Author: Mukthiyaar Basha

16) ஆதாரம் : 15

பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. (மத்தேயு 6 : 8 – 10) இயேசு இறைவேதத்தையும், வணக்க வழிபாடுகள் செய்யும் முறைகளையும், இன்னும் பல உபதேசங்களையும் மக்களுக்குப் போதித்தார், கற்றுக் கொடுத்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து இயேசு கடவுளுமல்ல! […]

15) ஆதாரம் : 14

17.நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5 : 17 – 19) நியாயப் பிரமாணம் என்றால் இறைச் செய்தி ஆகும், தீர்க்க தரிசனங்கள் என்றால் நபிமார்களின் போதனை ஆகும். இயேசு அவர்கள் இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அதை முழுமைப்படுத்துவதற்கே தான் […]

14) ஆதாரம் : 13

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். (மத்தேயு 21 : 10. 11) இவ்வசனமும் இயேசு இறைத்தூதர்தான் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல! இயேசு வாழும் காலத்தில் மக்கள் அவரைக் இறைத்தூதராகத்தான் நம்பியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

13) ஆதாரம் : 12

மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். […]

12) ஆதாரம் : 11

இயேசுவைத் தீர்க்க தரிசி எனக் குறிப்பிடும் பைபிள் வசனங்கள் “தீர்க்கதரிசி” என்றால் “இறைத்தூதர்” என்று பொருளாகும். பைபிளின் ஏராளமான வசனங்களில் இயேசு தீர்க்கதரிசி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளார். என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5 : 11, 12) இது இயேசு தனது சீடர்களுக்குச் செய்த உபதேசமாகும். “உங்களுக்கு முன்னிருந்த […]

11) ஆதாரம் : 10

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். (மத்தேயு 15 : 24) மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் இயேசு இறைவனிடமிருந்து அனுப்பட்ட இறைத்தூதர்தான் என்பதை இயேசுவின் வாய் வார்த்தைகளிலிருந்தே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்குப் பிறகும் இயேசுவை இறைவன் என்றோ, இறைவனின் மகன் என்றோ, கூற முடியுமா? இயேசு இறைவனின் தூதர்தான் என்பதற்கு பைபிளில் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.

10) ஆதாரம் : 9

23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். 24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவன் 5 : 23, 24)

09) ஆதாரம் : 8

32. ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். 33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். (யோவான் 7 : 32, 33)

08) ஆதாரம் : 7

32. ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். 33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். (யோவான் 7 : 32, 33)

07) ஆதாரம் : 6

14. பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. […]

06) ஆதாரம் : 5

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8 : 39, 40) “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்” என்று இயேசு தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வாசகம் இயேசு இறைவனின் தூதர்தான் என்பதை எடுத்துரைக்கிறது. ஏனெனில் இறைவனிடமிருந்து […]

05) ஆதாரம் : 4

நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (என்று கூறினார்.) (யோவான் 8 : 41, 42) “நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்” என்ற இயேசுவின் வார்த்தைகள் […]

04) ஆதாரம் : 3

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். (யோவான் 17 : 3. 4) இது இறைவனை நோக்கி இயேசு கூறிய வாசகங்களாகும். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்ற இயேசுவின் வார்த்தை அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதை ஒளிவு மறைவின்றி அவரின் வார்த்தைகளிலிருந்தே எடுத்துரைக்கிறேன். “ஒன்றான […]

03) ஆதாரம் : 2

என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. (யோவான் 5 : 37, 38) ‘என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்’ ‘அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை’ ஆகிய வாசகங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு என்பதற்குத் தெளிவான சான்றாகும். அதுமட்டுமல்ல! […]

02) ஆதாரம் : 1

அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார். (லூக்கா 4 : 43, 44) மேற்கண்ட வாசகம் இயேசு அவர்கள் தமக்கு முன்னிருந்து மக்களை நோக்கிக் கூறியதாகும். “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப் பட்டேன்” என்று இயேசு கூறியதாக இடம் பெற்றுள்ளது. தேவனுடைய ராஜ்யம் என்றால் மறுமை வாழ்வைக் குறிப்பதாகும். அதாவது மரணித்திற்குப் […]

01) முன்னுரை

இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் தூதர்தான் என திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும். இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் உண்மையான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும்தான் வணங்குமாறு மக்களுக்குக்குப் போதித்தார்கள். இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், இன்ஜீல் வேதங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் ஈஸா எனும் இயேசு அவர்கள் இறைவனிடம் உயர்த்தப்பட்ட பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் அவரை இறைவனுடைய மகன் என்றும், அவர்தான் இறைவன் […]

வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்?

நான் இந்து சகோதரரிடம் பிரச்சாரம் செய்யும் போது கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும், நம்மைப் படைப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்? அவரை வணங்க படைத்தாரென்றால் அவருக்கு அந்த வணக்கம் தேவையா? நன்மை செய்தால் சொர்க்கம் என்றும், தீமை செய்தால் நரகம் என்றும் கொடுத்து எதற்கு இந்த வேண்டாத வேலை? நம்மைப் படைத்ததே வேஸ்ட் தானே என்று கேட்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் பதில் கூறவும். – பாரூக், மைலாப்பூர் அல்லாஹ் எந்த […]

04) ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது

ஓரிறை கோட்பாட்டின் மீது தான் இஸ்லாம் என்கிற சித்தாந்தமே நிறுவப்பட்டிருக்கிறது. இன்று பரவலாக மக்கள் நம்பியிருக்கும் பல தெய்வ நம்பிக்கையை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக, அவற்றை அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கையாகவே பார்க்கின்றது. சம அளவிலும், சம அந்தஸ்து மற்றும் அதிகாரம் கொண்டவராகவும் ஒரு துறைக்கு இருவர் இருக்க முடியாது என்பதே உலக நியதி. ஒரு தேசத்தின் பிரதமராக ஒருவர் இருந்தால் அந்த தேசம் கட்டுக்கோப்பாக செல்லுமா அல்லது, சம அதிகாரத்துடன் இருவர் இருந்தால் கட்டுக்கோப்பு இருக்குமா? ஒரு […]

03) ஒருவனே தெய்வம்

குலம் எப்படி ஒன்றாக உள்ளதோ, அந்த குலத்தை உருவாக்கிய கடவுளும் ஒருவர் தான். மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; இன்று எதையெல்லாம் மனிதன், கடவுளாக கருதி வணங்கிக் கொண்டுள்ளானோ அவையாவுமே கடவுளால் படைக்கப்பட்டவை எனவே அவையும் கடவுளாக முடியாது. தான் ஒருவன் மட்டுமே கடவுள், தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். “மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் […]

02) ஒன்றே குலம்

நாம் வாழும் இவ்வுலகில் பன்முகத் தன்மை கொண்ட சித்தாந்தங்கள் பின்பற்றப்படுகின்றன. கடவுட் கோட்பாடானாலும், வாழ்வியல் ரீதியிலான வழிகாட்டுதல்களாக இருந்தாலும் அவை பல உட்கூறுகளுடன் பிரிக்கப்பட்டு, அவற்றை பின்பற்றும் சாராரும் பல மாறுபட்ட கருத்தியல்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், என்ன தான் மாறுபட்ட கருத்தியல் கோட்பாடுகள் மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகளை கற்பித்தாலும் அவை ஒரு போதும் மனிதகுலத்தை பிளவுபடுத்தி விடக் கூடாது என்பதில் மட்டும் இஸ்லாமிய சித்தாந்தம் அடிப்படையிலேயே உறுதி காட்டுகிறது. ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் […]

01) முன்னுரை

இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பல விதமாக உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம், மிகப்பெரிய அருட்கொடையாக நமக்கு அருளப்பட்டிருக்கின்ற பகுத்தறி வினை சரிவர பயன்படுத்தாதனிடைய விளைவு, இன்று சாதி, மத, இன, மொழி போன்ற பேதங்களுடன் சர்ச்சைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்து இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம். ஆம்..! மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிப்பது என்பது நாம் கொண்டுள்ள மிக உயரிய கிரீடமான பகுத்தறிவுக்கே முரணானது. காரணம், பிறப்பால் மனிதர்களிடையே […]

30) பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்

சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. அதேசமயம், பகுத்தறிவு இல்லாத பிராணிகள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்: வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது. நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலைக் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் […]

29) பாதையில் பிறர்நலம் நாடுதல்

மக்கள் வந்துச் செல்லும் பாதையில் இருக்கும் போதும் சமூக சிந்தனையோடு செயல் பட வேண்டும். பாதையில் வருவோர் விசயத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஒருபோதும் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் காரியங்களை செய்யக் கூடாது. நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம். நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், […]

28) சுற்றுச்சூழலில் நலம் நாடுதல்

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்று முதலே மனித குலத்திற்குப் போதிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்: அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு […]

27) சபைகளில் பிறர்நலம் நாடுதல்

மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் அடுத்த மக்களின் வீடுகளுக்கு. சபைகளுக்குச் செல்லும் போதும் அங்கிருக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. இதோ சில செய்திகளைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு. அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் மக்கள் நன்கு […]

26) பள்ளிவாசலில் பிறர்நலம் நாடுதல்

எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாட வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வின் ஆலயத்திலும் இதைக் கடைபிடிக்க வேண்டும். பள்ளிவாசலை பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்கு துன்பம் தரும் காரியங்களை செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகளை செய்யும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் […]

25) வியாபாரத்தில் நலம் நாடுதல்

பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர்நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப் படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களை செய்கிறார்கள். இலாபத்திற்காக பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனும் மோசமான மனப்போக்கு பலரிடம் முற்றிக்கிடக்கிறது. மார்க்கம் தடுத்த காரியங்கள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. ஆகவே, பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் […]

24) பொறுப்பின்கீழ் உள்ளோருக்கு நலம் நாடுதல்

ஆட்சி பீடத்தில், அதிகார மட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஏதேனும் ஒரு சிறு பொறுப்பில் இருப்பவர்கள், உடனிருப்போரை கண்காணித்து வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழே இருக்கும் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர். அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கினால். அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! […]

23) குடிமக்களின் நலம் நாடுதல்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மற்ற நேரங்களிலும் வழக்கத்தைவிடக் கூடுதலாக அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள். முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், […]

22) தேவையுள்ளோருக்கு நலம் நாடுதல்

சமூகத்தில் ஏதேனும் தேவையை நிறைவேற்ற முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கும் மக்கள் இருப்பார்கள். அத்தகைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்கக் கூடாது. உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம் நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ‘இல்லை’ என்றார். வானவர்கள் நன்கு நினைவுபடுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) ‘நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க […]

21) பாதிக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்

நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலோ அல்லது வேறு ஏதாவது விசயத்திலோ யாரேனும் பாதிக்கப்படும்போது. அவர்களின் துயர் துடைப்பதற்கு கொஞ்சமாவது உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் நீங்கி நலமாக வாழ நாம் அதரவு அளிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் […]

20) அநீதி இழைக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்

நெருக்கடியான சூழ்நிலையில் மாட்டித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள். அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றவர்கள் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பிறரால் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாசாவைப் பின்தொடரும்படியும், […]

19) பெண்களுக்கு நலம் நாடுதல்

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனம் கொண்டவர்கள்; வலிமை குறைந்தவர்கள். ஆகவே பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதும் வாடிக் கையாகி விட்டது. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது. எப்போதும் பெண்களுக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறது. பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன்: 2:228) ➚ பெண்களிடம் […]

18) ஆதரவற்றோருக்கு நலம் நாடுதல்

சமூகத்தில் பல தரப்பட்ட வாழ்க்கை நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோரும் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றவர்கள், சுயநலமாக இருந்து விட கூடாது. வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுவோரின் முன்னேற்றத்திற்கு கரம் நீட்டி ஒத்துழைக்க வேண்டும். கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி […]

17) ஏழைகளுக்கு நலம் நாடுதல்

அடிப்படையான வாழ்வியல் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் அநேகர் உள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையின்றி வாடும் மக்களோ ஏராளம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப் படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),          நூல்: (புகாரி: […]

16) ஊழியருக்கு நலம் நாடுதல்

முதலாளிகள், தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களை சுமத்திவிடக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை காலதாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான பொருளாதம் பெற்று வளமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை விளங்கி எப்போதும் அவர்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் […]

15) முதலாளியின் நலம் நாடுதல்

பொருளாதார விஷயத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதாரத்திற்காக பிறரிடம் வேலை செய்து வருகிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாட வேண்டும். மார்க்கம் அனுமதித்த வகையில் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடாமல், தரப்படும் பணியை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும். தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி. அவனுக்கு நலம் […]

14) அண்டை வீட்டாருக்கு நலம் நாடுதல்

இன்றைய அவசர உலகில், அடுக்குமாடுகள் நிறைந்த கால கட்டத்தில் பக்கத்து வீட்டில் எவர் வசிக்கிறார் என்று கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அண்டை வீட்டாரை அந்நிய நாட்டவரை போல அணுகும் மனநிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமோ அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்து கொள்ளவும் அவர்கள் விசயத்தில் அக்கறை கொள்ளவும் போதிக்கிறது. எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: […]

13) சொந்த பந்தங்களுக்கு நலம் நாடுதல்

உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நன்மைகளை செய்ய வேண்டும். ‘எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) […]

12) உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்

தம்மைப் போன்று. தமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென எல்லோரும் நினைக்க வேண்டும். அவர்களிடம் பொறாமைப்பட்டோ, போட்டிப் போட்டுக் கொண்டோ அவர்களுக்கு கெடுதல் செய்ய துணிந்துவிடக்கூடாது. எப்போதும் நம்முடன் பிறந்தவர்களின் நலனிலும் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக்) செய்து விடுமாறு (கணவனிடம் கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள […]

11) வாழ்க்கை துணைக்கு நலம் நாடுதல்

குடும்பங்களின் தொகுப்பு தான் சமுகம். சமூகம் சரியாக இருக்க வேண்டுமெனில் குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனும் மனைவியும் சரியாக இருப்பது அவசியம். அவர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை (அல்குர்ஆன்: 2:187) ➚ எப்படி ஆடை மானத்தையும் குறைகளையும் மறைக்கிறதோ, பாதுகாப்பு அளிக்கிறதோ அவ்வாறு குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். […]

10) குழந்தைகளின் நலம் நாடுதல்

குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். ஆகவே குழந்தைகளை பெற்றோர் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் இருக்க முடிந்தளவு தக்க ஏற்பாடுகளை செய்வதோடு, அவர்களுக்கு அனைத்திலும் நல்வழி காட்ட வேண்டும்; நல்லொ ழுக்கங்களை போதிக்க வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவர்களுக்கு இடையே பாகுபாடு பார்க்க கூடாது. நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் […]

09) பெற்றோருக்கு நலம் நாடுதல்

பிறர் என்று சொல்லும் போது அந்தப் பட்டியலில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும். அவர்களை புண்படுத்துவதோ துன்புறுத்துவதோ பெரும்பாவம். மார்க்கத்திற்கு முரணாக இல்லாத காரியங்கள் அனைத்திலும் அழகிய முறையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும். என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் […]

08) பிறர் நலன் நாடும் அறிவுரைகள்

பிறர்நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம் ; இறையச்சத்தின் வெளிப்பாடு. மேலும் ஈருலகிலும் இறைவனின் உதவியைப் பெறுவதற்குரிய மகத்தான வழிமுறை என்று இஸ்லாம் பறைச்சாட்டுகின்றது. மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்கு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்தி உள்ளது. நலம் நாடுதல் என்று பொதுவாக குறிப்பிட்டு சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்று சொன்னால் […]

07) பிறர்நலம் நாடிய நபிகளார்

பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம். (நபியவர்கள் ஹிரா குகையில் இருந்தபோது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், […]

06) பிறர்நலம் நாடுவோரும், கெடுப்போரும்

சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் மனமுவந்து உழைக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களை, இழப்புகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள். பொதுப் பணிகளில் தூய சிந்தனையோடு தியாக உணர்வோடு அயராது ஈடுபடும் இத்தகைய மக்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரிவான்; அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம். நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி),” […]

05) அனைவரும் நலம் நாட வேண்டும்

சமூகத்தில் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. அடுத்தவர் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இதோ நபியின் எச்சரிக்கையைக் கேளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். […]

04) பிறர்நலம் நாடுவதும் தர்மமே!

இஸ்லாத்தின் பார்வையில் செல்வத்தை ஏழை எளியோருக்கு கொடுப்பது, நற்பணிகளுக்குக் செலவழிப்பது மட்டுமல்ல, பிறர் நலத்தை நாடும் வகையில் செய்கிற காரியங்கள் அனைத்தும் தர்மமாக கருத்தப்படும். தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், ‘இறைத் தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்..?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து. தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் […]

03) பிறர்நலம் நாடுமாறு உறுதிமொழி

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்ட மக்களுக்குப் பல விசயங்களைக் கட்டளையிட்டார்கள். அதன்படி, அன்றாட வாழ்வில் அவசியம் கடைபிடிப்பதாக பல விசயங்களை நபித்தோழர்கள் இறைத்தூதரிடம் உறுதி மொழியாகக் கொடுத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும். ஸகாத் வழங்குவதாகவும். ஒவ்வொரு முஸ்லிலிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன். அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), (புகாரி: 57, 58, 2714) (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]

பெற்றோரை போற்ற சொல்லும் இஸ்லாம்…

“இஸ்லாம்” இறைவனின் மார்க்கம் “திருக்குர்ஆன்” இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. “அல்லாஹ்”வின் இறுதி தூதர் முஹம்மது”நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல… அதில் பெற்ற தாய், […]

Next Page » « Previous Page