Tamil Bayan Points

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

முக்கிய குறிப்புகள்: நபிமார்கள் கேட்ட துஆக்கள்

Last Updated on June 19, 2021 by

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற

( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ )

 

“பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்”

(அல்குர்ஆன்:12: 64.)

அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட

( عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ )

 

“அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!”

(அல்குர்ஆன்:12: 67.)

சஞ்சலம் நீங்கிட

( إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ )

”என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்’.

(அல்குர்ஆன்:12: 86.)

மறுமையில் நல்லடியார்களுடன் எழுப்பப் பட

( فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ )

“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”

(அல்குர்ஆன்:12:101.)