Tamil Bayan Points

பள்ளியில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 27, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ற தலைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கூறிய ஒழுங்குகளைப் பற்றி இந்த உரையில் நாம் காண்போம்..

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பதை அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவு படுத்தயுள்ளர்கள். அவற்றை காண்போம்.

 1 . பாங்கு சப்தம் கேட்ட பின்னர் பள்ளிவாசலை விட்டு வெளியேறக்கூடாது.

قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-

நாங்கள் அபூஹுரைரா (ரலி) யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம். அப்போது முஅத்தின் பாங்கு கூறினார். ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி), அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள். அவர் பள்ளியிலிருந்து வெளியேறி வெளியேறி விட்டார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) கூறினார்.

நூல்: முஸ்லிம்-1160 (1521) 

பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டால் பள்ளிவாசலில் கடமையான தொழுகையை நிறைவேற்றிய பிறகு தான் வெளியேற வேண்டும். பள்ளிவாசலில் பாங்கு சொன்ன பிறகு பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது என்று மேற்கண்ட செய்தி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

2 . பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது.

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ:
كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ فَجِئْتُهُ بِهِمَا قَالَ مَنْ أَنْتُمَا ، أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளிவாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) நின்றிருந்தார்கள். ‘நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!’ என்றார்கள்.

அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று உமர் (ரலி) கேட்க, ‘நாங்கள் தாயிஃப் வாசிகள்’ என்று அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வின் தூதருடைய பள்ளிவாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்’ என்று உமர் (ரலி) கூறினார்.

நூல் : புகாரி-470 

பள்ளிவாசலில் விளையாடுவதோ, தேவையற்ற செயலில் ஈடுபடுவதோ, தேவையற்ற பேச்சுக்களை பேசுவதோ நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 3 . விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்

أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِى الْمَسْجِدِ وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلاَةِ يَوْمَ الْجُمُعَةِ

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்குவதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார்.

நூல்: அபூதாவூத்-1079 (1081)

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதையும், தொலைந்துபோன பொருட்களை தேடுவதையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு தடை செய்து உள்ளார்கள். 

4 . பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا.

பள்ளியில் காரி உமிழ்வது பாவம். அதற்கு பரிகாரம் அதைப் புதைத்து விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி-415 , முஸ்லிம்-957 (1259) 

5 . பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொல்லை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.

 عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
« مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الثُّومِ – وَقَالَ مَرَّةً مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ

இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் – மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம். ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்-976 (1282)

6 . பள்ளிக்குள் நுழைந்தவுடன் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர வேண்டும்.

 أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ

உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸலமிய்யி (ரலி) கூறினார்கள்.

நூல் : புகாரி-444 

பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் இல்லாமாகும். அந்த இல்லத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்க வேண்டும் …  

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.