Tamil Bayan Points

14) பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல்.

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 13

பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல்.

அல்லாஹ்விற்கு தேவைகள் உண்டா?

அல்லாஹ் பசி, தாகம், உணவு, உறக்கம், மலம், ஜலம் கழித்தல் போன்ற அனைத்து தேவைகளை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.

 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ  الإخلاص

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!   அல்லாஹ் தேவைகளற்றவன் (அல்குர்ஆன் 102:1,2)

 

يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ  فاطر

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ் விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 35:15)

 

அல்லாஹ்விற்கு மறதி உண்டா?

அல்லாஹ் மறதி என்ற பலவீனத்தை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.

 

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا  مريم

உமது இறைவன் மறப்பவனாக இல்லை (அல்குர்ஆன் 19:64)

 

لَا يَضِلُّ رَبِّي وَلَا يَنْسَى طه

என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” (அல்குர்ஆன் 20:52)

 

அல்லாஹ்விற்கு பசி, தாகம் உண்டா?

அல்லாஹ் பசி, தாகம் போன்ற பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.

 

وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ الأنعام

அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” (அல்குர்ஆன் 6:14)

 

அல்லாஹ்விற்கு சிறு தூக்கமோ, ஆழந்த உறக்கமோ ஏற்படுமா?

தூக்கம் என்பது இறைத்தன்மைக்கு எதிரானதாகும். அல்லாஹ் இத்தகைய பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.

 

لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ البقرة

அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. (அல்குர்ஆன் 2:255)

அல்லாஹ்விற்கு பெற்றோர்கள் , மனைவி மக்கள் உண்டா?

அல்லாஹ்விற்கு பெற்றோர்கள், மனைவி , மக்கள் யாரும் கிடையாது. அல்லாஹ் இவற்றை ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.

 

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ الإخلاص

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை (அல்குர்ஆன் 112:3)

 

وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا الجن

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (அல்குர்ஆன் 72:3)

 

அல்லாஹ்விற்கு உதவியாளர்களோ, கூட்டாளிகளோ உண்டா?

 

அல்லாஹ்விற்கு உதவியாளர்களோ, கூட்டாளிகளோ யாரும் கிடையாது. அவன் தனித்தவன், இணையற்றவன். அவனுக்கு நிகராக யாருமில்லை.

 

وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ الإسراء

ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை”

(அல்குர்ஆன் 17:111)

 

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ  الإخلاص

அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)