Tamil Bayan Points

27) மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்

اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர்

அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-3348 , 4741

மேட்டில் ஏறும் போது

உயரமான இடத்தில் ஏறும் போது

اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர்

அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-2993 , 2994

கீழே இறங்கும் போது

உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது

سُبْحَانَ اللهِ

ஸுப்(B]ஹானல்லாஹ்

அல்லாஹ் தூயவன்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-2993 , 2994