Tamil Bayan Points

நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on July 29, 2022 by Trichy Farook

நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது

வாழ்நாளை எப்படி செலவிட்டான்.
கற்றவகை களில் எதைச் செயல் படுத்தினான்.
செல்வத்தை எவ்வாறு திரட்டி எவ்வாறு செலவழித்தான்
உடலை எவ்வாறு பயன்படுத்தினான்?
என்று நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை கியாமத்து நாளில் ஆதமுடைய மகனின் கால்கள் நகர முடியாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதீ-2416 (2341)

இந்த செய்தியில் ஹுசையின் பின் கைஸ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.