Author: Mukthiyaar Basha

28) ரோமானிய பாரசீக பேரரசுகளுடன் போர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது, அவர்கள் இறக்கவில்லை,உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற விவகாரம் கிளம்பியது. அபூபக்ர் (ரலி) அவர்கள்அதை வேருடன் கெல்லி எறிந்தார்கள். அடுத்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும்ஜகாத்தைத் தர மறுத்தல், மதம் மாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அவற்றையும்இறையருளால் வெற்றிகரமாக முறியடித்தார்கள். அதன் பின்னர், இறுதித் தூதுத்துவத்திற்கு எதிராக போலித் தூதர் விவகாரங்கள் பொட்டுச்செடிகளாக அல்ல; பூகம்பங்களாக, பூதாகரமாக வெடித்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் மரணம் அடைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பொய் […]

27) கைஸின் ஆட்சிக் கனவு

போலி நபியான அஸ்வத் அல்அன்ஸீ என்ற அந்த நாகப் பாம்பின் புற்றாகவும் புதராகவும்இருந்த யமன் தேசம், இப்போது அவனது அழிவின் மூலம் தூய்மையாகி விட்டது;துப்புரவாகி விட்டது. இந்த அரும் பணியை ஆற்றியவர்கள் மூவர்! கைஸ் பின் மக்ஷூஹ், பைரோஸ்அத்தைலமீ, தாதவைஹ் ஆகிய மூவர் கொண்ட இக்குழுவினர் இந்த அரும்பணியைமுடித்து விட்டு, நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாக அடுத்த விவகாரம்உருவெடுக்கின்றது. இந்த விவகாரம் வெளியிலிருந்து வரவில்லை. உள்ளிருந்தேவெடிக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த செய்தி யமனை அடைந்ததும் ஒருசிலர் […]

26) மரணத்தைத் தழுவிய மகாப் பொய்யன்

தன்னைக் கொல்வதற்கு பைரோஸ் சதித் திட்டம் தீட்டினார் என்பதைக் கேள்விப்பட்டபொய் நபி அஸ்வத் அல்அன்ஸீ, பைரோஸைக் கொல்வதற்காக கத்தியை எடுத்தவுடன்,பைரோஸ் அவனைப் புகழ ஆரம்பிக்கின்றார். “(எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம்) எங்களை நீங்கள் சம்பந்தவழியாக்கினீர்கள். மற்ற பாரசீக மக்களை விட எங்களை நீங்கள்மகிமைப்படுத்தியிருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும் நபி இல்லையெனில் எதற்கு ஈடாகவும்எங்களது ஆட்சிப் பீடத்தை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம். உங்களிடம்தான் எங்களுக்குரிய இம்மை, மறுமையின் விவகாரம் ஒருங்கே இணையப்பெற்றிருக்கின்றது. அப்படி இருக்கையில் எங்களால் எப்படி […]

25) அஸ்வதுக்கு எதிராக அணி திரளும் சக்திகள்

அஸ்வத் அல்அன்ஸீ தன்னை மட்டரகமாக நடத்திக் கொண்டிருக் கின்றான். எனவேஅவனைக் கொன்று விட வேண்டும் என்று கைஸ் ஏற்கனவே தெளிவான திட்டம்தீட்டியிருந்தான். இதை இக்குழுவினர் அவனைச் சந்தித்த போது தெரிந்து கொண்டனர். அஸ்வத் அல்அன்ஸியால் அவமானத்திற்கும் அடிமைத் தனத்திற்கும் உள்ளானபைரோஸும் அன்ஸீயைத் தீர்த்துக் கட்டுவதில் தீர்மானமாக இருந்தார். தாதவைஹும் இதே குறியில் வெறியாக இருந்தார். இதற்கிடையே அன்ஸீ விவகாரமாகவபர் பின் யுஹ்னஸ் மதீனாவிலிருந்து வந்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து வபர் பின் யுஹ்னஸை அனுப்பி வைத்திருந்தார்கள் […]

24) வெற்றி கொள்ளப்பட்ட உமான்

மூன்று தளபதிகளை உள்ளடக்கிய முக்கூட்டுப் படை வருகின்றது என்ற தகவல் போலிநபி “லகீத்’துக்குக் கிடைத்தது தான் தாமதம்! அவன் தன் படை பரிவாரங்களுடன் தபாஎன்ற இடத்தில் முகாமிட்டான். தபா என்பது யமனைச் சுற்றியுள்ள ஊர்களின்பட்டணமும், வணிகச் சந்தையுமாகும். லகீத் (கடந்த தொடரில் லகீத் என்பதற்குப் பதிலாக வகீத் என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது) முஸைலமாவின் பாணியில் மக்களின் சொந்தங்களையும், சொத்துக்களையும்தனக்குப் பின்னால் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான். அப்போது தான் போரில்புறமுதுகு காட்டும் பெட்டைத் தனம் தலை […]

23) ஓமனில் தோன்றிய ஒரு பொய்த் தூதன்

ஜுவாஸாவில் முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்களைக் காப்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள்அனுப்பி வைத்த படையினருக்கு ஏற்பட்ட சோதனை, படைத்தவனிடம் கையேந்திக் கேட்டதும்நீங்கியது. அவர்களது பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப் பட்டது. இது அவர்களது உள்ளத்தில்ஒரு புதியதொரு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது. படைத் தளபதி அலா பின் ஹள்ரமி மக்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.எதிரிகளின் களத்தை நெருங்கிய போது அவர்களது எண்ணிக்கை முஸ்லிம்களின் புருவத்தைச்சற்று உயர்த்தியது. அங்கு பெருங் கூட்டமே பெருக்கெடுத்து வந்திருந்தது. அது இரவு வேளை! மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் […]

யூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மக்களிடம் தங்கள் குற்றத்தை மறக்கடிக்க மார்க்க விஷயங்களில் விளையாடி வருகின்றனர். மார்க்க விஷயத்தில் தவறான கருத்துக்களை கூறினால் மக்கள் அதைப் பற்றி தேடத் துவங்கி, தனது குற்றத்தை மறந்துவிடுவார்கள் என்பதற்காக இதை ஓர் ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள். மேலும், தனது குற்றத்தை மறக்கடிப்பதற்காக […]

22) பாதை திரும்பிய பஹ்ரைன் மக்கள்

இதயங்களிலிருந்து வாய்களின் வழியாக ஓசையாக மட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்ததிருக்குர்ஆன் யமாமாப் போரின் தாக்கத்தால் எழுத்துக்கள் வடிவில் ஏடுகளில் பதிவாகின.இவ்வாறு ஏடுகளில் திருக்குர்ஆன் பதிவாகி பாதுகாக்கப்படும் இந்தப் புனிதப் பணிக்கு மட்டும்யமாமா போர் காரணமாக இருக்கவில்லை; இஸ்லாத்தை விட்டு, ஈமானை விட்டு வெளியேபோன மக்கள் உளப்பூர்வமாக உள்ளே வருவதற்கு ஒரு தோரண வாயிலாகவும் அமைந்துவிட்டது. “ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் உண்மையானகொள்கை; நாம் இடையே கண்ட கொள்கை போலியானது, பொய்யானது” என்ற விஷயம் […]

21) யமாமாவின் தாக்கமும் இறை மறை ஆக்கமும்

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பிவிடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவேமுடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.(அல்குர்ஆன்: 3:144) ➚ இவ்வசனம் உஹத் போர்க்களத்தில் நடந்த நிகழ்வை ஒட்டி இறங்கியது என்பதை நாம்நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டாலோஅல்லது கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் பழைய பாதைக்குத் திரும்பி விடுவீர்களா?என்ற […]

20) உருத் தெரியாமல் போன ஒரு பொய்த் தூதன்

“முஸ்லிம்களே! என்னை இந்தத் தோட்டத்திற்குள் தூக்கி வீசுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” இது தான் பர்ராஃ பின் மாலிக் வழங்கிய கம்பீரமான யோசனையாகும். பர்ரா பின் மாலிக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ் பின் மாலிக் (ரலி)யின் சகோதரர் ஆவார். இவர் உஹதுப் போரில் பங்கெடுத்தவரும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவருமாவார். (நூல்: ஸியரு அஃலாமின் நுபலா) இத்தகைய பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட பர்ராஃ பின் மாலிக் ஏன் இப்படி முன்னணியில் […]

19) சரித்திரம் படைத்த ஸைதும் ஸாலிமும்

ஒரு கையால் ஒரு திருவிளையாடல் இந்தப் போரில் முதன் முதலில் முஸ்லிம்களில் காயம் பட்டவர் அபூ அகீல் என்றுஅழைக்கப்படும் அப்துர்ரஹ்மான் பின் பல்வி அல்அன்சாரி ஆவார். போரில் குதிப்பதற்குமுன்னால் ஓர் ஈட்டி அவரது இடது புஜத்தில் பாய்ந்தது. அதனால் அவரது இடது தோள்பட்டை செயலிழந்து விட்டது. எனவே அவர் முஸ்லிம்களின் சிகிச்சை முகாமுக்குக்கொண்டு செல்லப்பட்டார். போர் சூடு பிடித்ததும் முஸ்லிம்கள் பயந்து கொண்டு முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இவரோ இடது கை பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்துகொண்டிருக்கின்றார். அப்போது மஅன் […]

18) முழுமை பெற்ற முன்னறிவிப்பு

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தமது படையின் முன்னணிக்கு ஷர்ஹபீல் பின் ஹஸனாவையும், தன் வலப்பக்க, இடப்பக்க அணிகளுக்கு முறையே ஜைத் பின் கத்தாப் (ரலி), அபூஹுதைபா (ரலி) ஆகியோரையும் நியமித்தவர்களாக யமாமாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு படையைச் சந்திக்கின்றார்கள். (ஷர்ஷபீல் பின் ஹஸனா என்று  அச்சாகியுள்ளது. அதை, ஷர்ஹபீல் பின் ஹஸனா என்று திருத்தி வாசிக்கவும்) அந்தப் படையினர் ஒரு மலைப் பாதையில் இரவு நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்படையின் தளபதி […]

17) யமாமா போர்

மக்காவிலிருந்து யமனுக்குச் செல்லும் வழியில் தாயிஃபுக்கு அருகில் உள்ள ஊர் தான் யமாமா! அரபியப் பாலைவனத்தில் யமாமா ஒரு சோலை வனமாகும். மக்காவுக்கு உணவு தானியங்கள் வழங்குகின்ற ஓர் உணவுக் களஞ்சியம் என்று சொல்லும் அளவுக்கு விவசாயம், வேளாண்மை என இயற்கை வளம் நிறைந்த எழில் கொஞ்சும் நகரமாகும். இவ்வூர் மக்கள் பனூ ஹனீஃபா (ஹனீஃபா கிளையார்) என்று அழைக்கப்படுவர்.   இஸ்லாத்தின் மடியில் எழில்மிகு யமாமா ஹனீஃபா கிளையினரின் தலைவர் இஸ்லாத்தை ஏற்றதைத் தொடர்ந்து யமாமா […]

16) சொத்துரிமை மறுப்பு

ஆட்சித் தலைவர் மீது பாத்திமா கோபம் பொது வாக்கெடுப்பின் போது அபூபக்ர் (ரலி)யிடம் எல்லோருடனும் சேர்ந்து வாக்குப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அலீ (ரலி) அவர்கள் ஆறு மாத காலம் சுத்தமாக ஒதுங்கி விடுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மதம் மாறியவர்களுக்கு எதிராக நடத்திய போரில் தில்கிஸ்ஸாவுக்குச் செல்ல ஆயத்தமான போது, அலீ (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்றதையும், அபூபக்ர் (ரலி) அவர்களை அலீ (ரலி) வாழ்த்தி வழியனுப்பி வைத்ததையும் ஏற்கனவே கண்டோம். மதம் மாறியவர்களுக்கு எதிராக […]

15) காலிதுக்கு எதிரான புகார்கள்

மதமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பனூதமீம் கிளையினர் பல்வேறு விதமாக சிதறிக் கிடந்தனர். ஒரு சாரார் ஜகாத் கொடுக்க மறுத்து மதம் மாறினர். மற்றொரு சாரார் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தொடர்ந்து ஜகாத்தை செலுத்தி வந்தனர். இன்னொரு சாரார் என்ன தான் நடக்கின்றது என்று பார்ப்போம் என்று காத்திருந்தனர். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான் பனூ தமீம் கிளையாரிடம் ஒருத்தி நுழைகின்றாள். தக்லிபிய்யா கிளையைச் சேர்ந்த ஹாரீஸ் என்பவரின் மகளான ஸிஜாஹ் என்ற […]

14) சண்டைக்கு வந்தவர்களின் சரணாகதி

காலித் பின் வலீத் சந்தித்த மற்றொரு நிகழ்ச்சி காலித் பின் வலீத் (ரலி) ஒரு கிளையாரை எதிர்த்து வெற்றியடைந்து கொண்டிருந்த வேளையில் கர்வம் கொண்ட ஒரு பெண் – அல்ல ஒரு பேய் களமிறங்கி நின்றாள். இவளிடத்தில் காலித் வென்றாரா? தோற்றாரா? என்று பார்ப்போம். புஸாகா போரில் ஃபிலால் என்ற இடத்தில் கத்பான் கிளையைச் சேர்ந்த தலீஹாவின் ஆட்கள் ஒரு பெண்ணின் தலைமையில் அணி திரண்டனர். அவளது பெயர் உம்மு ஜமல் ஆகும். உதாரணம் சொல்லப்படக் கூடிய […]

13) போலித் தூதரின் பொய் வஹீ

போலி நபி தலீஹாவும், அவனை நம்பியவர்களும், அவனுடைய படையில் இணைந்தவர்களும் களத்தை நோக்கி வந்தார்கள். பனூஃபிராஸா கிளையைச் சார்ந்த உயைய்னா பின் ஹிஸ்ன் என்பவர் தலீஹாவின் வலது கரமாவார். அவர் போலி நபியுடன் இணைந்து போராட ஏழு பேர்கள் அடங்கிய படையுடன் வந்திருந்தார். மக்கள் அணி வகுத்து நின்று போர் செய்தனர். போலி நபி தலீஹாவோ ஒரு போர்வையை சுற்றிக் கொண்டு தனக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதாக பாவனை செய்து கொண்டிருந்தான். போர் செய்து கொண்டிருக்கும் போர் […]

12) பொய் நபியை எதிர்த்துப் போர்

புகாரியில் பொய் நபி தொடர்பான ஹதீஸின் அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் கூறுவது போல், முஆத் பின் ஜபல், அபூ மூஸா அல்அஷ்அரி ஆகிய இருவரும் யமனுக்குப் பொறுப்பாளர்களாக அனுப்பப்பட்ட அந்தக் கால கட்டத்திலேயே அன்ஸீ என்ற போலி நபி கொல்லப்பட்டு விடுகின்றான். முதல் போலி நபி கொல்லப்பட்ட இந்தச் செய்தி அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ரபிய்யுல் அவ்வலின் கடைசியில் வந்து சேர்ந்தது. அது அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமாவின் படையை அனுப்பிக் கொண்டிருந்த நேரமாகும். இவ்வாறு […]

11) மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம்

மதம் மாறியவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட 11 படைத் தளபதிகளும் தங்கள் பயணத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் தங்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள், மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து எழுதிய கடிதத்தையும் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லும் கடிதத்தின் விபரத்தைப் பார்ப்போம். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பிரதிநிதியின் கடிதமாகும். தலைவர்கள், பொதுமக்கள், இஸ்லாத்தில் தொடர்ந்து வாழ்பவர், இஸ்லாத்தை விட்டு […]

10) பறந்து வந்த பலூன்களும் பயந்து ஓடிய ஒட்டகங்களும்

மதீனாவிற்கு உள்ளே வந்த மதம் மாறிய கூட்டத்தை ஊருக்கு வெளியே விரட்டி அடித்தது மட்டுமல்ல, அவர்களை வேரறுக்கவும் முடிவு கட்டி, அபூபக்ர் (ரலி) ஜமாதுல் ஆகிரா மாதத்தில் ஒரு படையெடுப்பை நடத்தினார்கள். எல்லைப் புறத்தில் நின்ற படைத் தளபதிகள், மதீனாவாசிகள் அடங்கிய படையுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனாவுக்குள் வந்த மதம் மாறிய அரபியர்களை நோக்கிச் சென்றார்கள். அப்துல் கிளையார், முர்ரா கிளையார், துய்பான் ஆகியோர் அவர்களுக்குத் துணை புரிந்த கிளாளா கிளையார் ஆகியோருடன் அபூபக்ர் (ரலி) […]

09) மதம் மாறியவர்களுடன் நடந்த போர்

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தனது செல்வத்திற்கும், உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் […]

08) புரட்சியாளர்களின் போர் முழக்கங்கள்

அபூபக்ர் (ரலி) அவர்கள் வழியனுப்பி வைக்கும் அந்தக் கட்டத்தில் அப்படையினருக்கு பத்துக் கட்டளைகளைப் பிறப்பிக்கின்றார்கள். மக்களே! நில்லுங்கள். உங்களுக்குப் பத்து விஷயங்களை பேணும் படி அறிவுரை வழங்குகின்றேன். 1. நீங்கள் துரோகமிழைத்து விடாதீர்கள். 2. வெற்றிப் பொருட்களைப் பங்கிடும் முன் அபகரித்து விடாதீர்கள். 3. வாக்குறுதிக்கு மாறு செய்யாதீர்கள். 4. உயிருடன் இருக்கும் போதோ, இறந்த பின்போ வதை செய்யாதீர்கள். 5. சிறு குழந்தையை, வயது முதிர்ந்தவரை, பெண்களை நீங்கள் கொலை செய்யாதீர்கள். 6. பேரீச்சை மரத்தையோ, கனி தரும் வேறு எந்த மரத்தையுமோ வெட்டித் தரித்து விடாதீர்கள். 7. ஆடு, மாடு, ஒட்டகத்தை உணவுக்காகவே […]

07) முன் வைத்த காலை பின் வைக்காதவர்

அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றி, இரக்க குணம் கொண்டவர், இறுக்க குணம் கொண்டவரல்லர்! இளகிய மனம் படைத்தவர், இரும்பு மனம் படைத்தவர் அல்லர் என்ற பாத்திரத் தோற்றம் மாத்திரமே வரலாற்று ஊடகங்கள் மூலமாக நம்முடைய உள்ளங்களில் பதியம் செய்யப்பட்டுள்ளன. அபூபக்ர் (ரலி) அவர்கள் இரக்க குணம் கொண்டவர் தாம்! இளகிய மனம் படைத்தவர் தாம்! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இது அபூபக்ர் (ரலி) என்ற பாத்திரத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கும் போது தான்! அவர்களது மறுபக்கம் […]

06) உஸாமா தலைமையில் படை அனுப்பியது ஏன்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உஸாமாவின் தலைமையில் புறப்பட்ட போர்ப்படை இப்போது புறப்படத் தயாராகட்டும் என்ற அபூபக்ர் (ரலி)யின் பிரகடனத்தையும் அதையொட்டி அவர்கள் ஆற்றிய பேருரையையும் கண்டோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்காக ஏன் இவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்பதைக் காணும் முன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட சம்பவத்தைப் பார்ப்போம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக மட்டுமல்லாமல், ஆட்சித் தலைவராகவும் இருந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

05) ஆட்சிப் பணி

எந்த ஒரு தலைவராக இருப்பினும் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி முக்கியத்துவம் பெறுவதாக அமையும். அது போலவே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பதவியேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவிலுள்ள பல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் […]

04) பொதுத் தேர்தல்

சகீபா பனூ சாயிதாவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்யமாலிருந்த ஒரே நபித்தோழர் ஸஅத் பின் உப்பாதா (ரலி) தான். வேறு சிலர் பைஅத் செய்யாமல் தாமதித்தனர். அவர்கள் அலீ (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகியோர் ஆவர். ஆனால் அவர்கள் சகீபா பனூ சாயிதா சம்பவத்தன்று பைஅத் செய்தார்கள் என்ற செய்தியை பைஹகீயில் பார்க்கிறோம். அபூபக்ர் (ரலி) யின் கையைப் பிடித்து உமர் (ரலி), இதோ உங்கள் தோழர் என்று கூறி அவரிடம் வாக்களித்தனர். […]

03) தலைவராக தேர்வாகுதல்

உங்களில் ஒரு தலைவர், எங்களில் ஒரு தலைவர் என்று அன்சாரித் தோழர் ஒருவர் கூறியதும் ஏற்பட்ட வாதப் போர், வாட்போராகும் அளவுக்கு வடிவெடுத்தது. சகீபா பனூ ஸாயிதாவில் நடந்த விவாதத்தின் போது, பத்ரு ஸஹாபியான ஹப்பாப் அல் முன்திர் (ரலி), எங்களில் ஒரு தலைவர், உங்களில் ஒரு தலைவரைத் தேர்வு செய்வோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த ஆட்சியதிகார விஷயத்தில் உங்கள் மீது நாங்கள் பொறாமை கொள்ளவில்லை. எனினும் நாம் எவர்களது தந்தையர்களையும்,சகோதரர்களையும் எதிர்த்துப் போரிட்டோமோ அவர்கள் […]

02) அடுத்த ஆட்சித் தலைவர் யார்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகம், அரசியல் என இரண்டிற்கும் ஒரு சேர அமையப் பெற்ற ஒருங்கிணைந்த தலைவர் ஆவார்கள். ஆன்மீகத் தலைமைக்கு இறுதி நாள் வரை அவர்கள் தான் தலைவர் என்பதால் அவர்கள் இறந்த பிறகு அந்தத் தலைமை காலியாக இருக்கவில்லை. ஆட்சி மற்றும் அரசியல் தலைமையிடம் காலியாக உள்ளது. அந்தக் காலியிடத்தை நிரப்புபவர் யார்? இது தான் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல் கிடக்கும் போதே பூதாகரமாக உருவெடுத்த புதுப் […]

01) முன்னுரை

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியைக் காண்பதற்கு முன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கைக் காட்சிகளைக் கொஞ்சம் கண்டு வருவோம். அன்றைய அரபியப் பாலைவனம் நிலத்தால் மட்டும் பாலைவனமாக இல்லை! சீரிய சிந்தனை வளத்திலும் வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது. பல தெய்வக் கொள்கை தான் அந்தப் பாலைப் பெருவெளியை ஆட்சி செய்தது. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏற்றி வைத்த ஏகத்துவ இறைக் கொள்கை அணைந்து, கல்லையும் களிமண்ணையும் வணங்கும் அறியாமை இருள் மக்காவை அப்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்ராஹீம் […]

விமர்சனங்களும் சோதனைகளே!

இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போதுசொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும்ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின்வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறுவிதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காணமுடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களைமட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக்கொண்ட இறை நம்பிக்கையாளர் களையும் சூழ்ந்துகொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானதுஎதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும். விமர்சனங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் எப்படிச் சோதனைகளாகும்?இவையெல்லாம்சோதனை என்ற வட்டத்திற்குள் வருமா? என்ற சந்தேகம் கூடஎழலாம். இந்தக் கேள்விக்கு […]

தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு

மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாதுஎன்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்: 15:94) ➚ என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப்பிடிப்பது. 2. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது […]

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் பரேலவிஸம்வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி ஆலகால விஷ விருட்சமாகவிரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும்மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்!சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும்உயிருடன் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள்! இவையெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம்இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது. நாங்கள் சங்கரன்பந்தல்மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தீன் […]

இறைப் பாதையும் சிறைப் பயணமும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடத்தில் போதிக்கும் போது, இறை மறுப்பாளர்கள் மூன்று விதமான சதித் திட்டங்களைத் தீட்டினர். (முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன்: 8:30) ➚ இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்கள் செய்யும் மூன்று விதமான சூழ்ச்சிகளையும் அல்லாஹ் நபி […]

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன?

இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் நம்பப்படுகிறது. குர்ஆன், ஹதீஸின் இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். குர்ஆன் என்பது லவ்ஹூல் மஹ்பூல் எனும் மூலப்பிரதியில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக இறைவன் கொடுத்து அனுப்பியதாகும். இறைவனிடமிருந்து வந்த செய்திகள் அனைத்தும் குர்ஆனாகாது. அது போல் ஜிப்ரீல் மூலம் வந்த அனைத்தும் குர்ஆன் ஆகாது. திருக்குர்ஆனுக்கு அல்லாஹ்விடம் […]

விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம். நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க […]

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் […]

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது […]

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன்: […]

ரமளானுக்குப் பின்

கோடை வெயில் உக்கிரத்துடன் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் ரமலானை எதிர்நோக்கினோம். அப்போது வெயிலின் வெப்பத்துடன் ரமலானை எப்படி கடக்கப்போகிறோம்? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் கவலையாக தொற்றிக்கொண்டது. ஆனால், மிக விரைவாக ரமலான் மாதம் கடந்துவிட்டது. அத்தகைய ஓர் உணர்வைக் கொடுத்து சிரமத்தை இறைவன் இலேசாக்கியுள்ளான். தற்போது ரமலான் மாதத்தை நிறைவு செய்துவிட்டு இருக்கும் நாம் என்ன மாற்றத்தை வாழ்வில் கண்டிருக்கிறோம்? ரமலானுக்கு பிந்தைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம்? என்ற கேள்விகள் நம் அனைவரின் […]

தற்கொலைப்படை தாக்குதல் ஓர் இஸ்லாமியப் பார்வவை

இலங்கையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் பண்டிகையின் போது கிறித்தவ ஆலயங்கள், பிரபல ஹோட்டல்கள் என மொத்தம் 9 இடங்களில் அதிபயங்கரக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். 40க்கும் அதிகமான சிறார்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, அதில் சிலர் மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். துளியும் மனித நேயமற்ற, காட்டுமிராண்டித் தனமான இச்சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயங்கரவாதச் சம்பவத்தை யார் நிகழ்த்தி […]

உயிரூட்ட வரும் உன்னத ரமலான்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன்: 2:185) ➚ இது அல்லாஹ்வின் வசனம். ஆம்! ரமளானின் சிறப்பை உணர்த்துகின்ற வசனமாகும். உண்மையில் ரமளான் என்பது, திருக்குர்ஆன் இறங்கிய மாதத்திற்கு வல்ல ரஹ்மான் எடுக்கின்ற திருவிழாவாகும். விழா என்றதும் நமக்கு ஒருவிதமான ஒவ்வாமை வந்து விடும். அந்த ஒவ்வாமை வருவதில் ஆச்சரியம் இருக்க […]

உயிர் பிரியும் தருணம் மூன்று இல்லாதிருந்தால்…

ஒவ்வொரு மனிதனும் தனது மரணத்திற்கு முன்பாக பல்வேறு இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என ஆசை கொள்கிறான். தனக்கென்று வீடு, கார், சொகுசு பங்களா, அதிக சொத்து இதுவே சராசரி மனிதனின் கனவு, இலட்சியம் எல்லாமே! அதுவும், தான் மரணிப்பதற்குள் இவற்றை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் இவ்வுலக வாழ்க்கையில் பயணிக்கின்றனர். மார்க்கம் அனுமதித்த வழிமுறையில் இவற்றைச் சம்பாதித்தால் அதில் எந்தப் பிரச்சனையுமில்லை தான். ஆனால் மரணிக்கும் முன் இவையெல்லாம் தனக்குக் கிடைத்திட வேண்டும் […]

சுவர்க்கத்தில் அந்தஸ்துகளை உயர்த்தும் நல்லமல்கள்

தொழுகைக்கு நடந்து செல்லல் எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு அந்தஸ்து உண்டு‘ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்,(முஸ்லிம்: 1181) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். யார் தமது வீட்டிலேயே அங்கத் […]

படைப்பின் தொழில் நுட்பம்

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன்: 87:1) ➚, 2, 3 இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான். ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் […]

இன்ஷா அல்லாஹ் சொல்வதின் முக்கியத்துவம்

அடிப்படைக் கொள்கை : ஒரு முஸ்லிம் எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் அந்த காரியம் அல்லாஹ் நினைத்தாலே தவிர அது நடைபெறாது என்று உறுதியாக நம்ப வேண்டும்.இதை பல குர்ஆன் வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் நமக்கு தெளிபடுதுகிறது. (நபியே!) நீர் கூறுவீராக (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.(அல்(அல்குர்ஆன்: 3:26) ➚,27) இந்த ஒரு அடிப்படை கொள்கையை வாயளவில் […]

கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்.

இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது. கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு […]

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!” […]

இணை வைப்போர் – அன்றும் / இன்றும்

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம். ‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், […]

நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்

சுத்தம் “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்துக்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலது கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), (புகாரி: 153) “எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கின்றது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். […]

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்

இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள். நபி (ஸல்) அவர்களது காலத்தில் மதீனா நகரில் இத்தகைய நயவஞ்சகர்கள் சிலர் இருந்தனர். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவன் அவர்களுக்கு தலைவனாக செயல்பட்டான். இவன் தலைமையில் பல நயவஞ்சகர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி உண்மையான […]

Next Page » « Previous Page