Tamil Bayan Points

7) சீறிவரும் விண்கற்கள்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

Last Updated on December 20, 2022 by Trichy Farook

சீறிவரும் விண்கற்கள்

நமது பூமி சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும். நான்காவது மற்றும் ஐந்தாவது கோள்கள் முறையே செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவையாகும். இவ்விரு கோள்களுக்கு இடையில் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களுடன் (Minor Planets) கோடானு கோடி கணக்கான விண்கற்கள் மிக அகல மான வட்டப் பாதை வழியாக சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை இவ்வாறு சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண் டிருக்கும்போது அவற்றுள் சில பாதை விலகி பூமிக்கு அருகில் வந்து விடுகின்றன.

அப்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியின் மீது விழுந்து விடுகின்றன எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். அறிவியலாளர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து இந்தக் கல்மழையிலிருந்து பூமி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அது பூமிக்கு ஆபத்தாக முடியும் என்பதும் எளிதாகப் புலனாகும். ஏனெனில் விண்கற்களின் வேகம் அவ்வளவு அபாரமானதாகும். விண்கற்கள் பெரும்பாலும் சிற்றுருவம் கொண்டவையே ஆகும். அவை சிறு கூழாங் கற்களின் (Pabbles) பருமனிலிருந்து மணற்துளி வரை யிலானவைகளாகவே காணப்படுகின்றன.

இருப்பினும் இவை அமிதமான வேகம் கொண்டவைகளாக இருப்பதால் இதன் தாக்குதல் பூமிக்கு கூரையில்லாதிருப்பின் மிக ஆபத்தாகவே அமையும். அவைகளின் வேகத்தை அறிவியலாளர் டேவிட் சன் கீழ்கண்டவாறு கணக்கிடுகிறார். விண்கற்களின் சாதாரண வேகம் (Normal Speed) வினாடிக்கு 26 மைல்கள். பூமி சூரியனைச் சுற்றும் வேகம் வினாடிக்கு 18 மைல்கள்.

எனவே பூமியும் விண்கற்களும் எதிர் எதிராக சந்தித்தால் விண்கல் மோதலின் தாக்கம் (26+18) 44 ஙூ மைல் / வினாடியாகும். அதே நேரத்தில் அவை ஒரே திசையில் ஒன்றை ஒன்று முந்தும் (Over Take) போது விண்கல் மோதலின் தாக்கம் (26-18) 7 மைல் /வினாடியாகும். (பக்கம் : 243, அட்ரானமி ஃபார் எவரி மேன்)

விண்வெளிக் கப்பல்களையும் துளைத்துச் செல்லும் விண்கற்கள்

விண்கற்களின் இந்த அமிதமான வேகம் உயிரினங் களுக்கு மட்டுமன்றி விண்ணில் பயணம் செய்யும் விண் கலங்களுக்கும் மிக ஆபத்தானதாகும். ஒரு விண்கல் ஒரு அங்குலத்தின் நாற்பதில் ஒருபங்கு பருமன் மட்டுமே இருந்த போதிலும் அது வினாடிக்கு40 மைல் வேகத்தைப் பெற்று விட்டால் ஒரு அங்குலம் பருமன் கொண்ட இரும்புத் தகட்டை கூட துளைத்து விடும் ஆற்றல் பெற்றதாக அது மாறிவிடும். அப்படிப் பார்க்கும்போது, விண்வெளியில் பயணம் செய்யும் நமது விண்வெளிக் கப்பல்கள் ஏன் இதனால் பாதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி இயல்பானதே. இத்துறையில் ஆய்வுகள் நடத்திய னுச. வில்கின் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

“…. எந்த நேரத்திலும் நிகழும் வாய்ப்புள்ள விண்கல் தாக்குதல் ஆபத்தானவையாகும். நமது பயணத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் – விண்கற் களுக்கு எதிரான திசை மாற்றுத் தகடுகள் (Deflection Plates) – தேவையாகும். அவற்றுள் ஒன்று கப்பலைத் தாக்கதாம் செய்தது என்றால் அது நேராகக் கப்பலுக்குள் சென்று விடும். ஏனெனில் விண்கற்கள் பூமியைவிட அதிகமான வேகத்தில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிக நுண்ணிய கிரகங் களாகும்.

(பக்கம் 92,93, அட்ரானமி ஃபார் எவரி மென்)

உயிரின வாழ்விற்கு

ஆகாயக் கூரையின் அவசியம்

இப்படி விண்வெளிக் கப்பல்களையே துளைக்கும் ஆற்றல் இந்த மணற்துளி போன்ற நுண்ணிய கிரகங்களுக்கு (Minute Planets-இவை சூரியனைச் சுற்றி வருகின்ற காரணத் தாலேயே இவைகளுக்கு கிரகங்கள் எனும் பெயர் கூறப்படுகிறது.) இருக்குமாயின் புவிவாழ் உயிரினங்களின் உடலைத் துளைப்பது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை என்பது தர்க்கத்திற்கு இடமில்லாத உண்மையாகும்.

இப்போது நமது வானிலை இயல் (Meterororlogy) மற்றும் விண்வெளிப் பயணவியல்(Aeronanatics) போன்ற துறை களில் ஆய்வுகள் நடத்தும் விஞ்ஞானிகள் பொய் சொல்ல வில்லை என உங்களால் ஏற்க முடிந்தால் இவ்வளவு ஆபத்தான உலோகத் தகட்டையே துளைக்கும் ஆற்றல் பெற்ற 10 கோடி விண்கற்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது வீழ்ந்து கொண்டிருந்தால் இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி எந்த ஒரு உயிரினமும் வாழ்தல் சாத்தியமா? 

உலோகத்தைவிட ஆற்றல் வாய்ந்த உடலுள்ள உயிரினம் ஏதேனும் இவ்வுலகில் உண்டா? ஆயினும் இந்த பூமியில் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொல்லையின்றி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது எப்படி சாத்தியமாகிறது?என்பதை சிந்தித்துப் பார்க்க வேடும். இதிலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் விண்கற் களுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு கூரையைப் போன்று செயல்படும் ஒரு பொருள் இருக்கிறது என்பது மிகத் தெளிவான செய்தியாகும்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்தித்தாளைப் புரட்டும் போதோ அல்லது வானொலி மற்றும் தொலைக்கட்சி செய்திகளின் வாயிலாகவோ பலவகையான விபத்துகளை பற்றிய செய்திளையும் அந்த விபத்துகளில் பலபேர் மரண மடையும் செய்தியையும் கேள்விப்படுகிறோம். ஆனால் விண்கற்கள் விழுந்து மக்கள் பலியாகும் செய்திகளை நாம் எப்போதேனும் கேள்விப்பட்டதுண்டா? பூமிக்கு ஒரு கூரை இருக்கிறது என்று கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை இது நிரூபிக்கவில்லையா?

வெவ்வேறு திசையிலிருந்துவெவ்வேறு விண்கற்கள்

விண்ணிலிருந்து பூமியின் மீது விழும் விண்கற்களில் முன் கூறப்பட்ட விண்கற்களைவிட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமான விண்கற்கள் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலிருந்து பூமியின் மீது வந்து விழுகின்றன. அவை களையும் கணக்கிலெடுக்கும்போது அறிவியலாளர் டேவிட்சன் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்குள் பூமியின் மீது 8000 தச இலட்சம் (8000 ஆடைடடி = 800 கோடி) விண்கற்கள் வீழ்வதாகக் கணக்கிட்டுள்ளார்.

(பக்கம் : 241, அட்ரானமி ஃபார் எவரி மென்)

மேற்கண்ட புள்ளி விபரத்தில் கூறப்பட்டபடி ஒவ்வொரு நாளும் 800 கோடி விண்கற்கள் பூமியில் வீழ்வதாகவும் அவற்றுள் ஒரே ஒரு சதவீதம் மட்டும் மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தாக்குவதாகவும் வைத்துக் கொண்டால் இப்போது இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொத்த மனிதர்களும் அழிவதற்கு ஒரு சில மாதங்களே போதுமான தாகும்.

ஆயினும் இந்த விண்கற்களால் நாம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு நாளும் இந்த பூமியின் மீது இவ்வளவு பெருவாரியான விண்கற்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தி திருக்குர்ஆன் கூறியது போன்று பூமிக்கு ஒரு கூரை இருக்கிறது என்பதும் அந்தக் கூரை விண்கற்களால் நிகழக் கூடிய ஆபத்தைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மையென நிரூபிக்கிறதன்றோ?

விண்கற்களின் பரிமாணங்கள்

பூமிக்கு ஒரு கூரை இல்லாதிருந்தால் விண்கற்களின் தாக்குதல் உயிரினங்களுக்கு மட்டுமன்றி பூமியின் மேற் பரப்பையே தகர்க்கும் அளவிற்கு ஆபத்தானதாகும். ஏனெனில் விண்கற்களில் பெரும்பாலானவை மணற்துளியி லிருந்து சிறு கூழாங்கற்கள் வரையிலானவையாக இருந்த போதிலும் அவற்றுள் சில ஆயிரக்கணக்கான கிலோ கிராம் எடை கொண்டவையாகும். இத்துறையில் ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகள் “சராசரியாக அவை சில மணற்துளி அளவே இருந்த போதிலும் அவற்றுள் டன் கணக்கில் எடைகொண்ட ஏராளமான விண் கற்களும் உண்டு (பக்கம் 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்) எனக் கூறுகிறார்கள்.

இந்த இடத்தில் சில வருடங்களுக்கு முன் (1994) நமது வியாழன் கோளில் “ஷு மேகர் லெவி (Shoe Maker Levi) எனும் பிரமாண்டமான ஒரு விண்கல் 21 துண்டுகளாக சிதறுண்டு மோதியதை நாம் செய்தித் தாள்களிலும் ஏனைய ஊடகங் களின் வாயிலாகவும் அறிந்தோம். இதன் விளைவாக பூமியின் விட்டத்தை ஒத்த குழி அங்கு தோன்றியதையும்,இன்னபிற பாதிப்புகள் அங்கு ஏறபட்டதையும் செய்திகள் வாயிலாக அறிந்தோம். நமது பூமியிலும் நூற்றுக்கணக்கான கோடி வருடங்களுக்கு முன் இப்படிப்பட்ட பெரும் விண்கற்கள் அடிக்கடி வீழ்ந்து கொண்டிருந்ததாகவும் பூமியின் கூரை அந்த வீழ்ச்சியின் தாக்கத்தை பெருவாரியாகக் குறைத்து பூமியின் மேற்பரப்பு சிதைவடையாமல் காப்பாற்றியதாகவும் அறிவிய லாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இப்படிப்பட்ட பெரிய அளவிலான விண்கல் தாக்குதல் ஒன்று அண்மை காலத்தில் நடைபெற்றதால் அதன் அடையாளம் மறைந்து விடாமல் இப்போதும் தெளிவாகக் காட்சி அளிக்கிறது. கீழ்காணும் வரிகள் அரிசோனாவில் நடைபெற்ற விண்கல் தாக்குதல் பற்றிய அறிவியலாளர் டேவிட்சன் அவர்களின் கூற்றாகும்.

அரிசோனாவில் விண்கல் தாக்குதல்

“அரிசோனாவிலுள்ள கானன்டயபோலாவிற்கருகிலுள்ள புகழ்பெற்ற குழி ஒருபெரிய விண்கல்லால் உருவாக்கப்பட்ட தாகும். இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடை பெற்றதால் இதற்கான பதிவேடுகள் ஏதும் இல்லை. இந்தக் குழி 570அடி ஆழமும், 4200 அடி விட்டமும் கொண்டதாகும். இந்தக் குழியின் ஆறு மைல் சுற்றளவிலிருந்து ஒவ்வொன்றும் பல டன்கள் எடைகொண்ட விண்கல் (இரும்பைப் பிரதானமாகக் கொண்டது) துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பிரதான எடைப்பகுதி பூமிக்குள் புதைந்து போனது. இந்த விண்கல் தாக்குதலின் போது அகழப்பட்ட குழியிலிருந்து வீசி எறியப்பட்ட இருபது கனகஜ (20 ஊரஉ லுயசன) மண்ணிலிருந்து சமீபத்தில் 67 உலோக விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஙூ பவுண்டு எடை கொண்டவையாகும். அந்த குழியின் ஓரங்களில் சிடார் மரங்கள் (Cedar Trees) வளர்கின்றன.

இம்மரங்கள் இங்கு வளர்வதற்கு முன்பே குழி அங்கு தோன்றியுள்ளது. மரங் களின் வயது 700 வருடங்களாக மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. அக்குழியின் சுற்றுப்புறத்திலுள்ள பாறைகளின் காலமாற்றச் சிதைவை (Weathering) மதிப்பீடு செய்து அக்குழி தோன்றிய அதிகபட்சக் காலம் நிர்ணயிக்கப்பட்டது. அது 5000வருடங்களாகும். இவ்விரு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எல்லைக்குட்பட்ட காலத்திற்கிடையில் எப்போது வேண்டுமாயினும் அந்த விண்கல் வீழ்ச்சி நடைபெற்றிருக்கலாம்.

(பக்கம் : 252-253, அட்ரானமி ஃபார் எவரி மென்)

அறிவியலாளர் டேவிட்சனின் மேற்கண்ட மேற்கோளி லிருந்து பூமிக்கு கூரை இருக்கின்ற நிலையிலேயே அரிசோனாவில் விழுந்த விண்கல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுத்தியது எனில் பூமிக்குக் கூரை இல்லாது இருந் திருப்பின் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடியுமல்லவா?

நாம் இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நமது பூமிக்கு கூரையாக அமைந்து இருப்பது பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் தங்கி நிற்கும் காற்று மண்டலமே என்பது பெரும்பாலான வாசகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள். இருபதாம் நூற்றாண்டிலேயே பூமிக்குக் கூரையாக அமைந்திருக்கும் காற்று மண்டலம் இல்லாதிருப்பின் பூமியின் நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது சந்திரனை ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளும் வாய்ப்பை நமது அறிவியல் உலகம் பெற்றுவிட்டது. அங்கு காணப்படும் பெரும்பெரும் குழிகள் கூட பெரும் பெரும் விண்கற்களால் அகழப்பட்ட வையாகும் என அறிவியலாளர்களில் பலர் கருதுகின்றனர்.

பூமிக்கு ஒரு கூரை இல்லாதிருந்தால்…….

சந்திரனில் துளிகூட காற்று இல்லாததால் நிலவிற்கு கூரையே இல்லை. எனவே விண்கற்களின் தாக்குதல் சந்திரனை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. “இயற்கையின் அணுகுண்டுகளைப் போன்று (Natural Atom Bombs) செயல்பட்ட பெரும் விண்கற்களால் தோன்றியவையே டைகோ, கோபர் நிக்க, அரிடார்ச்ச போன்ற பள்ளங்கள் என்று பல அறிவியலாளர்கள் நம்புவதாக அறிவியலாளர் வில்கின் கூறியுள்ளார் (பக்கம் : 30,அட்ரானமி ஃபார் எவரி மென்) மேலும் “மிக துல்லியமான கோணத்தில் நிலவின் மீது வந்து மோதிய ஒருபெரும் விண்கல்லே நிலவின் பெரும் பள்ளத்தாக்குகளில் ஒன்றாகிய ஆல்பைன் பள்ளத் தாக்கை தோற்றுவித்ததாக அறிவியலாளர்கள் நம்புவதாக நியூ ஹாண்ட் புக் ஆப் ஹெவன் (பக்கம் : 12) கூறுகிறது.

செவ்வாய்-வியாழனுக்கு இடையில்

விண்கற்களின் தோற்றம்

சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வரும் விண் கற்கள் அவ்வப்போது நடைபெறுகின்ற வால்நட்சத்திரங் களின் சிதைவிலிருந்து தோன்றுவதாக நம்பப்படுகிறது. ஆயினும் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் இருக்கும் விண்கற்கள் அங்கு முற்காலத்தில் ஒரு கோள் இருந்ததாகவும் அதன் சிதைவிலிருந்து குறுங்கோள்கள், விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. இத்துறையில் புகழ்பெற்று விளங்கிய அறிவியலாளர் ஊர்ட் (Dr. J.H. Oort) அவர்களின் விளக்கத்தை அறிவியலாளர் டேவிட்சன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் முற்காலங் களில் இருந்த ஒரு கோள் உடைந்து சிதறியதிலிருந்தே குறுங்கோள்களும், விண்கற்களும் வால்நட்சத்திரங்களும் தோன்றின (பக்கம் : 237, அட்ரானமி ஃபார் எவரி மென்)

கற்களை அழிக்கும் காற்று!

நாம் இதுவரை கூறியதிலிருந்து பூமிக்கு மேல் விண்கற்கள் வினியோகிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவை சரமாரியாக பூமியின் மீது 24மணி நேரமும் வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் ஆயினும் திருக்குர்ஆன் கூறியது போன்று காற்று மண்டலம் நமக்கு கூரையாக இருந்து இவைகளின் தாக்குதல்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டோம். இருப்பினும் காற்று எப்படி கற்களை தடுக்கும் என்ற ஐயம் மட்டுமே இப்போது சிலரிடம் எஞ்சி நிற்கும். எனவே அதைப் பற்றி ஹைடன் பிளானிட்டோரியம் விஞ்ஞானிகள் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

“ஒவ்வொரு நாளும் 100,000,000 – ஐவிட அதிகமாக பூமியின் மீது வீசப்படும் விண்கற்கள் இடைவிடாத அருவி போன்று காற்று மண்டலத்தில் பொழிகின்றன. நமது பூமியைச் சூழ்ந்துள்ள காற்றுப் போர்வை (Air Blanket) இல்லாதிருப்பின் அவை பூமியின் தரைபகுதியை இடை விடாத தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கும். விண்கற்கள் என அழைக்கப்படும் இவை காற்றில் ஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு உருகி அல்லது எரிந்து சாம்பலாக மாற்றப்பட்டு பூமியின் விரிவான பரிமாணத்தில் தங்களது பங்கைச் செலுத்தும் பொருட்டு காற்று மண்டலத்தில் அடையாளம் தெரியாதபடி தங்கிவிடுகிறது.

(பக்கம் – 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்)

ஹைடன் பிளானிட்டோரிய விஞ்ஞானிகள் தரும் இரத்தின சுருக்கமான இந்த விளக்கம் விண்கற்களை, பூமியை தாக்கவிடாமல் காற்று மண்டலம் எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கூறுகிறது. இந்த பூமியைச் சூழ்ந்துள்ள வானம் நமக்குக் கூரையாகச் செயல்படவில்லையாயின்…! இங்கு எந்த ஒரு உயிரின மேனும் வாழ்ந்திருக்க முடியுமா?

விண்கற்களைப் பற்றி இதுவரை நாம் அறிந்த அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றுமே பத்தொன்பதாம் நூற்றாண் டுக்கு முன் அறியப்பட்டிருக்கவில்லை. பூமியைச் சூழ்ந்திருக் கும் காற்று மண்டலம் வீட்டுக்கு கூரை போன்று ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்கப்பால் காற்று மண்டலம் இல்லையென்றும் ஒருவர் அறிந்திரா விட்டால் பூமிக்குக் கூரை உண்டு என அவரால் கூறி இருக்க முடியுமா?

மேலும் பூமியின் மீது கல் மழையும் பெய்து கொண்டி ருக்கிறது என்றும் காற்று மண்டலமே அதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்திராவிடில் பூமிக்குக் கூரையுண்டு என அவரால் கூறியிருக்க முடியுமா?

காற்று மண்டலத்தை பூமியின் கூரை என்று கூறியதி லிருந்து இந்த வீடான பூமி போகும் இடத்திற் கெல்லாம் அதன் மீது பொருத்தப்பட்டாற்போன்று இந்தக் காற்று மண்டலமும் போகிறது என்றும், பூமி சுழலும்போது காற்று மண்டலமும் அதனுடன் சுழல்கிறது என்றும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் பூமியின் மீது ஒரு கூரை இருக்கிறது என்று அவரால் எப்படிக் கூறியிருக்க முடியும்?

மிக நிச்சயமாக குறைந்தபட்சம் மேற்கண்ட அறிவியல் செய்திகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பூமிக்குக் கூரை உண்டு என்று ஒருவரால் கூற முடியாது. எனவே இது நிச்சயமாக இறைவேதமே என ஏற்பதில் இன்னும் என்ன தயக்கம்? ஒரு மானிடனுடைய அறிவிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் பிறப்பெடுக்க முடியுமா?

இரும்பைப் பொழியும் வானம்

இப்போது பூமியின் வளிமண்டலத்தில் ஒவ்வொரு நாளும் பெய்திறங்கும் கோடிக்கணக்கான விண்கற்களைப் பற்றி இந்த வான்மறைக் குர்ஆன் தன்னுடைய மற்றொரு அறிவியல் வசனத்தில் மிக அற்புதமாகக் கூறியுள்ளது. அது வருமாறு:

وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ

“இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமைகளும் உண்டு

(திருக்குர்ஆன்:57:25)

அறிவியலாளர்களை சொல்லொணா வியப்பிற்குள் ஆழ்த்தி விடக் கூடியதே மேற்கண்ட திருமறை அறிவிய லாகும். இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாமும்கூட இதுவரை ஆகாயத்திலிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறோமே தவிர இரும்பு பெய்வதைப் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயம் இரும்பு மழை பொழிவதைப் பற்றி தெரிந்திருந்தது. இரும்பு வானிலிருந்து எவ்வாறு இறக்கப்படுகிறது என்பதை நாம் மீண்டும் கூற வேண்டியதில்லை.

பூமியின் மீது இடை விடாமல் பெரும் எண்ணிக்கையில் பெய்திறங்கும் விண் கற்களின் பெரும் பகுதி இரும்பும்,சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ ஏழாம் நூற்றாண்டினருக்கு தெரிந்திராத போதிலும் இரும்பைப் பற்றி அவர்கள் மிக நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் என்பது கூறத் தேவையில்லை.

எனவே பிற்பாடு வரப்போகும் அறிவியல் யுகங்களிலும் உண்மை யைத் தேடும் அறிவியல் அன்பர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் எளிதாகத் திருக்குர்ஆனை இறைவேதம் என அடையாளம் காணும் பொருட்டு சொல்லப்பட்டிருக்கும் ஏராளமான அறிவியல் உண்மைகளில் ஒன்றாக இரும்பின் பெயரைப் பயன்படுத்தி விண்கல் பொழிவைப் பற்றிய அறிவியலையும் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்து விட்டது. இதை அற்புதம் என்று கூறாமல் வேறு என்னென்று இதைக் கூற முடியும்?

அந்த இரும்பில் அவன் இட்ட அடையாளம்

வானிலிருந்து இரும்பு இறக்கப்படும் செய்தியைப் பற்றி திருக்குர்ஆன் கூறியதைப் போன்றே பூமியிலும் ஒரு அற்புதம் நடந்தேறியது. திருக்குர்ஆன் கூறிய செய்தியைக் கேட்ப வர்கள் வானிலிருந்து இறங்குவதாகக் கூறப்படும் இரும்பு ஏதோ சில விஞ்ஞானிகளின் புதைபொருள் ஆராய்ச்சியில் (Archaeological Reseaech) மட்டுமே கிடைக்கக் கூடியதாக இது இருக்கலாம் என்றே எண்ணக் கூடும். ஆனால் நடந்ததோ வேறு விதமாக!

இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு தாதுப் பொருள் என்பதும், தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமி உருவாகும்போது அதன் கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகிய இரும்பும் இருந்திருக்க வேண்டும். ஆயினும் பூமியில் இயல்பாக இருக்கும் இந்த இரும்பிலிருந்து விண்கற்களாக வரும் இரும்பை வேறுபடுத்திக் காட்டும் தடயம் ஒன்று அதில் இருந்தது. எல்லா உலோகங்களிலும் பொதுவாக வேறு உலோகங்கள் மிகக் குறைந்த அளவு கசடாகக் கலந்திருக்கும். இந்தக் கசடில்தாம் மேற்கூறிய அடையாளம் காணப்பட்டது.

நமது பண்டைகால முன்னோர்கள் பயன்படுத்தி வந்த விதவிதமான போர்க் கருவிகளைக் கண்ணுறும்போது அவை களின் வயதிலிருந்து அவைகளை உருவாக்கப் பயன் படுத்திய உலோகங்களை சோதித்து அறிய வேண்டும் என்ற எண்ணம் விஞ்ஞானிகளிடம் தோன்றுவது இயல்பே. எனவே அக்கருவிகளின் உலோகங்களைச் சோதித்தபோது பூமியில் இயல்பாக உள்ள இரும்பில் இல்லாத கசடுகளான கோபால்டு மற்றும் சிலிக்கன் ஆகியவை அக்கருவியிலுள்ள இரும்பில் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் பெரும் வியப்பிற் குள்ளாயினர்.

விண்கற்களிலிருந்து கிடைத்த இரும்பைப் பகுப்பாய்வு செய்தபோதே அப்போற்கருவிகள் விண்கற்களாக பூமியில் பெய்திறங்கிய இரும்பால் செய்யப்பட்டவையாகும் எனத் தெரிந்து கொண்டார்கள். எனவே மழையைப் போன்று விண்ணிலிருந்து இறக்கப் படுவதாக திருக்குர்ஆன் கூறிய இரும்பு வெறும் தொல் பொருள் ஆராய்ச்சியினர் கண் டெடுத்த பொருளாக மட்டுமின்றி, பண்டைகாலம் தொட்டே மனிதர்களின் பயன் பாட்டில் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. பூமியின் மீது சரமாரியாகப் பெய்திறங்கும் விண்கற்களைப் பற்றிய திருக்குர்ஆனின் அறிவியல் ஞானம் எவ்வளவு ஆழமானது என்பதை இது எடுத்துக் காட்டுகிறதன்றோ?

ஆயினும் சிலர் அப்போதும் மறுப்பர்

நாம் இந்த அத்தியாயத்தில் இதுவரை கூறிய விபரங்களி லிருந்து பூமியைச் சூழ்ந்துள்ள மிகமிகச் சொற்பமான ஆகாயப் பகுதி அண்டவெளியின் கற்பனைக்கெட்டாப் பெருவெளியி லிருந்து வேறுபட்டு பூமியில் விழுந்துகொண்டிருக்கும் கோடானுகோடிக்கணக்கான விண்கற்களை அழித்து பூமியில் மேற்பரப்பை காப்பாற்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இதன் காரணமாக அப்பகுதி பூமிக்குக் கூரையாகச் செயல்படுகிறது என்றும் இம்மியளவும் ஐயத்திற்கிடமின்றி தெரிந்து கொண்டோம்.

பூமிக்கு ஒரு கூரை உண்டு என்றும் அந்தக் கூரை இல்லையென்றால் விண்கற்களின் தாக்குதலால் உயிரினங்கள் இங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் எனும் இந்த அறிவியல் உண்மை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லேயே ஐயத்திற்கிடமின்றி அறியப்பட்டிருந்தது. இதைக் குறித்து அல்ஜன்னத் மாத இதழில் (12-93) ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தோம்.

அக்கட்டுரையில் வழக்கம்போல் பூமிக்கு ஒரு கூரையுண்டு எனும் அறிவியலைத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கு அது ஆதாரமாகும் எனும் திருக்குர்ஆனின் உரிமைக் கோரலை யும் (Claim)எழுப்பி இருந்தோம். அக்கட்டுரையை எழுதும் போதே பூமியின் கூரையைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் மற்றொரு செய்தியும் கவனத்தை ஈர்த்தது. அது வருமாறு:

21:32 وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ

வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

(திருக்குர்ஆன்:21:32.)

மேற்கண்ட வசனத்தின் முதல் வரியில் கூறப்பட்டிருப்பது மேலும் ஆழமான அறிவியலாகும். அது மற்றொரு தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் இரண்டாவது வரியில் கூறப்பட்டிருக்கும் செய்தியைக் கண்டபோது பூமியின் மீது வலுவாக கவசமிட்டு நிற்கும் அதன் கூரையின் சான்றுகளை இதற்குமேல் புறக்கணிக்கும் துணிவு யாருக்கு இருக்கக் கூடும் என யோசித்தோம்.

ஆனால் இதைக் கூறியது திருக் குர்ஆன் அன்றோ?திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை யன்றோ? எனவே நம்முடைய கட்டுரை வெளியான எட்டே மாதங்களில் பூமியின் கூரை என்ற அத்தாட்சிகளைப் புறக் கணித்து திருக்குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை உண்மையே என நிரூபிக்க இதோ நாங்கள் தயாராக வந்துள்ளோம் என ஆர்ப்பரித்துக்கொண்டு ஒருமாதம் இருமுறைத் தமிழ் பத்திரிகை தமிழகத்தில் குரலெழுப்பி நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தியது!

ஒரு விந்தை மிகு விமர்சனம்

அந்த பத்திரிகையில் பூமியின் மீது போர்த்தப்பட்டுள்ள கூரையின் சான்றுகளை புறக்கணிக்கப் புகுந்த கட்டுரை யாளர் எழுதிய மறுப்பின் பிரதான சாராம்சம், காற்று மண்டலத் தில் எரிக்கப்படும் விண்கற்கள் குண்டூசியின் கொண்டை அளவிற்கு பருமன் கொண்டவைகளே என்பதும் இவ்வளவு சின்னஞ்சிறிய விண்கற்களை காற்று மண்டலம் தடுக்கா விட்டாலும் அதனால் நமக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும் எனவே காற்றுமண்டலத்தை பூமியின் கூரை என்று குறிப் பிட்டிருப்பது திருக்குர்ஆனை இறைவேதம் என நிரூபிப்ப தற்காக செய்யப்பட்ட அறிவியல் மோசடியே என்பதாகும்.

எவ்வளவு வேடிக்கையான விமர்சனம் இது! இந்த அத்தியாயத்தை வாசித்த வாசகர்களால் உள்ளபடியே அறிவியல் மோசடி செய்பவர் யார் என்பதைக் கூடுதல் விளக்கமின்றித் தெரிந்து கொள்ள முடியும். காற்று மண்டலம் விண்கற்களைத் தடுக்காவிட்டாலும் அதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும், எனவே காற்று மண்டலம் பூமிக்குக் கூரையாகும் எனக் கூறுவது அறிவியல் மோசடி என இருபதாம் நுற்றாண்டின் இறுதியில்கூட அறிவியலின் மொத்த உரிமையாளர்களாய் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரால் கூசாமல் கூற முடிகிறது என்றால் இது எதைக் காட்டுகிறது?

``அதிலுள்ள சான்றுகளை அவர்கள் புறக்கணிக் கின்றனர் எனத் திருக்குர்ஆன் கூறிய வார்த்தை யின் நிறைவேற்றத்தைக் காட்டவே இப்படியும் சிலரால் இப்போதும் கூற முடிகிறதே அன்றி இது வேறு எதையும் காட்டுவதாக நமக்குத் தெரியவில்லை! எப்பாடுபட்டாவது திருக்குர்ஆன் ஒரு மானிடப் படைப்பே அன்றி இறைவேதம் இல்லை எனச் சாதிக்க வேண்டும் என்றெண்ணி, காற்றுமண்டலத்தில் எரிக்கப்படும் விண்கற்கள் குண்டூசியின் பருமன் அளவிற்கே பருமன் கொண்டவைகளாக இருப்பதால் காற்று மண்டலத்தின் உதவியின்றி அவை நம்மைத் தாக்கினாலும் அதனால் நமக்கு ஆபத்து ஒன்றுமில்லை எனக் கூறுவோர் அந்த நுண்மையான விண்கற்களில் ஒன்று ஒரு விண் கப்பலில் மோதினால் அந்த விண் கப்பலைத் துளைத்துச் சென்றுவிடும் என்பன போன்ற விபரங்களைக்கொண்ட அறிவியலாளர்கள் எழுதிய நூல்களைச் சிலராவது படித்துப் பார்த்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பது நன்று.

ஏனெனில் விண் கப்பல்களின் கட்டுமானப் பொருட்களாம் உலோகங்களைக் காட்டிலும் மானிடனின் தோல் மிகவும் வலிமை வாய்ந்தது எனும் பரிகாசத்திற்குரிய ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் துணிந்து சொல்வதற்கு ஒப்பான சொயலாகும் அது. மேலும் இதுபோன்ற பொய்களைக் கூறுவதன் வாயிலாக திருக்குர்ஆனைப் பொய்ப்பித்து,அதை ஒரு மானிடப் படைப்பாகக் காட்ட வேண்டும் என்ற அவர்களின் எண்ணத் திற்கு விரோதமாக அவர்கள் செய்யும் மோசடிகள் திருக் குர்ஆனை மேலும் மேலும் வார்த்தைக்கு வார்த்தை மெய்ப் பித்து, அதை இறைவேதம் என நிரூபிக்கவே பயன்படும் என்பதையும் கவனத்தில் கொள்வது நன்று.