கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்துவதற்காகவும், சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்துக் காட்டுவதற்காகவும் திருமறைக்குர்ஆன் அருளப்பட்டது. கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும், நிகழ்காலத்திற்கான தீர்வுகளையும், எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் திருமறைக் குர்ஆன் உள்ளடக்கியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், தூதுத்துவத்தின் அவசியத்தையும், மனித வாழ்விற்குத் தேவையான சட்டங்களையும், சொர்க்கம் பற்றிய நற்செய்திகளையும், நரகம் பற்றிய எச்சரிக்கைகளையும் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது. திருமறைக் குர்ஆனின் பெரும்பாலான வசனங்கள் மேற்கண்ட நோக்கத்திற்காகத்தான் […]