Author: Mukthiyaar Basha

அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்

இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன் நோன்பு நோற்கச் சொல்கிறது. அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல், கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது. இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை. பசிக்கின்றது; […]

போர் நெறியும் புனிதக் குர்ஆனும்

ஒட்டு மொத்த உலகமும் புனிதக் குர்ஆன் கட்டளைப்படி நடந்திருந்தால் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 2:190) ➚ தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? (அல்குர்ஆன்: 9:13) ➚ “போர் தொடுக்கப்பட்டோர் […]

இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்

சட்டத்தின் கண்கள் சாட்சிகள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள். உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் […]

உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு […]

குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்

மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என்று மக்களுக்கு தமிழக அரசு […]

டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த […]

கட்டணமில்லாத கடவுள் தரிசனம்

கையில் ஓர் ஈட்டி! வாயை விட்டு வெளியே தொங்கும் இரத்தச் சிவப்பு நாக்கு! கழுத்தில் ஒரு கருநாகப் பாம்பு! இது காவு கேட்கும் கடவுள் என்று பார்ப்பவர்கள் பயப்படும் வண்ணம் கடவுள் சிலைகளின் தோற்றம் அமைந்திருக்கின்றது. அதற்கேற்ப கடவுளுக்காக அவர்கள் உயிர்ப் பிராணிகளைப் பலி கொடுக்கின்றனர். உணவுப் பண்டங்களையும் படைக்கின்றனர். கடவுள் தரிசனம் என்றாலே பூஜை, புனஸ்காரம் செய்வதற்குக் கையில் பூ வாங்கிச் செல்ல வேண்டும்; பழம், பத்தி, சாம்பிராணி வாங்க வேண்டும்; சுடர் விளக்கேற்ற எண்ணெய் வாங்க வேண்டும்; சூடம் வாங்க வேண்டும். இத்தனையும் […]

கடவுளைக் காக்கும் காவல்துறை

அவர்களின் கடவுள்களிடம் சென்று சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார். பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார். அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர். நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார். (அல்குர்ஆன்: 37:91-95) ➚ இந்தச் சிலைகளுக்குக் கடுகளவும் ஆற்றல் இல்லை. சாப்பிடக் கூட சக்தியில்லை. தன்னைத் தாக்குகின்றவனைத் தடுக்கவும், சப்தம் போடவும் சக்தியில்லாத இந்தச் சிலைகளை வணங்கலாமா? […]

தொற்று நோய்கள் பார்வையும் பாதுகாப்பும்

காட்டுத் தீயை விட அதைப் பரப்பும் காற்றை விட மிக வேகமாகப் பரவி வருகின்ற காய்ச்சல்கள் தான் பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல்கள். இதற்குப் பலர் பலியாகி வருகின்றனர். தமிழகத்தில் சிக்குன் குனியா டெங்கு ஃபுளு போன்ற காய்ச்சல்களும் ஒரு விதமான மர்மக் காய்ச்சலும் பரவி வருகின்றது. தொற்று நோய் – இஸ்லாமியப் பார்வை தொற்று நோயில் ஒரு முஸ்லிமின் பார்வை எப்படியிருக்க வேண்டும்? பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் […]

இஸ்லாம் சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்

இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம்; அது ஒரு தீவிர மார்க்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தான் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கமாகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் வாழ் பிராணி நீரின்றி வாழ முடியாதது போல் சமூகம், சமுதாயமின்றி மனிதனால் வாழ முடியாது. அப்படி இன்றியமையாத சமூகத்தில் அவன் வாழும் போது தன் சக மனிதனிடம் அவன் எப்படி […]

17) முடிவுரை

  அஹ்மத் தீதாத் கூறுகின்றார்: என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து எனக்கு ஊட்டப்பட்டது. ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன். எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக […]

16) தொகுப்புரை

இதுவரை எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் ஏசு இறக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இங்கு இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே அளிக்கிறோம். இறப்பதற்கு ஏசு காட்டிய தயக்கம் யூதர்களை அடக்குவதற்காக அவர் போர் வியூகம் வகுத்தார். காரணம், தாம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். கடவுளின் உதவி கேட்டுப் பிரார்த்தனை கடுமையான கதறல், கண்ணீர் மூலம் தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை புரிந்தார். […]

15)ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 13

யோனாவின் அற்புதம் நான் உயிர்த்தெழுந்து வருவேன் என்று ஏசு முன்னறிவிப்புச் செய்ததாக பைபிள் பிரச்சாரகர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பைபிள் என்றழைக்கப்படும் இந்நூல்கள் ஏசுவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின், நூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஏசுவின் வாழ்நாளில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இவ்வாறு எழுதுமாறு ஏசு யாருக்கும் உத்தரவிடவுமில்லை. சிலுவை குறித்த முன்னறிவிப்புக்களைப் பற்றி, மாற்கு நூலின் விளக்கவுரையில் டேய்லர் என்பார், “முடிந்த காரியங்களுக்கு முன்னறிவிப்புக்களை பைபிள் எழுத்தாளர்கள் கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றார். யூதர்கள் மோசேக்கு கணக்கற்ற இடையூறுகளைக் […]

14) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12

ஆவியல்ல! மனிதர் தான்! தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறு கூறுகின்றார்: “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். லூக்கா 24:38-40 ஏசு இதன் மூலம் தெரிவிப்பது […]

13) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11

பயந்து நடுங்கிய சீடர்கள் எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். லூக்கா 24:33-35 இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். […]

12) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 10

நம்ப மறுக்கும் சீடர்கள் மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை. மாற்கு 16:11 கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார். அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து […]

11) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 9

யூதர்களின் சந்தேகம் இப்போது ஏசு, கல்லறையில் வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமான அறை என்று சொல்லலாம். “கிறிஸ்து இறந்த அந்த நாள்’ என்ற நூலில் ஏசுவின் கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர் குறிப்பிடுகின்றார். குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக […]

10) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 8

வியப்புக்குள்ளாகும் பிலாத்து கடவுள் அந்தரங்கமான, மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் படைவீரர்களின் உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது! படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில் ஈட்டியால் குத்தும்படி தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன. இது ஏசுவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மறுபடியும் சீராவதற்கு […]

09) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 7

யூதர்களை விரட்டிய இறைவன் இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொரு வாய்ப்பையும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார். அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள் செய்திருந்தார். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மத்தேயு 27:45 அதே […]

08) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 6

உறுதிப்படுத்தப்படாத மரணம் கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை. அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. சங்கீதம் 34:20 செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன? கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன் உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது. இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது. ஏசுவின் கால் எலும்புகளை […]

07) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 5

ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை தன்னை இந்த இக்கட்டிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காக்க வேண்டி இறைவனிடம் ஏசு பிரார்த்தனை புரிந்ததைக் கண்டோம். அதை இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். மத்தேயு 26:39 மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் […]

06) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 4

இறக்கும் முன்பே சிலுவையிறக்கம் அரசியல் எதிரிகள், கொலைகாரர்கள், புரட்சியாளர்களைக் களைந்தெடுப்பதற்குப் பல்வேறு விதத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. கல்லால் எறிந்து கொல்தல், கூர்மையான பொருட்கள் மூலம் கொல்தல், நீரில் மூழ்கடித்தல் போன்ற முறைகளில் சமூக விரோதிகள் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இந்த முறைகளில் சமூக விரோதிகள் வெகு சீக்கிரமே மரணத்தைத் தழுவி விடுகின்றனர். சாவை, சன்னம் சன்னமாக அனுபவிப்பதில்லை. அணு அணுவாக வேதனையை அனுபவிப்பதில்லை. சாவை, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உதயமானது தான் […]

05) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 3

வழக்கு விசாரணை சீடர்கள் எப்போதும் ஏசுவையும் அவரது பணியையும் தவறாகவே விளங்கி வைத்திருந்தனர். யூதர்களின் அரசராக அவரைப் பிரகடனப்படுத்துமாறு கேட்டனர். வானத்திலிருந்து தீயை இறக்குமாறு வேண்டினர். கடவுளின் ஆட்சியில் அவனது வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமருமாறு அவரிடம் கோரினர். கடவுளைத் தங்கள் கண் முன்னால் நேரடியாகக் காட்ட வேண்டும் என்று முறையிட்டனர். அவரது திட்டத்திற்குப் பொருந்தாத எதையும், எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு அவரையும் செய்ய வைத்து, தாங்களும் அவ்வாறு செய்தனர். இப்படித் தான் அவர்கள் கடைசி வரை செயல்பட்டனர். […]

04) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 2

ஏசுவின் பிரார்த்தனை இப்போது ஏசுவின் பிரார்த்தனையைக் கேளுங்கள். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; […]

03) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 1

போர் வீரர் ஏசு ஆரம்பம் முதல் கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை. அவரை அவர்கள் மறுத்தே வந்தனர். அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம் அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம் கோவில் நிர்வாகம் மட்டுமே இருந்தது. அதே சமயம், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும் செல்வாக்கை யூதர்கள் பெற்றிருந்தனர். […]

02) ஏசு மரணிக்கவில்லை பைபிளின் வாக்குமூலம்

அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் கணக்கியல் நிபுணருமான மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர், THE 100 “அந்த நூறு பேர்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். கிறித்தவரான அவர், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நூறு பேர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்திருந்தார். இரண்டாவது இடத்தை நியூட்டனுக்கும் மூன்றாவது இடத்தை ஏசுவுக்கும் ஆறாவது இடத்தை பவுலுக்கும் கொடுத்திருந்தார். உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1000 மில்லியன். கிறித்தவர்களின் எண்ணிக்கை 1200 மில்லியன். 200 மில்லியன் அதிகம். […]

01) முன்னுரை

மனித குல பாவ மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்ற அறிவுக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை “பவுல்’ என்பவர் கிறித்தவத்தில் புகுத்தி விட்டார். அந்தப் படுமோசமான கொள்கையில் மொத்தக் கிறித்தவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் தவறில் வீழ்ந்து கிடப்பது மட்டுமின்றி முஸ்லிம்களையும் அந்தப் பாழுங்கிணற்றில் தள்ளுவதற்காகக் கிறித்தவ அழைப்பாளர்கள் அன்றாடம் ஒரு படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படையெடுப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர் தான் டாக்டர் அஹ்மத் தீதாத் […]

மார்க்கம் மாறாது

புனித மிக்க ரமளான் மாதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆன் வேதத்தை அருளி அதன் மூலம் இந்த மார்க்கத்தை நிறைவடையச் செய்து விட்டான். நிறைவான மார்க்கத்தில் யாரும் இனி எதையும் எப்போதும் சேர்க்கவும் முடியாது; நீக்கவும் முடியாது. மாற்றவோ, திருத்தவோ, திணிக்கவோ முடியாது. இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3) ➚ […]

அவரும் அவளை நாடினார்

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் […]

அழகாய் தோன்றும் (அரசியல்) அமல்கள்

மனிதனுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன், இம்மை மறுமை நன்மைகளைப் பற்றி மிகத் தெளிவாகவே எடுத்துச் சொல்கின்றது. இவ்வுலகிலும், மறு உலகிலும் மாபெரும் நன்மைக்குரியவர் யார்? மாபெரும் நஷ்டத்திற்குரியவர் யார்? என்பதையும் திருக்குர்ஆன் நமக்கு விளக்கி விடுகின்றது. திருக்குர்ஆன் ஒருவனை மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவனாக, ஈடு இணையற்ற இழப்பையுடையவனாகக் கூறுகின்றது. திருக்குர்ஆனைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நஷ்டவாளி நாம் தானா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அந்த வகையைச் சார்ந்தவரில்லை என்றால் நமது […]

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் […]

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை தியாகமா? துரோகமா? என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும். நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் […]

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை. 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் […]

விதி ஒரு வரையாவிலக்கணம்

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அல்லாஹ் மலக்குமார்கள் நபிமார்கள் வேதங்கள் இறுதி நாள் விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றை நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே […]

ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!

இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன்: 7:189) ➚ ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை அவசியம் என்பதால் தான் மனிதனைப் படைத்ததோடு மட்டும் நின்று விடாமல் அந்த மனிதரிலிருந்தே அவனது ஜோடியையும் படைத்து, அவர்களில் இருந்து ஆண், பெண் என அதிகமானவர்களை இப்பூவுலகில் பரவச் செய்தான். […]

மனத்தூய்மையும் மகத்தான கூ­லியும்…

மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் […]

குருதி கொடுப்போம்

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்‘ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் […]

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை!  ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன.  இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! […]

பாடம் 3-நான்கு குறியீடுகள்

அ) மெய்யெழுத்தின் குறியீடு கீழ்க்கானும்  அரபு எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் போடப்பட்டுள்ள குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப வாசிக்க வேண்டும். உதாரணமாக எழுத்தின் மேலே  ـْ அரை வட்டம் போன்ற குறியீடு இருந்தால் அந்த எழுத்தை தமிழ் மெய்யெழுத்து போல் வாசிக்க வேண்டும். இந்தக் குறியீடு ஸுக்கூன்  எனப்படும். நூன் மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று نْ இருந்தால் (ன்) என்று வாசிக்க வேண்டும்.. தா  மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று تْ இருந்தால் (த்) என்று வாசிக்க வேண்டும்.                                                              ஆ) அகரக் குறியீடு எழுத்தின் மேலே சற்றே சாய்ந்தது போன்ற குறியீடு அகரக் குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது  ஃபதஹ் என்றும் உருது […]

பாடம் 2 – வரிசை மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துக்கள்

கீழுள்ள எழுத்துக்கள் அகர வரிசைப்படி இல்லாமல் வரிசை மாற்றித் தரப்பட்டுள்ளது. எழுத்துக்களைச் சரியான முறையில் கண்டறிவதற்கு இந்தப் பயிற்சி அவசியம்.  

பாடம் 1 – அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை அரபு மொழியில் உள்ள எழுத்துக்கள்.   அரபு எழுத்துக்கள் மொத்தம் 29 ஆகும். ஆனால் குர்ஆனைக் கற்றுத் தரும் அனைத்து புத்தகத்திலும் 30 எழுத்தாக போட்டிருப்பார்கள். லாம் என்பது ஒரு எழுத்து,  அலிஃப் என்பது ஒரு எழுத்து. இந்த இரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து லாம்அலிஃப் என 30 வது எழுத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள்.   ஆனால் லாம் அலிஃப் என்பது ஒரு எழுத்தே கிடையாது.  

மறுவுலக நம்பிக்கை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது. பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது […]

சிறு துளி! பெரு வெள்ளம்!

சிறு துளி! பெரு வெள்ளம்! இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல கடமைகளும், உபரியான வணக்கங்களும் உள்ளன. எந்த அளவிற்கென்றால் சின்னச் சின்ன செயல்களுக்கெல்லாம் அதிக நன்மையைப் பெற்றுத் தரும் காரியங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் கொடுக்கும் தன்மை, அதாவது தர்மம் செய்தல் ஆகும். இந்தத் தர்மத்தின் சிறப்பைப் […]

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் […]

நரகம் – ஒரு நேர்முகம்

சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு இப்படி என்றால் வட மாநிலங்களில் வெயிலின் வெப்பப் பசிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை முன்னூற்று ஐம்பதைத் தொட்டு விட்டது. […]

உலகம் பிறந்தது எதற்காக?

திருமறைக் குர்ஆனையும், திருநபி வழிமுறையையும் கொள்கையாகக் கொண்ட நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ தீமையான காரியங்கள், இணை வைப்புக் காரியங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றில் பல தீமைகளில் சமுதாயம் தீமையெனத் தெரிந்தே மூழ்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக வட்டி, வரதட்சணை, சூதாட்டம், மது பானங்கள், சினிமா போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தீமை என்றே உணரப்படாமல், நன்மை என்ற பெயரில் பல்வேறு இணை வைப்புக் காரியங்கள் தலை விரித்தாடுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் ஊருக்கு ஊர், வட்டத்திற்கு வட்டம் ஓதப்படுகின்ற மவ்லிதுகள் ஆகும். […]

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான். இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது […]

இஸ்திஃக்ஃபார்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

06) பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?

இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும். மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் […]

05) பித்அத்கள் தோன்ற காரணமும், பித்அத்தின் விபரீதங்களும்

இறை நேசமா? முன்னோர் பாசமா? மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள். இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும். ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட […]

Next Page » « Previous Page