20) இயற்கைத் தேவை இல்லாதவன்
நூல்கள்: மனிதகுல வழிகாட்டிLast Updated on September 7, 2023 by
இயற்கைத் தேவை இல்லாதவன்
கடவுள் என்றால் அவனுக்கு சிறுநீர், மலம் கழித்தல் போன்ற இயற்கைத் தேவைகள் இருக்கக் கூடாது. கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற ஏசுவையும் மர்யம் என்ற மேரியையும் கடவுளாக வணங்குகின்றனர். அவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.
மர்யமின் மகன் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர்.
(திருக்குர்ஆன் : 5:75.)
உணவு உண்ணுபவர்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் மலம் ஜலம் கழித்தே ஆக வேண்டும்.
ஏசுவும் அவர்களது தாயாரும் மலம், ஜலம் கழிப்பவர்களாக இருந்தனர். அதனால் மலம், ஜலம் என்ற இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவர்கள் ஒரு போதும் கடவுளாக இருக்கமுடியாது என்று திருக்குர்ஆன் கடவுள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துச் சொல்கின்றது.