Author: Mukthiyaar Basha

இஸ்லாத்தின் எதிரிகள்

நயவஞ்சகர்கள் (நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்’’ என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். ‘நயவஞ்சகர்கள் பொய்யர்களே’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது. அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள […]

பெண் புத்தி பின் புத்தியா?

பெண் புத்தி பின் புத்தியா? பெண்களை இழிவு படுத்தும் வண்ணம் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்று கூறி பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில செய்திகளையும், அவை தொடர்பான விமர்சனங்களையும், உண்மையான மார்க்க விளக்கத்தையும் நாம் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் உள்ளது தான் பின் வரக்கூடிய செய்திகளாகும். பெண்களிடம் ஆலோசனை செய்யுங்கள். (ஆனால்) அதற்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள்.  நூல்: கஷ்ஃபுல் கஃபா பாகம்: 2 பக்கம் 4 இவ்வாறு நபி (ஸல்) […]

வாருங்கள் பரக்கத்தைப் பெறுவோம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது. பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும். உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் […]

நன்மையையும் தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே

நன்மையையும் தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே நாம் வாழுகின்ற இந்த உலகத்திலே ஒரு மனிதனுக்கு பல விதமான சோதனைகள் வந்தடையும். அதில் நன்மையான காரியம் நடந்தாலும் தீமை நடந்தாலும் அது விதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாக இருந்தாலும் ஒரு தீமையான விஷயத்தை சந்தோஷமாக ஒரு நல்லதாக மாற்றக்கூடிய அதிகாரத்தை அல்லாஹ் நம் கரத்திலே வழங்கியுள்ளான். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் […]

அழைப்புப்பணியின் அவசியம்

அழைப்புப்பணியின் அவசியம் முன்னுரை அகிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் ஏக நாயன் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஓரே மார்க்கம் புனித இஸ்லாமிய மார்க்கம் ஒன்று  தான். முதல் மனிதரும் தூதருமான ஆதம் (அலை) தொடங்கி இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை இந்த பூமியில் மக்களை அழைத்தது இந்த சத்திய மார்க்கத்தை நோக்கித் தான். எல்லா இறைத்தூதர்களின் பிரதான பணியாக இந்த ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்புப்பணியே இருந்தது என்பதை இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு […]

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்” உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன. முத்தமிடுவோர் தினம், நிர்வாணமாக இருப்போர் தினம், இறுகக் கட்டியணைப்போர் தினம், ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம், பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை […]

வந்த வழியில் திரும்பியோர்

மனிதனை இவ்வுலகில் படைத்து, பரிபாலனம் செய்து வரும் இறைவன் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்தை மனிதர்களின் நேர்வழிக்காக வழங்கி அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றான். அந்த வகையில் யார் எல்லாம் இறைவனின் வார்த்தைகளையும், நபியவர்களின் வழிகாட்டல்களையும் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றான். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இந்த மார்க்கம் யாரையும் நிர்பந்தம் செய்யும் வழிகாட்டல் அல்ல. மாறாக யார் மறுமையில் வெற்றி […]

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

முன்மாதிரி முஸ்லிம் இல்லம் ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும். கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். […]

வறுமை ஒரு வரப்பிரசாதம்

”ஏழ்மை, வறுமை” போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால்  மிகவும் வெறுக்கப்படுகிறது. அனைவரும் நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழவேண்டும், நமக்கு எந்த சோதனைகளும் ஏற்படவே கூடாது என்றுதான் அனைவரும்  நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை அதிகமாக செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் […]

18) ஷீஆக்களின் மறுபிரவேசம்

18) ஷீஆக்களின் மறுபிரவேசம் தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.’ (அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1  பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் – 1  பக்கம்: 238) இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.   ஷீஆக்களின் […]

17) ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள்

17) ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இது பற்றிக் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறினார்கள் என்று புகாரி, முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. எனவே தான் ஆயிஷா (ரலி) அவர்களை வெறுக்கிறோம் என்று கூறுகின்றனர். இது பற்றி விளக்கவும். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது […]

16) இறந்தவர் உயிர் திரும்புவாரா?

16) இறந்தவர் உயிர் திரும்புவாரா? தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன? இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம். […]

15) யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

15) யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!   இரட்டை வேடம் போடும் உலமாக்கள் அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர். ஆனால் அந்த […]

14) மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

14) மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்   ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட் டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர் களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத் தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் […]

13) ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

13) ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்   ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்! கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நான் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி […]

12) நபிமார்களை இழிவுபடுத்துதல்

12) நபிமார்களை இழிவுபடுத்துதல் அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம். அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம். அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் […]

11) கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா

11) கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன்: 7:54) ➚ அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதில் 9:129, 23:86 ஆகிய வசனங்களில் மகத்தான அர்ஷ் என்றும், 23:116 […]

10) மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்

10) மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் இழிவுபடுத்துகின்ற யூதர்கள், மலக்குகளையும் இழிவுபடுத்தத் தவறவில்லை. இறைத் தூதர்களுக்கு மத்தியில் ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்தி வேறுபாடு கற்பிப்பது போன்று மலக்குகளான இறைத் தூதர்களுக்கு மத்தியிலும் வேறுபாடு கற்பிக்கின்றது யூத இனம்! இதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் […]

09) அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா

09) அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா ஷரீஅத்தில் முழுப் பிடிப்பும், பேணுதலும் கொண்ட ஒரே தரீக்கா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஷாதுலிய்யாக்கள், மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுவன் மூலம் தாங்களும் ஷியாக்களின் வாரிசு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விபரங்களைக் கடந்த தொடரில்  கண்டோம். தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா என்பதைக் கீழ்க்காணும் விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தெளிவான மது ரசம் என்னும் ரகசிய ஞான பானத்தை நான் பருகி […]

08) ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்

08) ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள் அல்லாஹ்வை மனிதர்களின் நிலைக்கு இறக்குவது அல்லது மனிதர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவது யூதர்களின் கெட்ட குணங்களாகும். “உஸைர் அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் […]

07) நபிமார்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

07) நபிமார்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள் அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள். இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர் என்பதை வரிசையாகப் பார்த்தோம். இது யூத, ஷியா, சு.ஜ. அணியினர் இறைக் கொள்கையில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். இந்த அணியினர் […]

06) முஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது?

06) முஹம்மது நபிக்குத் தெரியாதது   முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது? ஷியாக்கள் பற்றிய இந்த ஆய்வுத் தொடரில், ஷியாக்களின் கொள்கைகளை அப்படியே உரித்து வைத்திருக்கும் தமிழகத்தின் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்களைப் பற்றியும், அவர்கள் வேதமாக ஓதி வரும் மவ்லிது கிதாபுகள் எப்படியெல்லாம் இஸ்லாத்திற்கு முரணான வகையில் ஷியாக்களை ஒத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம். குறிப்பாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் மவ்லிது வரிகளைக் கடந்த இதழ்களில் […]

05) முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

05) முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்   மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த தொகுப்பில் பார்த்தோம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் […]

04) மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!

04) மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!   ஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ: எனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச் சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல! உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், நாட்களும் தமக்குள் நடக்கவிருப்பதை என்னிடம் வந்து அறிவித்து […]

03) மகான்களும் மறைவான ஞானமும்

03) மகான்களும் மறைவான ஞானமும் அல்லாஹ்வுடைய பண்புகளில் யூதர்கள் விளையாடுகிறார்கள். அது போன்று அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் விளையாடுகின்றனர். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கு அறியாமையும் மறதியும் உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள். இது போன்ற விளையாட்டை இன்று நம்மை உக்கிரமாக  எதிர்க்கின்ற சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரும் செய்கின்றனர். பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்று வைத்துள்ளனர். ஆனால் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் ஷியாயிஸத்தை அடிப்படையாகக் கொண்டது தான். இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம், “நீங்கள் ஏன் அவ்லியாக்களிடம் கேட்கிறீர்கள்? அல்லாஹ்விடம் […]

02) ஷியாக்களின் கடவுள் கொள்கை

02) ஷியாக்களின் கடவுள் கொள்கை அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!) இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன். கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி […]

01) யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

01) யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம் “ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி’, “ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி’ என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின. அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என […]

ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை

ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும். ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும். அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு […]

ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை

ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர் விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி, வளர்ந்து, வாடிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஏகத்துவக் கொள்கை மிக வீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டது தான். மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் […]

கஅபா வரலாறு

முன்னுரை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களேபரம், போர், குண்டு வெடிப்பு என உலகத்தின் அனைத்துப் பகுதிகளும் அமளி துமளியாகி அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் ஒரேயொரு ஊர் மட்டும் அமைதியிலும் அடக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்றது. சுற்றி எரியும் பயங்கர பாவத் தீ அங்கு மட்டும் பற்றாமல், பரவாமல் எப்படித் தள்ளி நிற்கின்றது? அந்தத் தீயை விட்டும் அந்த ஊர் தன்னை மட்டும் எப்படித் தற்காத்துக் கொண்டு தனித்து நிற்கின்றது? சுற்றி எரியும் நெருப்பு வளையத்தின் நடுவே சுண்டைக்காய் […]

வல்லவன் வானத்தில் இருக்கிறான்

வல்லவன் வானத்தில் இருக்கிறான் இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்? வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 67:16) ➚, 17) (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே […]

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும் இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் புரள வேண்டியிருக்கின்றது. அந்த அளவுக்கு மண்ணின் விலை விண்ணைத் தொட்டு நிற்கின்றது. நம்முடைய ஜமாஅத்தில் பணக்கார வர்க்கம் என்பது மைக்ரோ அளவில் தான் உள்ளது. […]

காசு பணமா? கற்பு மானமா?

காசு பணமா? கற்பு மானமா? படிப்பதற்கு முன்… சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது இதன் பொருளல்ல! மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள் கற்பு நெறிகளைப் பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை காரணமாக வழிதவறும் பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது. காலம் காலமாக […]

காலத்தால் சிறந்த கல்வி உதவி

காலத்தால் சிறந்த கல்வி உதவி ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும். இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் […]

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்!

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்! இன்று உலகத்தின் எத்திசையை நோக்கினாலும், மனிதன் அமைதிக்காக ஏங்குகின்றான். எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அத்துமீறல், ஆக்கிரமிப்புப் போர், குண்டு வெடிப்பு, ஏமாற்றுதல், மோசடி, பொருளாதாரச் சுரண்டல், கலப்படம் என்று உலகின் எல்லாப் பகுதிகளும் அமைதியற்றுக் காணப்படுகிறது. அதே போல் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மனித இனத்தைப் பிளவுபடுத்தி, தாழ்த்தப்பட்டவனின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. உலகில் இவை அனைத்தும் […]

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர். கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல் […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு – 2

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு – 2 ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு-1

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு-1 எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 53:3) ➚,4) குர்ஆனும் வஹ்யிதான்! ஹதீசும் வஹ்யிதான்! ஒரு சில ஹதீஸ்களை, ஹதீஸ் குதுஸீ என்று ஹதீஸ் கலையில் வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு வகைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்த வகை ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் சொன்னதாகச் சொல்வார்கள். இதை வைத்து ஹதீஸ் குதுஸீ – புனித ஹதீஸ் என்று குறிப்பிடுவார்கள். […]

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-8

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-8 “இவர் சரியாகத்தான் சொன்னார்!” அன்று காலை, நபியவர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் முகத்தில் கவலை இழையோடியது. “மக்கள் தன்னை பொய்யராக்கி விடுவார்களோ?” என்று நபியவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அபு ஜஹ்லின் வருகை அதனை உறுதிப்படுத்தியது. “என்ன?? ஏதேனும் புது செய்தி உண்டா?” அபு ஜஹ்லின் கேள்வியில் கிண்டல் தொனித்தது. “இன்று இரவு நான் அழைத்து செல்லப்பட்டேன்““எங்கே? ““பைத்துல் முகத்தஸ்” “அப்போது  இங்கே  எப்படி எங்களுடன் இருக்கிறீர்?”“ஆம்” […]

இஸ்லாமிய தீவிரவாதம் (?)

இஸ்லாமிய தீவிரவாதம் (?) உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அனைத்து செய்திச் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் பரவும் முக்கியச் செய்தியின் முதன்மைத் தலைப்பு தான் இஸ்லாமிய தீவிரவாதம் (?) என்பதாகும். இஸ்லாமியர்களைக் குறி வைத்துப் பரப்பப்படும் இப்படி ஒரு சொல்லாடல் எதற்கு? எப்போது? யாரால் உருவாக்கப்படுகிறது என்பதையும் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பதனையும் இக்கட்டுரையில் அலசுவோம். கட்டுரைக்குள் நுழையும் முன் ஒரு குட்டிக் கதை. கத்தைக் கத்தையாக எழுதுவதன் சாராம்சத்தை ஒரு […]

வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம்

வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம் வஹ்ஹாபியிஸம் இன்றைய சூழலில் அதிகம் விமர்சிக்கப் படுகின்ற, எதிர்க்கப்படுகின்ற ஒன்று. ஆனால் இதை எதிர்ப்போரில் பலருக்கும் வஹ்ஹாபியிஸம் என்றால் என்னவென்ற சரியான புரிதல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்கான நியாயமான பதிலாகும். வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற தவறான புரிதலைத் தாண்டி அது குறித்த விபரங்கள் எதையும் சரியாக உள்வாங்க இங்கே யாரும் தயாராக இல்லை. வஹ்ஹாபியிஸம் என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? அது உண்மையிலேயே பயங்கரவாதத்தைத் தூண்டுகிறதா? […]

மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள்

மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே! அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் கட்டளைப்படியே வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கொள்கையை நோக்கி வருமாறு மனிதகுலத்தைத் திருக்குர்ஆன் அழைக்கிறது. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 2:21) ➚ விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி […]

இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம்

இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம் இஸ்லாம் அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்டும் மார்க்கமாகும். இன்றைக்கு உலகெங்கிலும் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்றும், தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய மார்க்கம் என்றும் பொய்ப்பிரச்சாரம் வீரியமாக செய்யப் பட்டாலும், உண்மை இஸ்லாத்தைப் படிப்பவர்களை அது தன் பக்கம் ஈர்த்து வருகின்றது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உணவாக உட்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ள காரணத்தினால் அது “ஜீவ காருண்யத்திற்கு” எதிரான மார்க்கம் என்றும், இதுவே இஸ்லாம் தீவிரவாத […]

மனித உயிர் புனிதமானது

மனித உயிர் புனிதமானது மனித உயிர் புனிதமானது; மதிக்கப்பட வேண்டியது; முக்கியத்துவமாகக் கருதப்பட வேண்டியது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர், உயர்ந்தவர்–தாழ்ந்தவர், பணக்காரர் – ஏழை, ஆண்கள் – பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது. ஆனால், இன்றைய நவீன நாகரிக காலத்தில் மனித உயிர்கள் துச்சமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றது. மதிக்கப்பட வேண்டிய விதத்தில் மனித உயிர்களை மதிக்காமல் இழிவுபடுத்தப்படுகின்றது. ஐந்து அறிவு பிராணிகளின் உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மனித […]

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? இஸ்லாம் வாளால் பரவியது என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப சவூதி அரசின் கொடியில் வாள் பொறிக்கப்பட்டிருப்பது இந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கின்றது. சவூதி அரேபியாவின் கொடியில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்ற இஸ்லாமிய பிரகடனத்திற்குப் பின் வாள் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால் அது, அரசனாக […]

இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை

இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை அன்றும் இன்றும் இஸ்லாம் விமர்சனத்திற்குரிய மார்க்கமாகவே இருந்துள்ளது. என்றாலும் அதன் அறிவுரைகளும் போதனைகளும் எல்லோரின் உள்ளங்களையும் ஈர்த்தது. இந்த வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதிகளையும் அறிவற்ற விமர்சனங்களையும் வைத்தனர். இறைவனின் பேருதவியால் அந்தந்த கால அறிஞர்கள் இவர்களின் சத்தற்ற வாதங்களுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்து இஸ்லாத்தின் மேன்மையை மென்மேலும் வளர்த்து வந்தனர். இதே போன்று இன்றைய காலத்திலும் இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் கடுமையாக இருப்பதையும் அதே அளவு அதன் […]

இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள்

இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் குடும்ப அமைப்பு, நட்பு வட்டாரம், வியாபாரத் தொடர்பு மற்றும் வேறு பலவிதமான தொடர்புகள் என ஏதேனும் ஒரு விதத்தில் இன்னொரு மனிதனைச் சார்ந்திருக்கிறான். சங்கிலித் தொடர்பு கொண்ட மனித சமுதாயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் தனி மனிதனுக்கு உரித்தான உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறாமல் இருத்தல் வேண்டும். மனித உரிமைகளின் பட்டியல் நீண்டு காணப்பட்டாலும் அத்தனை விஷயங்களையும் […]

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல1

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல! சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம். இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம் வறுத்தெடுக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தவிர உலகத்தில் எந்த ஒரு மதமும் தனக்கு முன் இப்படிப்பட்ட அடைமொழிகளையும் அவப்பெயர்களையும் சுமந்திருக்காது. அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்தப்படுகின்றது. எங்காவது வெடிகுண்டு வெடித்து விட்டால் போதும்! உடனே […]

நபிகளார் எப்போது பிறந்தார்கள்?

நபிகளார் எப்போது பிறந்தார்கள்? இறைவனின் இறுதித் தூதுவராக அரபுலகத்தில் வருகை தந்து, மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, அழகிய வாழ்க்கை முறையை இவ்வுலகத்திற்குத் தந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நபிமொழி மற்றும் வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தவொரு தனிநபரின் பிறப்பு, இறப்பு அடிப்படையில் எந்தச் சிறப்பும் இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் பிறப்பை மையமாக வைத்து, மார்க்கத்திற்கு முரணான வகையில் […]

இறையருளை பெற்றுத்தரும் துல்ஹஜ் பத்து நாட்கள்

இறையருளை பெற்றுத்தரும் துல்ஹஜ் பத்து நாட்கள் அல்லாஹ்வின் அருள் பொங்கும் ரமலான் மாதத்தை மிகச் சிறப்பான முறையிலும் நன்மைகளை அதிகமதிகம் செய்தும் கழித்திருக்கின்றோம். நமக்கு வழங்கப்பட்ட அற்புதமான வாய்ப்பை நம்மில் பெரும்பாலானோர் கன கச்சிதமாகப் பயன்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்திருக்கின்றோம். ரமளானைத் தொடர்ந்து நன்மைகளை நாம் அதிகமதிகம் செய்து இறையருளில் நனைய வேண்டும் என்பதற்காக நம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது துல்ஹஜ் மாதம். இந்த துல்ஹஜ் மாதம் என்பது ரமளானுக்கு அடுத்தபடியாக நம்மை சொர்க்கத்தின் பாதையில் […]

Next Page » « Previous Page