
இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படை, மறுமை வாழ்க்கையை நம்புவதாகும். மேலும் அந்த வாழ்க்கையில் சொர்க்கம் என்ற பூஞ்சோலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து, நரகம் என்ற கொடுமையான வாழ்க்கையிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வுலகத்தில் மேற்கொள்வதாகும். மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கும் மாபெரும் பாக்கியத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் எந்தப் பாக்கியமும் கிடையாது. அங்கு ஓர் அடி இடம் கிடைத்தால் கூட இவ்வுலகத்தின் அனைத்து இன்பத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும். சொர்க்கத்தின் இன்பத்தை விளக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: […]