Author: Mukthiyaar Basha

மனிதனைப் புனிதனாக மாற்றும் ரமலான்…!

இறைவன் இந்தப் பிரமாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையும், நாம் செய்கின்ற பாவங்களும், அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவர்களாக வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம். விடைபெற்று மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் உலக வாழ்க்கையில் பெருமளவில் மூழ்கித் திளைக்கின்றான். உச்சக்கட்டப் பெரும் தவறுகளைக் கூட மிகச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால், நம்மைப் படைத்த […]

31) நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள்

நபியே! (முஹம்மதேர் உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டிரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள் உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு மணமுடிக்க நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் […]

30) நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வார்த்தை

நபி (ஸல்) அவர்களின் பார்வை (அவர்களுடைய மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள் “மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்று முறை சொன்னார்கள். (புகாரி: 3669) ➚ இது தான் நபியவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக அமைந்தது. கலிமா சொன்ன நிலையில் மரணம் இறுதியில் ஏகத்துவ கலிமாவை முன்மொழிந்தவராக அண்ணலார் மரணம் அடைந்தார்கள்.நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, வணக்கத் திற்குரியவன் அல்லாஹ்வைத் […]

29) முக்கிய அறிவுரைகள் – இறுதி எச்சரிக்கைகள்

மரணத்தின் விளிம்பில் நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் சமுதாய நலன் பற்றியும் தாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியுமே சிந்தித்தார்கள் அப்போதும் தூதுப் பணிக்கு நபிகள் நாயகம் ஓய்வு கொடுக்கவில்லை போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்று நபித்துவத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் சொன்ன கட்டளையை ஏற்று பிரச்சாரப் பணியில் எழுந்து நிற்க ஆரம்பித்தவர்கள் தம் மரணம் வரையிலும் ஓய்வு பெறவில்லை. அந்நேரத்தில் மக்களுக்கு பல அரிய, முக்கியமான போதனைகளை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அவைகளை ஒவ்வொன்றாக காண்போம். […]

28) நபிகளாரின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாய கட்டமைப்பு, மார்க்க போதனைகளை எடுத்தரைத்தல் ஆகியவற்றை செம்மையாக நிறைவேற்றியிருந்தார்கள். அதன் பிறகு தனது மரண காலத்தை நபிகள் நாயகம் நெருங்கினார்கள். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு நபிகளாரின் மரணமே அது பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன, தனது […]

27) சீர்திருத்தத்தைத் தன்னிலிருந்து துவங்குதல்

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார் இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது […]

26) இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (அல்குர்ஆன்: 5:3)➚ வசனம் அருளப்பட்டது. ‘ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் […]

25) ஹஜ்ஜத்துல் விதா இறுதி ஹஜ் – ஹிஜிரி 10

“இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி: 3554) ➚ ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி: 4998) ➚ அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் […]

24) அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ் – ஹிஜிரி 9

தபூக் போரை அடுத்து ஹிஜ்ரி 9ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ்ஜாகும். முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை கற்றுத்தரும் வகையில் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை ஹஜ்ஜூக்காக மக்கா அனுப்பினார்கள். அதன் பிறகு இணைவைப்பாளர்களுடான ஒப்பந்தத்தை முறித்து கொள்ளும் படி இறைவன் வசனம் அருளவே அதை தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) அர்ஜ் என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். […]

23) தபூக் போர் – ஹிஜ்ரி 9

போருக்கான காரணம் ஹஜ்ரி 8 ல் நடைபெற்ற மக்கா வெற்றிக்கு பிறகு மக்கள் கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரத்துவங்கினார்கள். எனினும் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரும் தொல்லை அளிக்கும் அரசாக ரோமானிய அரசு இருந்தது. அப்போதைக்கு அது பேரரசாகவும் திகழ்ந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சி பிடிக்காத ரோமானிய பேரரசு, கஸ்ஸான் கோத்திரத்தார் உள்ளிட்ட இன்னும் சிலரையும் ஒன்று திரட்டி முஸ்லிம்களுடன் போர் செய்ய தயாரானார்கள். இந்த தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வரவே அவர்களை எதிர் கொள்ள […]

22) ஹுனைன் யுத்தம் – ஹிஜிரி 8 துல்கஅதா

ஹுனைன் என்பது ‘தில் மஜாஸ்’ என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர். இவர்களில் ஹவாஸின், கத்ஃபான், ஸகீஃப் […]

21) மக்கா வெற்றி – ஹிஜிரி 8

மக்காவை நோக்கி படையெடுக்க காரணம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனா முஸ்லிம்களுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும் பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாக்கவும் செய்தனர். உடனடியாக பனூ குஸாஆ […]

20) முஃதா யுத்தம் ஹிஜிரி 8

நபி (ஸல்) அவர்களின் காவத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது இப்போர் ஹிஜ்ரி ஜுமாதா அல்லா,கி.பி 12 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது. முஃதா என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர் இங்கிருந்து பைத்துல் முகத்தஸ் இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது. (ஃபத்ஹூல் பாரி) யுத்தத்திற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் […]

19) தாதுர் ரிகா போர் (ஹிஜிரி 7)

நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது. திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ சற்றுச் சிரமமாகவே இருந்தது எனவே அவர்கள் மீது போர்தொடுப்பதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் […]

18) கைபர் போர் ஹிஜ்ரி 7. முஹர்ரம்!

கைபர் என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 30 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால் இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும் நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது போருக்கான காரணம் மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே மற்ற […]

17) ஹூதைபியா உடன் படிக்கை (ஹிஜிரி 6, துல்கஅதா)

இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சமாதான ஒப்பந்தம் தான் மக்கா வெற்றிக்கு வழிகோலியது பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது. இறை நிராகரிப்பாளர்கள் இறைவனுடைய மார்க்கத்தை அழித்தொழிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களை நிறைவேற்றினாலும் இறைவன் தன்னுடைய சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான் என்பதற்கு ‘ஹுதைபிய்யா என்ற இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி மிகப் பெரும் சான்றாக விளங்குகிறது. “ஹுதைபிய்யா என்பது ஒரு கிணற்றினுடைய பெயராகும். […]

16) அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு

பனூ முஸ்தலிக் யுத்தத்தில் இருந்து திரும்பும் வேளையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்து மாலை தொலைந்தது தொடர்பாகவும் அப்போதுதான் தயம்மும் தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன என்பது பற்றியும் நாம் முன்னர் குறிப்பிட்டோம் இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறைப் பரப்பினார்கள். அது பற்றி விரிவான தகவல்களைக் காண்போம். அன்னை ஆயிஷாவின் அவதூறு பரப்புவதற்கு தலைமை வகித்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்ற நயவஞ்சகன்தான் இந்த […]

15) உஹது மற்றும் அஹ்சாப் யுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வுகள்

பிஃரு மஊனா சம்பவம் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களின் மீது எந்த அளவிற்கு பகைமையும் குரோதமும் கொண்டிருந்தார் என்பதற்கு பிஃரு மஊனா சம்பவம் ஒரு சான்றாகும். யூதர்கள் வஞ்சக வலை விரித்து முஸ்லிம்களில் 11 பேரை அநியாயமாக கொலை செய்தனர். நபியவர்கள் யூதர்களுடன் போர் தொடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்தகவான் உலப்பா பர் விஹ்யா ஆகிய குலத்தார் சிலர் வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு […]

02) நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)➚ அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் […]

04) ஓதிப் பார்க்கலாமா?

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் போதல்லாம் அவர்கள் தமது உடலில் குல் என்றும் துவங்கும் அத்தியாயங்களை ஓதி ஊதி தமது கைகளால் தடவிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு வயது முதிர்ந்து உடல் தளர்வு ஏற்பட்ட போது அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்கள் ஓதி நபி (ஸல்) அவர்களின் கரத்தினால் உடல் முழுவதும் தடவி விடக் கூடியவர்களாக இருந்தார்கள். பாதுகாப்புக்கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும் […]

05) திருக்குர்ஆனை தாயத்தில் எழுதி தொங்கவிடலாமா?

அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம். இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும். இப்படி நினைக்கும் போது அல்லாஹ்வின் வசனங்களுக்கு சக்தி இருப்பதாகக் கருதாமல் அதை ஓதும் […]

01) அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை.அப்படியே நம்பினா லும் அந்த நம்பிக்கையில் […]

இரு பெருநாட்களில் முஸ்லிம்கள் ஏன் மது அருந்துவதில்லை?

“தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” இது பத்திரிக்கை செய்தி! சாதாரண காலங்களில் தண்ணீராகப் பாய்ந்தோடும் மதுவுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் ஏனிந்த தடை? அரசு […]

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. […]

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே?

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே? இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாத்திமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா? முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை பதில் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான் […]

ஏற்கப்படும் துஆக்கள் யாவை?

துஆக்கள் ஏற்கப்படும் நேரங்கள் யாவை? முஹம்மத் ஜெஸ்மீர் பதில்: எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பிரார்த்தனை ஏற்கப்படும்; மற்ற நேரங்களில் ஏற்கப்படாது என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். இரவின் கடைசி நேரம் இரவை மூன்றாகப் […]

தீர்மானங்கள் போடும் போது தக்பீர் கூற வேண்டுமா?

தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? பதில்: மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் […]

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ எது ?

வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின் اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَتَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா என்று ஓத வேண்டும். ஆதாரம்:(முஸ்லிம்: 4887) ➚ பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். […]

வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது?

வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பின்வரும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. 1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ […]

ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள். […]

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா? அது எண்ணுவதற்கு எளிதாக உள்ளது. பதில் மார்க்க அறிவு இல்லாதவர்களின் அப்ளிகேசன்கள் பல உள்ளன. அல்லாஹ்வை திக்ரு செய்வதாக இருந்தால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் திக்ரு செய்ய வேண்டும். ஆதாரமற்றவைகளையும், பலவீனமான ஹதீஸ்களில் உள்ளதையும் கொண்டு திக்ர் செய்தால் அவை திக்ராக ஆகாது. சரியான திக்ருகள் தானா என்று உறுதி செய்து கொள்ளவும். இதற்கு துஆக்களின் தொகுப்பு எனும் நூல் துணை செய்யும். இந்த திக்ரை […]

09) அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்!

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. உலகில் நல்லடியார்களாகக் கருதப்பட்ட பலர் நரகில் கிடப்பார்கள். கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். “தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். […]

08) இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி?

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம். இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்குப் பதிலாக முன்வைக்கிறார்கள். அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி […]

07) ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும். ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா […]

06) நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது. மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது திருக்குர்ஆன் 17:94 இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே […]

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 – حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ: أَنَّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، «فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَأَمَرَ بِأَكْلِهَا» وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّهُ […]

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم الكبير للطبراني 5976- حَدَّثَنَا الْحَسَنُ بن عَلِيٍّ الْفَسَوِيُّ، حَدَّثَنَا خَلَفُ بن عَبْدِ الْحَمِيدِ السَّرَخْسِيُّ، حَدَّثَنَا أَبُو ‏الصَّبَّاحِ عَبْدُ الْغَفُورِ بن سَعِيدٍ الأَنْصَارِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ […]

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் மறைக்காமல் இருக்கலாம். மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு […]

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் தான் மர்ஹூம் مَرْحُوْم என்பது. ரஹ்மத் رَحْمَة என்றால் அருள். மர்ஹூம் مَرْحُوْم என்றால் அருள் செய்யப்பட்டவர் என்று பொருள். இந்த வடிவத்தில் அமைந்த சொற்கள் இஸ்முல் மப்வூல் اِسْمُ الْمَفْعُوْل எனப்படும். நபிகள் காலத்திலும் அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் மரணித்தவரைக் குறிக்க மர்ஹூம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. எத்தனையோ நபித்தோழர்களைப் பற்றியும், தாபியீன்களைப் […]

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா?

இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் பணிகளைச் செய்ய அனுமதியில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கீழ்க்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் صحيح مسلم 4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ […]

இறைச்செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி (அலை)

அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களிடம் தவ்ஹீது எனும் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு முன்பாக தவ்ஹீது கொள்கை அவர்களிடம் இடம் பிடிக்காமல் இல்லை. இணை வைத்தல், தர்ஹா வழிபாடு, தாயத்து தட்டு போன்றவை கூடாது என்ற சிந்தனை மக்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கவே செய்தது. அதனால் தான் தவ்ஹீது எழுச்சி வருவதற்கு முன்பே தமிழக முஸ்லிம்கள் இரு அணியினராக இருந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றனர். ஒரு கூட்டம் அல்லாஹ்வை மட்டும் வணங்கிக் கொண்டு தர்ஹா வழிபாட்டை […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

நம்மைப் போல் நமது பிள்ளைகள், வருங்கால தலைமுறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். துவக்கத்தில் புகை பழக்கம். […]

11) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம்

இவ்வளவு சான்றுகளை நாம் எடுத்துக் காட்டிய பின்னரும் இக்கருத்து முற்றிலும் சரியானது என்று மனசாட்சி அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இதை ஏற்க சிலர் தயக்கம் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். முன்னர் வாழ்ந்த நபித்தோழர்களும் நல்லறிஞர்களும் இக்கருத்தைச் சொல்லவில்லையே? அவர்களுக்குத் தெரியாதவை இவர்களுக்குத் தெரிந்து விட்டதா என்ற எண்ணம் தான் அந்தக் காரணம். அல்லாஹ்வுடைய வேதத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரிந்து விட்டால் அதற்கு […]

10) கால்நடைகளுக்கான ஜகாத் மீண்டும் மீண்டும் வசூலிக்க ஆதாரமாகுமா?

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும். ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு […]

09) அபூபக்ர் ஆட்சியில் மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிக்கப்பட்டதா?

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன் என்று குறிப்பிட்டார்கள். (புகாரி: 1400, 1457, 6924, 7285) ➚ இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலைநாட்ட ஒரு சான்றும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த என்ற […]

08) ஆண்டு தோறும் ஜகாத் என்ற ஹதீஸ்களின் நிலை

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது. மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் அதிகரிக்கின்றது. ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று […]

07) இரண்டு வருட ஜகாத்தை முன்கூட்டியே வாங்கிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் […]

06) அனாதைகளின் சொத்துக்கள் பற்றிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன. அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலைநாட்ட உதவுவதாக இல்லை. மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன. முதலாவது ஹதீஸ் அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். سنن الترمذي 641 حَدَّثَنَا […]

05) ஜகாத், பொருளைத் தூய்மைப்படுத்துமா? மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?

ஜகாத் பொருட்களைத் தூய்மைப்படுத்தாது. மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும் எனக் கூறி பின்வரும் ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். صحيح مسلم ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, இவை மனிதர்களின் அழுக்குகள் என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்: 1945) […]

04) பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம். மாற்றுக் கருத்துடையோர் துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும். ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது. سنن أبي داود فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ […]

Next Page » « Previous Page