முன்னுரை இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான். அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள். இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள் (அல்குர்ஆன்: 83:15)➚ மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ! அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்,(புகாரி: […]