சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்! புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம். அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தையே மையமாகக் கொண்ட இவ்வுலகில் உலகியல் தேவைகளை நிறைவேற்ற உலகக் கல்வியைப் பயில்விக்கின்றனர். அதே நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி குர்ஆனையும் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓத வைக்கின்றோம். […]