Tamil Bayan Points

18) கடவுள் பாவியா?

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

இயேசு தம்மைச் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்திருக்கிறார்.

(மத்தேயு 26:38-45, மார்க்கு 14:36, லூக்கா 22:44)

ஆனாலும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

தேவனிடம் நல்லவர் செய்யக்கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் போதனை. (யோவான் 9:31)

இயேசுவின் கோரிக்கை இறைவனால் ஏற்கப்படாதது எதைக் காட்டுகிறது?

இயேசு பாவம் செய்பவராக இருந்திருக்கிறார்; நல்லவராக இருக்கவில்லை என்று இந்த வசனத்திலிருந்து விளங்கவில்லையா?