29) இடைத் தரகரை வைத்து வியாபாரம் செய்யலாமா?
நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்Last Updated on December 3, 2023 by
29) இடைத் தரகரை வைத்து வியாபாரம் செய்யலாமா?
عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ»، قَالَ: فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: مَا قَوْلُهُ «لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ» قَالَ: لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!’ என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்’ என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.
கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.
நூல் : புகாரி-2158