Tamil Bayan Points

13) சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா

இதன் பொருள் :

தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.

ஆதாரம்: புகாரி-5458 (5858) 

அல்லது

اَلْحَمْدُ للهِ الَّذِيْ كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ர்

இதன் பொருள் :

உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.

ஆதாரம்: புகாரி-5459 

அல்லது

اَلْحَمْدُ للهِ

அல்ஹம்து லில்லாஹ்

என்று கூறலாம்.

ஆதாரம்: முஸ்லிம் 4915