Tamil Bayan Points

17) கோபம் ஏற்படும் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

கோபம் ஏற்படும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் :

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி-3282 

அல்லது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

என்று கூறலாம்.

ஆதாரம்: புகாரி-6115

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-3276 

கழுதை கணைக்கும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-3303 

கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-6995