33) கடவுள் பாவ அறிக்கையிடுவாரா?
நூல்கள்: இயேசு இறை மகனா?Last Updated on October 30, 2022 by
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். (மத்தேயு 3:6)
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யோவானிடம் மக்கள் ஞானஸ்நானம் பெற்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.
மேலும் ஞானஸ்நானம் பெறுபவர் தான் பாவம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டு பாவ அறிக்கையிட வேண்டும் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
இந்த யோவானிடம் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றதாக பைபிள் கூறுகிறது.
அப்பொழுது யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
(மத்தேயு 3:13)
எனவே ஞானஸ்நானம் பெறும் போது இயேசுவும் பாவ அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பதை இரண்டு வசனங்களிலிருந்தும் நாம் அறியலாம்.