Tamil Bayan Points

24) மார்க்கத்தில் வரம்பு மீறாதிருத்தல்

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

Last Updated on December 3, 2023 by

மார்க்கத்தில் வரம்பு மீறாதிருத்தல்

வணக்க வழிபாடுகளில் வரம்புமீறக்கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களுக்கு போதனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ مَا هَذَا الْحَبْلُ قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ

நபி (ஸல்) அவாகள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு  என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது (தங்கள் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி-1150