Author: Trichy Farook

அல்லாஹ்வின் சட்டம் – நிலை நாட்டப்பட்ட நீதி

ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா…. பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, […]

பொது சிவில் சட்டம் ஓர் விரிவான ஆய்வு

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், “பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995 ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு […]

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல் விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது.   இதை ஏற்று தமிழக அரசு முஸ்லிம்களை புண்படுத்தக்கூடிய விதத்திலான காட்சி அமைப்புகள் கொண்ட அந்தப் படத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே அதை […]

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டணை

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்துள்ளது குறித்து அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். சவூதி அரசின் இந்தச் செயல் சரியானதா? பதில் நமது நாட்டில் உள்ள அதிகமான அறிவுஜீவிகளுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று நாம் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வகையில் இவர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. தனக்குத்தானே முரண்படுவதுதான் பைத்தியக்காரத்தனத்தனத்திற்கான ஆரம்ப அறிகுறி. இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது. டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் […]

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்! 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை. பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி, காஷ்மீரை சேர்ந்த […]

தீ மிதிக்க இன்சூரன்ஸ் தமிழக அரசு சிந்திக்குமா?

தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள் தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை. ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு பக்கச்சார்பாகவும், அறிவுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு : தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : […]

காஷ்மீரில் கோவில்கள் இடிக்கப்பட்டனவா?

இந்தியாவின் கோயபல்சுகள் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன் இந்தியாவை ஹிந்து […]

கேள்வி கேட்பது குற்றமா?

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் […]

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?

முன்னுரை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை. அதனை இந்த சிறு உரையில் காண்போம்! அபூஹுரைரா (ரலி) تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا فَكَانَ […]

கை கழுவுதலை கை கழுவாதீர்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும். எனவே அப்படிப்பட்ட […]

முறையறிந்து ஸகாத் கொடுப்போம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் நாம் அனைவரும் அறிவோம். ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது இணை கற்பிப்பவர்களின் பண்பு என்று குர்ஆன் கூறுகிறது. இணை கற்பிப்பவர்களின் பண்பு …وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ […]

சத்தியத்தை சொல்லும் முறைகள்

முன்னுரை அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குதல் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக் கோட்பாடாகும். இந்த சத்தியக் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். இறைவனால் அனுப்பபட்ட எல்லா இறைத்தூதர்களும் இந்தக் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ […]

தொழுகையில் தொடரும் நன்மைகள்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்? பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்தல் இதுபோன்ற […]

பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு […]

ஈராக் போர் வரலாறு

ஈராக் போர் வரலாறு 1991ஆம் ஆண்டு “அப்பன் புஷ்’ இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு “மகன் புஷ்’ ஆக்கிரமித்தான். சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் இராக்கில் நுழைந்தன. ஓர் இறையாண்மை மிக்க அரபு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்ல வேண்டுமாயின், அதுவும் நியாயமான காரணத்தை முன்னிட்டுச் செல்ல வேண்டுமாயின் அதற்கு […]

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை அரவணைப்பதாகும். அனாதைகள் […]

வெட்கம் அனுமதியும் தடையும்

முன்னுரை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது. ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், […]

உன்னுடைய ஏதிரியைத் தெரிந்து கொள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம் ஒவ்வொருவரிடமும் ஷைத்தான் இருக்கிறான். ஆனால், எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக, பேய் பிடித்ததாக, நோய் வருவதாக தவறாக நம்புகிறார்கள். ஷைத்தான் […]

இடையூறுகளைத் தவிர்த்தல்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர் وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ سورة البقرة ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ […]

நேர்மை நீதியை நிலைநாட்டுங்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நீதியை நிலைநாட்ட வேண்டுமென்பது இறைவனின் கட்டளை قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ “எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்” எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! […]

உறவு ஓர் அருட்கொடை

முன்னுரை எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகள் பெரும் சுமையாக பலநேரங்களில் இருந்தாலும் உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரும் பலம். ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்றுதான் உறவுகள். இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன் […]

நோன்பு திறந்த பின் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க“ துஆவை ஓதலாமா?

நோன்பு திறந்த பின் ”அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க…” என்று துவங்கும் துஆவை ஓதலாமா? கூடாது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிக்கல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் அன் தக்ஃபிரலீ” என்ற துஆவை இப்னு உமர் (ரலி) அவர்கள் செய்ததாக இப்னுமாஜாவில் 743வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவே இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்களின் கூற்று மார்க்க ஆதாரமாக முடியாது […]

முதியோர் விட்ட நோன்புக்கு பரிகாரம் உண்டா?

முதியோர் விட்ட நோன்புக்கு பரிகாரம் உண்டா? இல்லை ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது “நோன்பு நோற்க சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. இந்தச் சட்டம் (2:184➚) பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இது குறித்து புகாரியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது […]

பிறையை பார்க்க வேண்டும் என்றால் சிந்திப்பது தான் பொருளா?

பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்கு கண்ணால் பார்க்க வேண்டும் என்பது பொருளல்ல. சிந்திக்க வேண்டும் என்பதுதான் பொருள் என்று சிலர் வாதிடுவது சரியா? பதில் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பார்க்க முடியாத அளவுக்கு மேகமாக இருந்தால் முந்தைய மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளனர். மார்க்க அறிவும் அரபு மொழி அறிவும் இல்லாத ஒரு கூட்டம் பிறையைப் பார்த்து நோன்பு நோற்கக்கூடாது. விஞ்ஞான முறையில் கணித்து நாட்களை முடிவு செய்ய வேண்டும் […]

பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?

பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா? அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன்: 6:121)➚ “அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை […]

மவ்வலிது ஓதாத உணவு ஏன் ஹராம்?

பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா? ? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும். பதில் மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே […]

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா?

கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும். பதில் விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173➚, 5:3➚, 6:145➚, 16:115➚) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று(புகாரி: 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, […]

பாத்திஹா உணவு கூடுமா?

வரதட்சணை, பித்அத்தான திருமணங்களுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் நம் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பும் உணவைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா? பதில் கூடாது வரதட்சணைத் திருமணங்களைப் பொறுத்த வரை அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்ற அடிப்படையில் நாம் அதைப் புறக்கணிப்பதில்லை. உணவு ஹலால் என்றாலும் தீமை நடப்பதால் அங்கு செல்லாமல் புறக்கணிக்கின்றோம். அந்த உணவைக் கொடுத்து விடும் போது அன்பளிப்பு என்ற […]

நமக்கு உணவளிக்கும் பிற மதத்தவருக்கு துஆ செய்வது எப்படி?

பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்? பதில் உணவளித்தவர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும். (பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக. (முஸ்லிம்: 3805) ➚ இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ […]

அஜினா மோட்டாவை உணவில் சேர்க்கலாமா?

அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? பதில் அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, […]

மாற்று மதத்தினருடன் சேர்ந்து சாப்பிடுடலாமா?

நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா? பதில் சாப்பிடலாம் வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ […]

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன? பதில் வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குத் தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை. வீட்டை இடித்து கட்டுவதற்கோ வீட்டின் […]

வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா? பதில் ஏற்கப்படும் வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். […]

வேலையின் காரணமாக ஜம்உ செய்யலாமா?

கேள்வி: நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றேன். அங்கு அஸர் தொழ முடியாத காரணத்தால் லுஹர் தொழும் போது அஸர் தொழலாமா? பதில்: வழக்கமாக்க கூடாது. நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன்: 4:103)➚ இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்திலேயே தொழுதாக வேண்டும். தங்களைப் போன்று வேலைக்குச் செல்பவர்களுக்குத் தொழுகையை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் இருந்தாலும் தொழுகைக்கென ஒரு சிறிய இடைவேளை தான் தேவைப்படும். எந்த அலுவலகமாக இருந்தாலும் […]

வங்கியல் கிளீனிங் வேலை செய்யலாமா?

? நான் துபையில் ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கின்றேன். அந்தக் கம்பெனியில் எனக்கு, வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் ஆபீஸ் பாய், கிளீனிங் போன்ற வேலைகளைக் கொடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட வேலையைச் செய்யலாமா? பதில் தீமையை தடுக்க இயலாது. எனவே, செய்யக் கூடாது. செய்யும் வேலை சரியானதாக இருந்தாலும் செய்யக் கூடிய இடம் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்கள் நடக்காத இடமாக இருக்க வேண்டும். உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். […]

ஊது பத்தி தயாரிப்பது, விற்பது கூடுமா?

பீடி, சிகரெட், பான்பராக் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்பதால் அவற்றைத் தயாரிப்பதோ, விற்பதோ கூடாது என்கிறோம். இது போல் ஊது பத்திகள் பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், தர்காக்கள் போன்றவற்றில் ஆராதனை களுக்காகவே பயன் படுத்தப் படுகின்றன. எனவே ஊது பத்திகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை கூடுமா? பதில் கூடும் ஹராமான பொருட்களை விற்பதும் தடுக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக பன்றி இறைச்சியை எடுத்துக் கொள்வோம். இதை பயன்படுத்துவது எப்படி ஹராமோ அது […]

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம். பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா? பதில் வரைமுறை இல்லை வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அது போன்று பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து அதற்குத் தக்க விலை வைத்துக் கொள்வதற்கும் தடை ஏதும் இல்லை. விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் […]

வட்டியை பெற்று தானம் செய்யலாமா?

போஸ்ட் ஆபீஸில் சிறு சேமிப்பு அக்கவுண்ட் சேர்ந்துள்ளோம். அதற்கு சிறிதளவு வட்டி வரும். அந்தப் பணத்தை தானம் செய்தால் அதில் தவறு உள்ளதா? இது தவறு என்றால் சிறு சேமிப்பு எப்படிச் சேருவது? பதில் வட்டியை பெறவே கூடாது அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் […]

இலவசத்தை தராமல் விற்கலாமா?

சோப்புக்கு ஷாம்பு இலவசம், கிரைப் வாட்டருக்கு தம்ளர் இலவசம் என்று பலவித பொருட்களுக்கு இலவசம் என்று போட்டு விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற இலவசங்களை சில்லரைக் கடைக் காரர்கள் நுகர்வோருக்கு வழங்காமல் வைத்துக் கொள்வது பாவமான செயலா? இலவசம் என்று போட்டு வரும் பொருட்களில் சில்லரைக் கடைக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலாபத் தொகையைக் குறைத்து விடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பதில் கூடாது பொதுவாக இலவசம் என்று எதுவுமே கிடையாது. சோப்புக்கு ஷாம்பு இலவசம் என்றால், சோப்புக்கும் […]

பட்டு, தங்கத்தை பிறமத மக்களுக்கு விற்கலாமா?

? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா? பதில் விற்கலாம் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப் பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” […]

குங்குமம், விபூதி, மஞ்சள் விற்கலாமா?

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் விற்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? பதில் ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்தவற்றிக்கும் மார்க்கம் தடைசெய்தவற்றிக்கும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அந்த பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும் காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனை கொலை செய்யப்பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனெனில் இந்த கத்தி காய்கறி வெட்ட மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதால் அதை […]

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா? பதில் சங்கிலித் தொடராக இருப்பின் கூடாது எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் […]

ஒரு நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

ஒரு நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? பதில் இருக்கலாம் இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. 3144- حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ يَا رَسُولَ اللهِ إِنَّهُ كَانَ […]

கஃபாவில் தொழுவது, பயான் கேட்பது எது சிறந்தது?

கஃபாவில் தொழுவது, பயான் கேட்பது எது சிறந்தது? ஒப்பீடுகள் அர்த்தமற்றவை. அனைத்துமே முக்கியமானவை தான். நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தாலும் இந்த நேரத்தில் கஅபா சென்று தவாஃப் செய்து, மக்ரிப், இஷா தொழுதால் ஒரு லட்சம் நன்மை கிடைக்குமே என்று நினைக்கிறேன். இதில் எது சிறந்த அமல்? நன்மைகள் அதிகம் தரும் என்பதை […]

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?

கேள்வி: பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா? பதில்: இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) […]

பாங்குக்கு உளூ அவசியமா?

கேள்வி : ஆடு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா? பதில்: இல்லை ஆடு,மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம். பாங்கு சொல்வதற்கு உளூ அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.(பார்க்க : திர்மிதி 201,202) பாங்குக்கு உளூ அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. முஅத்தின் பாங்கு சொல்வதைக் […]

உளூ பாங்கின் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? பதில்: இல்லை பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் உளூச் செய்யும் போதும், பாங்கு கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. மேலும் உளூச் செய்யும் போது தலைக்கு மஸஹ் செய்வது அவசியமாகும். தலைக்கு மஸஹ் செய்யும் போது […]

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா?

தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா? பதில்: ஆம். பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன. இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும். ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக […]

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? பதில் அதிகமாக நீட்டப்படுவது கூடாது தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன. பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும். பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும். வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? […]

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா? செய்யலாம் எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூச் செய்வதோ, சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முட்டுக்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இவை தவிர இதர நேரங்களிலும் […]

Next Page » « Previous Page