக்க மாட்டார். ஒப்பந்த காலம் முடிவடைந்த உடன் வீட்டின் உரிமையாளர் வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பார். இதன் பின் பணம் கொடுத்தவர் தன் […]

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா?

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா? நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன்: 5:2)➚ இந்த வசனத்தின் அடிப்படையில் பாவத்திற்குத் துணை போகக் கூடாது. உங்களுடைய முதலாளி வட்டித் தொழில் பார்க்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம். அந்த வட்டித் தொழில் சம்பந்தமாக உங்களை வேலை செய்யச் சொல்கின்றார் என்றால் அதைச் செய்யக் கூடாது. அவ்வாறின்றி பொதுவான, மார்க்கத்தில் தடுக்கப்படாத வேலைகளையே செய்யச் சொன்னால் அவரிடம் வேலை செய்வதற்கு மார்க்கத்தில் […]

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா?

ஒரு ஆணின் புகார்/கேள்வி (அல்குர்ஆன்: 5:5)➚வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? பதில்: الْيَوْمَ أُحِلَّ لَكُمْ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنْ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنْ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ […]

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா? என்னுடைய தாயார் மிளகாய் விற்றுத்தான் என்னை படிக்க வைத்தார்கள். இது மார்க்க அடிப்படையில் ஹராமா? நான் திருமணம் முடிக்கப்போகும் பெண் யுனிவர்சிடியில் டாக்டர் ஆவதற்கு படிக்கிறார். பெண்கள் வேலைக்கு செல்வது பற்றி தெளிவான விளக்கம் தேவை. பதில்: சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். […]

Next Page » « Previous Page